மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக ஜூலை 25ஆம் தேதி முதல் பரோலில் வந்துள்ள நளினிக்கு மேலும் மூன்று வாரங்கள் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பரோல் நீட்டிப்பு வரும் 15ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், அக்டோபர் 15ஆம் தேதிவரை பரோல் நீட்டிப்பு வழங்கக்கோரி நளினி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நளினியின் பரோலை நீட்டிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி!
சென்னை: பரோலை நீட்டிக்க கோரிய நளினியின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
![நளினியின் பரோலை நீட்டிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4413788-thumbnail-3x2-nal.jpg?imwidth=3840)
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஆர்.எம். டீக்காராமன் அமர்வு, ஏற்கனவே நளினி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதால் ஒரு மாத பரோலும், பின்னர் மூன்று வார பரோல் நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய காரணங்களைக் கூறி பரோல் கேட்பதை ஏற்கமுடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பில், வழக்கை திரும்பப் பெறுவதாக கூறியதால், வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக ஜூலை 25ஆம் தேதி முதல் பரோலில் வந்துள்ள நளினிக்கு மேலும் மூன்று வாரங்கள் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பரோல் நீட்டிப்பு வரும் 15ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், அக்டோபர் 15ஆம் தேதிவரை பரோல் நீட்டிப்பு வழங்கக்கோரி நளினி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஆர்.எம். டீக்காராமன் அமர்வு, ஏற்கனவே நளினி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதால் ஒரு மாத பரோலும், பின்னர் மூன்று வார பரோல் நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய காரணங்களைக் கூறி பரோல் கேட்பதை ஏற்கமுடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பில், வழக்கை திரும்பப் பெறுவதாக கூறியதால், வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக பரோல் வழங்க கோரி வழக்கு தொடர்ந்த நளினிக்கு, ஒரு மாதம் பரோல் வழங்கி கடந்த
ஜூலை 5ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி ஜூலை 25 முதல் பரோலில் உள்ள அவருக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரண்டாவது முறை வழங்கப்பட்ட பரோல் நீடிப்பு வரும் 15 ம் தேதி முடியவுள்ள நிலையில், அக்டோபர் 15 வரை மீண்டும் பரோல் நீட்டிப்பு வழங்க கோரி நளினி தரப்பில் புதிதாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்சினை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் சென்னை வந்துவிடுவார் என்பதாலும் பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மனுவில் நளினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு, ஏற்கனவே நளினி நேரில் ஆஜரானதால் 1 மாதமும் பின்னர் 3 வாரங்கள் என இரண்டு முறை பரோல் வழங்கப்பட்டுவிட்டது. இந்த முறை புதிய காரணங்களை கூறி பரோல் கேட்பதை ஏற்கமுடியாது. அதனால் வழக்கை தள்ளுபடி செய்ய போவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மனுதாரர் தரப்பில், வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Conclusion: