ETV Bharat / state

பாஜக பிரமுகருக்கு ஆதரவு தெரிவித்த சீமான்! - naam thamizhar seeman on irattai malai srinivasan

சென்னை: இரட்டைமலை சீனிவாசனின் நினைவு தினத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமான், தமிழன் குறித்து பொன். ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

seeman
author img

By

Published : Sep 18, 2019, 7:40 PM IST

இரட்டை மலை சீனிவாசனின் 74ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று சென்னை கிண்டி காந்தி மண்டபத்திலுள்ள அவரின் மணிமண்டபத்தில் இருக்கும் அவருடைய உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்கு போராடியவர்களை எங்கள் வழிகாட்டியாக எடுத்துக்கொள்வோம். ஆனால் சிங்காரவேலர், ஜீவானந்தம், நல்லக்கண்ணு, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் போன்றோர்களைத்தான் எங்கள் தலைவராக ஏற்றுக்கொள்வோம். சாதி ஒழிப்பு என்றாலே பெரியாரை பற்றித்தான் பேசுககின்றனர். அதற்கு முன் ஏன் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சாதி ஒழிப்பை வலியுறுத்தவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், "புரட்சியாளர் அம்பேத்கருக்கு அதிகமாகச் சிலை வைத்திருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். ஆனால் என் தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு இந்த ஒரு மணிமண்டபம்தான் உள்ளது. அதேபோல் அயோத்திதாச பண்டிதருக்கு எங்கு சிலை இருக்கிறது என்று பெரும்பாலோருக்கு தெரியாது. திட்டமிட்டு வேண்டுமென்றே தமிழரின் அடையாளம் மறைக்கப்படுகின்றது" என்று தெரிவித்தார்.

பாஜக பிரமுகருக்கு ஆதரவு தெரிவித்த சீமான்

தொடர்ந்து பேசிய அவர், "தமிழன் நன்றி மறந்தவன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது சரி என்றுதான் பார்க்கிறேன். எல்லோருக்கும் தேங்க்ஸ் என்றுதான் கூறுகிறார்கள்" என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே: தென்னிந்திய மக்களிடம் உங்கள் பாட்’ஷா’ பலிக்காது: அமித் 'ஷா'வுக்கு ரஜினி பஞ்ச்!

இரட்டை மலை சீனிவாசனின் 74ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று சென்னை கிண்டி காந்தி மண்டபத்திலுள்ள அவரின் மணிமண்டபத்தில் இருக்கும் அவருடைய உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்கு போராடியவர்களை எங்கள் வழிகாட்டியாக எடுத்துக்கொள்வோம். ஆனால் சிங்காரவேலர், ஜீவானந்தம், நல்லக்கண்ணு, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் போன்றோர்களைத்தான் எங்கள் தலைவராக ஏற்றுக்கொள்வோம். சாதி ஒழிப்பு என்றாலே பெரியாரை பற்றித்தான் பேசுககின்றனர். அதற்கு முன் ஏன் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சாதி ஒழிப்பை வலியுறுத்தவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், "புரட்சியாளர் அம்பேத்கருக்கு அதிகமாகச் சிலை வைத்திருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். ஆனால் என் தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு இந்த ஒரு மணிமண்டபம்தான் உள்ளது. அதேபோல் அயோத்திதாச பண்டிதருக்கு எங்கு சிலை இருக்கிறது என்று பெரும்பாலோருக்கு தெரியாது. திட்டமிட்டு வேண்டுமென்றே தமிழரின் அடையாளம் மறைக்கப்படுகின்றது" என்று தெரிவித்தார்.

பாஜக பிரமுகருக்கு ஆதரவு தெரிவித்த சீமான்

தொடர்ந்து பேசிய அவர், "தமிழன் நன்றி மறந்தவன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது சரி என்றுதான் பார்க்கிறேன். எல்லோருக்கும் தேங்க்ஸ் என்றுதான் கூறுகிறார்கள்" என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே: தென்னிந்திய மக்களிடம் உங்கள் பாட்’ஷா’ பலிக்காது: அமித் 'ஷா'வுக்கு ரஜினி பஞ்ச்!

Intro:Body:இரட்டைமலை சீனிவாசனின் 74 ஆம் ஆண்டு நினைவுதினமான இன்று சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரின் மணிமண்டபதில் அவருடைய திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது பேசிய அவர், “ அண்ணல் அம்பேதகருக்கு வழிக்காட்டியாக திகழ்ந்தவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். பிறப்பால் இயர்வு தாழ்வு என்ற வர்ணாசிர தர்மத்துக்கு எதிராக் போராடியவர். எந்தச் சொல் உன்னை பார்த்து இழி சொல்லாக கூறப்படுகிறதோ அதை எழுச்சி சொல்லாக மாற்றாதவரை உனக்கு விடுதலை இல்லை என்று போதித்த பெருந்தகை. அவருடை நினைவு நாளில் சாதி இல்லாத சமத்துவ சமுகத்தை நிலைநாட்ட உறுதியேற்போம். 
 
ஒடுக்கப்பட்ட சமுகத்தின் விடுதலைக்கு போராடிவர்களை எங்கள் வழிகாட்டியாக எடுத்துக்கொள்வோம். ஆனால் சிங்காரவேலர், ஜீவானந்தம், நல்லக்கண்ணு, தாத்ட்தா இரட்டைமலை சீனிவாசன் போன்றோர்களை தான் எங்கள் தலைவராக ஏற்றுக்கொள்வோம். சாதி ஒழிப்பு என்றாலே பெரியாரை பற்றி தான் பேசுகினர். அதற்கு முன் ஏன் தாத்தா இரட்டைமலை சீனிவாசனே சாதி ஒழிப்பை வலியுறுத்தவில்லையா. புரட்சியாளர் அம்பேதகருக்கு அதிகமாக சிலை வைத்திருக்கும் மாநிலம் தமிழகம் தான். ஆனால் என் தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு இந்த ஒரு மணிமண்டபம் தான் உள்ளது. அதேபோல் அயோத்திதாச பண்டிதருக்கு எங்கு சிலை இருக்கிறது என்று பெரும்பாலோருக்கு தெரியாது. திட்டமிட்டு வேண்டுமென்றே தமிழரின் அடையாளம் மறைக்கப்படுகின்றது. அதிலிருந்து மீண்டு எங்கள் அடையாளங்களை மறுகட்டமைப்பு செய்வோம்.  

தமிழ்த்தேசிய அரசியல் என்பதே சாதி ஒழிப்பு தான். தன் மதத்தை, சாதியை துறந்து வந்தால் தான் நான் தமிழன் என்று கூற முடியும். மதம் மாறக்கூடியது சாதி மாறிக்கொள்ள முடியாதது என்று பெரியார் கூறியிருக்கிறார். மத்தை ஒழிக்க வேண்டும் என்று அரசியல் செய்யும் திராவிட கட்சிகள் சாதி ஒழிய என்ன செய்தது. சாதி கட்சியோடு கூட்டணி வைத்துக்கொள்வது. அதன் வேறில் வெந்நீர் ஊற்றாமல் தண்ணீர் ஊற்றி உரம் போட்டது இவர்கள் தான். சாதியை பார்த்து தேர்தலில் போட்டியிட இடம் கொடுப்பது. ஆதித்தமிழ் குடியை பொதுத்தேர்தலில் நிறுத்தவதில்லையே. எங்கள் அண்ணன் ஆ.ராசா பெரம்பலூர் தொகுதியில் போட்டொயிஒட முடியவில்லை என்றால் வேற பொது தொகுஇதியில் நிறுத்தியிருக்க வேண்டியது தானே. எதற்காக நீலகிரிக்கு அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் எப்படி பொது வீதியில் நடக்கக்கூடாதோ அதேபோல் பொதுத்தொகுதி கேட்க கூடாது என்று ஐயா கருணாநிதியே கூறியிருக்கிறார். இவர்கள் தான் இந்த உண்ர்வை மேலோங்க செய்தது. ஆணவப்படுகொலைஒ நடந்தால் தமிழ்த்தேசிய அரசியல்வாதி எங்கே என்பார்கள். நல்லது நடந்தால் இதுதான் திராவிட நாடு என்பார்கள். இதெல்லாம் ஒரு கொடுமை.

தமிழன் நன்றி மறந்தவன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது சரி என்றுதான் பார்க்கிறேன். எல்லோருக்கும் தேங்க்ஸ் என்றுதான் கூறுகிறார்கள். இந்திய மொழியின் தொன்மையை தமிழ் மொழியிலிருந்து அறியலாம் என்று மோடி கூறியிருக்கிறார். ஆனல் அந்த பெருமைமிக்க மொழிக்கு நீங்கள் செய்தது என்ன. சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி என்பது உலகத்துக்கே தெரியும். ஒரு சின்ன நாடு சிங்கப்பூர் எங்கள் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கிறது. உலகின் மூத்தமொழி தமிழ். சிறிய நாடுகளில் எல்லாம் மூன்று அல்லது நான்கு மொழிகள் ஆட்சி மொழிகளாக உள்ளது. அப்படி இருக்கும்போது இந்தியா எவ்வளவு பெரிய ஒரு கட்டமைப்பு உள்ள நாடு இங்கு ஏன் 22 மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்ககூடாது. இந்தி தான் இருக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய கொடுமை. பெருமைமிக்க மொழி என்கிறீர்கள் ஆனால் பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் போது ஊளை ஈடுகிறீர்கள். இதுதான் தமிழுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையா. உறிய மதிப்பு வழங்கப்படவில்லை. அதற்கு தான் நாங்கள் போபப்படுகிறோம். அதற்காக தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று கூற முடியுமா.   

குட்கா போதைப்பொருள் என்றால் மது என்ன புனித நீரா. மதுவை தெருவுக்கு தெரு திறந்து வைத்துவிட்டு குட்கா பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பது பைத்தியக்காரத்தனம். ஹெல்மெட் போடவில்லை என்று வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் போடுவதில் காட்டும் தீவிரத்தை ஏன் போதைப் பொருள் தடுப்பதில் காட்டுவதில்லை. காவல்துறையை சேர்ந்தவர்களே அந்த வழக்கில் சிக்கியுள்ளார்கள். எல்லாத்தையும் ஒழிப்போம்.
அண்ணன் திருமாவளவன் தி.மு.க வுடன் கூட்டணியில் இருக்கிறார். அவர் நிகழ்ச்சியில் நான் பங்கேற்று பேசினால் அவருக்கு எவ்வளவு பெரிய நெருக்கடி வரும். அதனால் நாங்கள் அண்ணன் தம்பி புரிதலோடு விலகி நிற்கிறோம்” என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.