ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து பேரணி! - சென்னை விமான நிலையம் நோக்கி இஸ்லாமியர்கள் பேரணி

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், பல்லாவரத்திலிருந்து விமான நிலையம் வரை பேரணியில் ஈடுபட்டனர்.

பேரணியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
பேரணியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
author img

By

Published : Jan 9, 2020, 9:55 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும் உத்தரப் பிரதேசத்தில் நடந்த இஸ்லாமிய இனப்படுகொலையைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி நடத்துவதற்கு ஒன்று திரண்டனர்.

சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாகக் கூறி கையில் 500 அடி நீளம் கொண்ட தேசிய கொடியை ஏந்தியவாறும் பதாகைகளை ஏந்தியவாறும் பல்லாவரத்திலிருந்து பேரணியைத் தொடங்கினர்.

பேரணியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

சென்னை விமான நிலையம் நோக்கிச் சென்ற பேரணியை பல்லாவரம் பழைய சந்தை சாலையில் காவல் துறையினர் நிறுத்தினர். பின்னர் காவல் துறையினர் அனுமதித்த இடத்தில் மேடை அமைத்த இஸ்லாமியர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ம.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துல் சமது கூறுகையில்:

செய்தியாளர்களை சந்தித்த அப்துல் சமது

தமிழ்நாட்டில் தேசிய மக்கள் கணக்கெடுப்பை அமல்படுத்த மாட்டோம் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், மக்களை பிளவுப்படுத்தகூடிய CAA, NRC, NRP ஆகிய சட்டங்களை கைவிட வேண்டும் என மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும் உத்தரப் பிரதேசத்தில் நடந்த இஸ்லாமிய இனப்படுகொலையைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி நடத்துவதற்கு ஒன்று திரண்டனர்.

சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாகக் கூறி கையில் 500 அடி நீளம் கொண்ட தேசிய கொடியை ஏந்தியவாறும் பதாகைகளை ஏந்தியவாறும் பல்லாவரத்திலிருந்து பேரணியைத் தொடங்கினர்.

பேரணியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

சென்னை விமான நிலையம் நோக்கிச் சென்ற பேரணியை பல்லாவரம் பழைய சந்தை சாலையில் காவல் துறையினர் நிறுத்தினர். பின்னர் காவல் துறையினர் அனுமதித்த இடத்தில் மேடை அமைத்த இஸ்லாமியர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ம.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துல் சமது கூறுகையில்:

செய்தியாளர்களை சந்தித்த அப்துல் சமது

தமிழ்நாட்டில் தேசிய மக்கள் கணக்கெடுப்பை அமல்படுத்த மாட்டோம் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், மக்களை பிளவுப்படுத்தகூடிய CAA, NRC, NRP ஆகிய சட்டங்களை கைவிட வேண்டும் என மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

Intro:குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கையில் 500 அடி நீளம் கொண்ட தேசிய கொடியுடன் இஸ்லாமியர்கள் பல்லாவரத்திலிருந்து விமான நிலையத்தை நோக்கி நடந்து பேரணியில் ஈடுபட்டனர்Body:குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கையில் 500 அடி நீளம் கொண்ட தேசிய கொடியுடன் இஸ்லாமியர்கள் பல்லாவரத்திலிருந்து விமான நிலையத்தை நோக்கி நடந்து பேரணியில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், உ.பி-யில் இஸ்லாமிய இன படுகொலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சுமார் 2000த்திற்கும் மேற்பட்டோர் சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக கூறி கையில் 500 அடி நீளம் கொண்ட தேசிய கொடியை ஏந்தியவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் பல்லாவரத்திலிருந்து பேரணியை துவங்கினர்.

சென்னை விமான நிலையம் நோக்கி சென்ற பேரணியை பல்லாவரம் பழைய சந்தை சாலையில் போலீசார் நிறுத்தினர்.
பின்னர் போலீசார் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மேடை அமைத்த இஸ்லாமியர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழிப்பியும், குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். உடன் திமுக, விசிக உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்துல் சம்து கூறுகையில்

தமிழகத்தில் தேசிய மக்கள் கணகெடுப்பை அமல்படுத்த மாட்டோம் என்று சட்ட பேரவையில் தீர்மானம் நிறவேர்ற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மக்களை பிளவுப்படுத்த க்கூடிய caa,nrc,nrp ஆகிய சட்டங்களை கைவிட வேண்டும் என மத்திய அரசையும்,மாநில அரசையும் வலியுரித்தினர்

பேட்டி:அப்துல் சமது(ம.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.