ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய வசதி - புதிய அறிவிப்புகள்

author img

By

Published : Apr 1, 2023, 5:23 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய வசதி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில முழுவதும் உள்ள அரசு அலுவலங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு
மாநில முழுவதும் உள்ள அரசு அலுவலங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்க ரூ.184 கோடி முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புகள் பின்வருமாறு.

*சோழிங்கநல்லூர் எல்கோசெஸ்- இல் உலகத்தரம் வாய்ந்த பசுமைப் பூங்கா ரூ 20 கோடி செலவினத்தில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

* எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், பசுமை தகவல் தொழில்நுட்ப பூங்காக்களாக சர்வதேச தரத்தில் மாற்ற ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* அசைவூட்டப் படம், காட்சி வெளிப்பாடு, வேடிக்கையான விளையாட்டு மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிடும்.

* இடைமுக பயன்பாட்டு நிரலி நுழைவாயில் மூலம் பொது மக்களுக்கு அரசின் சேவைகளை உயர்ந்த தரத்துடன் விரைவாக வழங்க வழிவகை செய்யப்படும்.

* தமிழ்நாடு நலத்திட்ட பயனாளிகளுக்கான நேரடி பயன் பரிமாற்ற தளம் உருவாக்கப்படும்.

* தமிழ்நாடு இணையவழி அரசு சேவைகளுக்கான ஒற்றை நுழைவுத்தளம் ரூபாய் 11 கோடி செலவில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையும் வருவாய் பங்கிட்டிலியிருந்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

* தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு உருவாக்கப்படும்.

* 100 புதிய சேவைகளை இ-சேவை மற்றும் மக்கள் சேவை தளத்தில் ரூபாய் 120 லட்சம் செலவினத்தில் வழங்கப்படும்.

* மாநில முழுவதும் உள்ள அரசு அலுவலங்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்க ரூபாய் 184 கோடி முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

* மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில், நம்பகமான அதிவேக இணைய சேவைகளை ரூபாய் 100 கோடி செலவினத்தில், அரசு பொது சந்தை நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

* தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.

* ஆசிரியர்களுக்கான பயிற்சி அளிக்கும் நோக்கில் துறைகளுக்கான சீர்மிகு மையம், ரூபாய் 10 கோடி செலவினத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் சொந்த நிதியிலிருந்து இந்த மையம் அமைக்கப்படும்.

* இணைய பாதுகாப்பு 2.0 மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளை உள்ளடக்கிய வகையில் இக்கொள்கை புதுப்பிக்கப்படும்.

இதையும் படிங்க: குப்பைகளில் இருந்து புதிய முறையில் வருமானம்.. தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அசத்தல்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்க ரூ.184 கோடி முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புகள் பின்வருமாறு.

*சோழிங்கநல்லூர் எல்கோசெஸ்- இல் உலகத்தரம் வாய்ந்த பசுமைப் பூங்கா ரூ 20 கோடி செலவினத்தில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

* எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், பசுமை தகவல் தொழில்நுட்ப பூங்காக்களாக சர்வதேச தரத்தில் மாற்ற ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* அசைவூட்டப் படம், காட்சி வெளிப்பாடு, வேடிக்கையான விளையாட்டு மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிடும்.

* இடைமுக பயன்பாட்டு நிரலி நுழைவாயில் மூலம் பொது மக்களுக்கு அரசின் சேவைகளை உயர்ந்த தரத்துடன் விரைவாக வழங்க வழிவகை செய்யப்படும்.

* தமிழ்நாடு நலத்திட்ட பயனாளிகளுக்கான நேரடி பயன் பரிமாற்ற தளம் உருவாக்கப்படும்.

* தமிழ்நாடு இணையவழி அரசு சேவைகளுக்கான ஒற்றை நுழைவுத்தளம் ரூபாய் 11 கோடி செலவில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையும் வருவாய் பங்கிட்டிலியிருந்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

* தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு உருவாக்கப்படும்.

* 100 புதிய சேவைகளை இ-சேவை மற்றும் மக்கள் சேவை தளத்தில் ரூபாய் 120 லட்சம் செலவினத்தில் வழங்கப்படும்.

* மாநில முழுவதும் உள்ள அரசு அலுவலங்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்க ரூபாய் 184 கோடி முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

* மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில், நம்பகமான அதிவேக இணைய சேவைகளை ரூபாய் 100 கோடி செலவினத்தில், அரசு பொது சந்தை நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

* தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.

* ஆசிரியர்களுக்கான பயிற்சி அளிக்கும் நோக்கில் துறைகளுக்கான சீர்மிகு மையம், ரூபாய் 10 கோடி செலவினத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் சொந்த நிதியிலிருந்து இந்த மையம் அமைக்கப்படும்.

* இணைய பாதுகாப்பு 2.0 மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளை உள்ளடக்கிய வகையில் இக்கொள்கை புதுப்பிக்கப்படும்.

இதையும் படிங்க: குப்பைகளில் இருந்து புதிய முறையில் வருமானம்.. தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.