ETV Bharat / state

நளினியின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனும் நளினியும் 30 நிமிடங்கள் வீடியோ கால் மூலம் பேசியதையடுத்து, நளினியின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Jun 30, 2020, 5:38 AM IST

highcourt
highcourt

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும், சிறை விதிகளின்படி 15 நாள்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும். ஆனால், கடந்த மூன்று மாதங்களாக நளினியும், முருகனும் சந்தித்துப் பேச சிறை அலுவலர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால், சிறையில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் முருகன் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்க வேண்டும் எனவும், நளினியும் முருகனும் சந்தித்துப் பேச அனுமதி வழங்கக் கோரியும் நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் ஆகியோரது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நளினி மற்றும் முருகன் வீடியோ கால் மூலமாக 30 நிமிடங்கள் பேசியதாகவும், அதைத்தொடர்ந்து முருகன் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டதாகவும் நீதிமன்றத்தில் சிறைத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினியின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும், சிறை விதிகளின்படி 15 நாள்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும். ஆனால், கடந்த மூன்று மாதங்களாக நளினியும், முருகனும் சந்தித்துப் பேச சிறை அலுவலர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால், சிறையில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் முருகன் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்க வேண்டும் எனவும், நளினியும் முருகனும் சந்தித்துப் பேச அனுமதி வழங்கக் கோரியும் நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் ஆகியோரது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நளினி மற்றும் முருகன் வீடியோ கால் மூலமாக 30 நிமிடங்கள் பேசியதாகவும், அதைத்தொடர்ந்து முருகன் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டதாகவும் நீதிமன்றத்தில் சிறைத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினியின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.