ETV Bharat / state

யார் இந்த திரிபாதி ஐபிஎஸ்? சுவாரஸ்யமான தகவல்கள்!

சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைவராக ஜே.கே. திரிபாதி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

author img

By

Published : Jun 29, 2019, 11:26 AM IST

tripathi

ஒடிசா மாநிலத்தில் பிறந்த ஜே.கே. திரிபாதி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் படிப்பில் பட்டம் பெற்றவர். 1985ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து இந்திய காவல் பணியில் சேர்ந்தார்.

தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ள இவர், டிஐஜி-ஆக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் சென்னை தெற்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்ட இவர், தமிழ்நாடு காவல் துறையின் நிர்வாகத்துறை ஐ.ஜி ஆகவும் பணிபுரிந்தார். பின்னர் தெற்கு மண்டல ஐ.ஜி, ஆயுதப்படை, குற்றம், பொருளாதாரக் குற்றம், காவல் தலைமையகம், அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக சேவையாற்றினார். மேலும், கூடுதல் டிஜிபி ஆக சிறைத்துறையில் பணியாற்றியுள்ள திரிபாதி, இரண்டு முறை சென்னை பெருநகர காவல் ஆணையராகவும், சட்டம் - ஒழுங்கு, அமலாக்கத்துறையில் கூடுதல் காவல்துறை இயக்குநராகவும் (ஏடிஜிபி) பணியாற்றியுள்ளார்.

டிஜிபி திரிபாதி
டிஜிபி திரிபாதி

இந்த நிலையில், தற்போது இவர் டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். திரிபாதி திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்தபோது, பொதுமக்கள் - காவல்துறைக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில், பீட் ஆஃபீசர் முறை, புகார் பெட்டித் திட்டம், சேரி தத்தெடுப்பு முறை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதேபோல், சிறைத்துறையில் இருந்தபோதும், மகாத்மா காந்தி சமூகக் கல்லூரியை அனைத்து சிறைகளிலும் நடைமுறைப்படுத்தினார்.

பெற்ற விருதுகள்:

தேசிய விருதுகள்:-

  • காவல்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்கான குடியரசுத் தலைவர் விருது - 2002
  • இந்திய அரசின் மால்கம் ஆதிசேஷையா சிறப்பு விருது - 2001
  • பிரதம மந்திரியின் பொது நிர்வாகத்திறன் விருது - 2008 - இந்த விருது பெற்ற முதல் காவல்துறை அலுவலர் திரிபாதி ஆவார்.
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கைகளால் விருது பெறும் ஜே.கே. திரிபாதி
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கைகளால் விருது பெறும் ஜே.கே. திரிபாதி

சர்வதேச விருதுகள்:-

  • சர்வதேச சமூகக் காவலர் விருது - கனடா நாட்டின் டொரண்டோவில் நடைபெற்ற 110 நாடுகள் பங்கேற்ற 108ஆவது சர்வதேச முதன்மை காவலர்கள் சங்கத்தின் நிறைவு விழாவில் இவ்விருது திரிபாதிக்கு வழங்கப்பட்டது - அக்டோபர் 31, 2001
  • ஸ்காட்லாந்தில் நடைபெற்ற விழாவில் காமன்வெல்த் சங்கத்தின் பொது நிர்வாகம், மேலாண்மைப் பிரிவு சார்பில் நிர்வாகத் திறனில் புதுமை படைத்ததற்கான தங்கப் பதக்கம் - செப்டம்பர் 11, 2002
  • "Friendly Neighbourhood Cops" என்னும் தலைப்பில் இந்திய அரசு தயாரித்த ஆவணப் படத்தில் இவரது பணியினை சிறப்பு செய்யும் விதமாக காட்சிகள் அமைத்து நாடு முழுவதும் அனுப்பப்பட்டது.
  • "Innovation for India Foundation" என்னும் அமைப்பு இவரது முயற்சிகளுக்காக 2006ஆம் ஆண்டு விருது வழங்கி கெளரவித்துள்ளது.
    ஜே.கே. திரிபாதி
    ஜே.கே. திரிபாதி

இப்படி பல்வேறு விருதுகளைப் பெற்று காவல்துறையில் திறம்படப் பணியாற்றி வரும் ஜே.கே. திரிபாதி, தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் பிறந்த ஜே.கே. திரிபாதி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் படிப்பில் பட்டம் பெற்றவர். 1985ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து இந்திய காவல் பணியில் சேர்ந்தார்.

தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ள இவர், டிஐஜி-ஆக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் சென்னை தெற்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்ட இவர், தமிழ்நாடு காவல் துறையின் நிர்வாகத்துறை ஐ.ஜி ஆகவும் பணிபுரிந்தார். பின்னர் தெற்கு மண்டல ஐ.ஜி, ஆயுதப்படை, குற்றம், பொருளாதாரக் குற்றம், காவல் தலைமையகம், அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக சேவையாற்றினார். மேலும், கூடுதல் டிஜிபி ஆக சிறைத்துறையில் பணியாற்றியுள்ள திரிபாதி, இரண்டு முறை சென்னை பெருநகர காவல் ஆணையராகவும், சட்டம் - ஒழுங்கு, அமலாக்கத்துறையில் கூடுதல் காவல்துறை இயக்குநராகவும் (ஏடிஜிபி) பணியாற்றியுள்ளார்.

டிஜிபி திரிபாதி
டிஜிபி திரிபாதி

இந்த நிலையில், தற்போது இவர் டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். திரிபாதி திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்தபோது, பொதுமக்கள் - காவல்துறைக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில், பீட் ஆஃபீசர் முறை, புகார் பெட்டித் திட்டம், சேரி தத்தெடுப்பு முறை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதேபோல், சிறைத்துறையில் இருந்தபோதும், மகாத்மா காந்தி சமூகக் கல்லூரியை அனைத்து சிறைகளிலும் நடைமுறைப்படுத்தினார்.

பெற்ற விருதுகள்:

தேசிய விருதுகள்:-

  • காவல்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்கான குடியரசுத் தலைவர் விருது - 2002
  • இந்திய அரசின் மால்கம் ஆதிசேஷையா சிறப்பு விருது - 2001
  • பிரதம மந்திரியின் பொது நிர்வாகத்திறன் விருது - 2008 - இந்த விருது பெற்ற முதல் காவல்துறை அலுவலர் திரிபாதி ஆவார்.
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கைகளால் விருது பெறும் ஜே.கே. திரிபாதி
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கைகளால் விருது பெறும் ஜே.கே. திரிபாதி

சர்வதேச விருதுகள்:-

  • சர்வதேச சமூகக் காவலர் விருது - கனடா நாட்டின் டொரண்டோவில் நடைபெற்ற 110 நாடுகள் பங்கேற்ற 108ஆவது சர்வதேச முதன்மை காவலர்கள் சங்கத்தின் நிறைவு விழாவில் இவ்விருது திரிபாதிக்கு வழங்கப்பட்டது - அக்டோபர் 31, 2001
  • ஸ்காட்லாந்தில் நடைபெற்ற விழாவில் காமன்வெல்த் சங்கத்தின் பொது நிர்வாகம், மேலாண்மைப் பிரிவு சார்பில் நிர்வாகத் திறனில் புதுமை படைத்ததற்கான தங்கப் பதக்கம் - செப்டம்பர் 11, 2002
  • "Friendly Neighbourhood Cops" என்னும் தலைப்பில் இந்திய அரசு தயாரித்த ஆவணப் படத்தில் இவரது பணியினை சிறப்பு செய்யும் விதமாக காட்சிகள் அமைத்து நாடு முழுவதும் அனுப்பப்பட்டது.
  • "Innovation for India Foundation" என்னும் அமைப்பு இவரது முயற்சிகளுக்காக 2006ஆம் ஆண்டு விருது வழங்கி கெளரவித்துள்ளது.
    ஜே.கே. திரிபாதி
    ஜே.கே. திரிபாதி

இப்படி பல்வேறு விருதுகளைப் பெற்று காவல்துறையில் திறம்படப் பணியாற்றி வரும் ஜே.கே. திரிபாதி, தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.