ETV Bharat / state

பிரபல தனியார் பல்பொருள் அங்காடியில் லட்சக்கணக்கில் மோசடி செய்த ஊழியர்கள்

சென்னையின் பிரபல தனியார் பல் பொருள் அங்காடியில், ஐந்து லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த ஊழியர்களை அம்பத்தூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

author img

By

Published : Oct 17, 2021, 8:55 PM IST

மோசடி
மோசடி

சென்னை: பிரபல பல்பொருள் அங்காடியான கிரேஸ் நிறுவனம் சென்னையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிளைகளில் இயங்கி வருகிறது. இங்கு மேலாளராகப் பணிபுரிந்து வரும் ஜான் ஆண்டனி என்பவர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கிரேஸ் பல்பொருள் அங்காடியில் மேலாளராகப் பணிபுரிந்து வரும் பவுல் குமார், ஊழியர்கள் பிரகாஷ், மணி முத்துராஜ், அன்புமணி, யேசுதாஸ் ஆகியோர் கடந்த ஐந்து மாதங்களாக பொய்யான கணக்கைக் காட்டி சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

மூவர் கைது

இதனையடுத்து நிர்வாகத்தினரின் புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் பவுல் குமார், பிரகாஷ், மணி முத்துராஜ் ஆகிய மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள அன்புமணி,யேசுதாஸ் ஆகிய இருவரை அம்பத்தூர் காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்கள், அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கேரள நிலச்சரிவில் உயிரிழப்பு 12ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணிகள்

சென்னை: பிரபல பல்பொருள் அங்காடியான கிரேஸ் நிறுவனம் சென்னையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிளைகளில் இயங்கி வருகிறது. இங்கு மேலாளராகப் பணிபுரிந்து வரும் ஜான் ஆண்டனி என்பவர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கிரேஸ் பல்பொருள் அங்காடியில் மேலாளராகப் பணிபுரிந்து வரும் பவுல் குமார், ஊழியர்கள் பிரகாஷ், மணி முத்துராஜ், அன்புமணி, யேசுதாஸ் ஆகியோர் கடந்த ஐந்து மாதங்களாக பொய்யான கணக்கைக் காட்டி சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

மூவர் கைது

இதனையடுத்து நிர்வாகத்தினரின் புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் பவுல் குமார், பிரகாஷ், மணி முத்துராஜ் ஆகிய மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள அன்புமணி,யேசுதாஸ் ஆகிய இருவரை அம்பத்தூர் காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்கள், அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கேரள நிலச்சரிவில் உயிரிழப்பு 12ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.