சென்னை சத்ய மூர்த்தி பவனில் மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என விருப்ப மனு வழங்கியுள்ளேன். விருப்ப மனுவை ஏற்பது குறித்து முடிவு செய்ய வேண்டியது காங்கிரஸ் கட்சியின் மத்தியக் குழுவின் கடமை.
கட்சி உயிரோட்டத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக விருப்ப மனுவை விருப்பமானவர்களின் பெயரில் வழங்குவது இயல்புதான். திமுகவுடனான பேச்சுவார்த்தை குறித்து நான் கருத்து கூற முடியாது" என்று கூறினார்.