ETV Bharat / state

அலட்சியம்! ரூ. 6 கோடியை தாண்டிய அபராத தொகை

author img

By

Published : May 18, 2020, 9:13 PM IST

சென்னை: ஊரடங்கை மீறியதாக காவல்துறையினரால் வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ. 6 கோடியை தாண்டியது.

அலட்சியம்! ரூ. 6 கோடியை தாண்டிய அபராத தொகை
அலட்சியம்! ரூ. 6 கோடியை தாண்டிய அபராத தொகை

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்தரவை மீறிய இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கை மீறிய மக்கள்! தீவிரம் காட்டிய காவல்துறை!
ஊரடங்கை மீறிய மக்கள்! தீவிரம் காட்டிய காவல்துறை!

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து 55 நாள்களான நிலையில், காவல் துறை இதுவரை தடையை மீறியதாக 4 லட்சத்து 88 ஆயிரத்து 250 பேரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது. மேலும், 4 லட்சத்து 60 ஆயிரத்து 513 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அபராதமாக 6 கோடியே 5 லட்சத்து 39 ஆயிரத்து 454 ரூபாய் வசூலித்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்தரவை மீறிய இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கை மீறிய மக்கள்! தீவிரம் காட்டிய காவல்துறை!
ஊரடங்கை மீறிய மக்கள்! தீவிரம் காட்டிய காவல்துறை!

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து 55 நாள்களான நிலையில், காவல் துறை இதுவரை தடையை மீறியதாக 4 லட்சத்து 88 ஆயிரத்து 250 பேரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது. மேலும், 4 லட்சத்து 60 ஆயிரத்து 513 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அபராதமாக 6 கோடியே 5 லட்சத்து 39 ஆயிரத்து 454 ரூபாய் வசூலித்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.