இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்குத் தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி இரவு 11.50 மணி வரையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
இறுதி நாளான இன்று அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இருந்தபோதிலும் பலர் விண்ணப்பம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசியத் தேர்வு முகமை, நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதியை ஜனவரி 6ஆம் தேதி இரவு 11.50 மணி வரை நீட்டித்துள்ளது.
மேலும் 7ஆம் தேதி வரைக் கட்டணம் செலுத்தலாம் எனக் கூறியுள்ளது. மேலும், இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.
நீட் தேர்விற்கான நுழைவுச்சீட்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வானது மே மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இதையும் படிங்க: திருமாவளவன் கோலம் போட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு