ETV Bharat / state

சாத்தான்குளம் விவகாரம்: கைது நடவடிக்கை கண் துடைப்பாக இருக்கக்கூடாது - ஸ்டாலின்

author img

By

Published : Jul 2, 2020, 4:24 PM IST

சென்னை: சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கில், ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்கு கணக்குக் காட்டி, கண் துடைப்பாக மாற்றக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK stalin statement on Sathankulam arrest issue
MK stalin statement on Sathankulam arrest issue

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சி பலம், அதிகார பலம், காவல்துறை பலத்தைக் காண்பித்து கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற, கடந்த ஒருவாரமாக அதிமுக அரசு எடுத்த அனைத்து முயற்சிகளும் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளன.

ஜெயராஜ் குடும்பத்தின் வற்றாத கண்ணீர், தென்மாவட்ட மக்கள் வெகுண்டெழுந்து நடத்திய போராட்டம், நாடு முழுவதும் வணிகர் பெருமக்கள் ஒன்றுபட்டு நடத்திய கடையடைப்பு, உலகளாவிய மனித உரிமை ஆர்வலர்களின் முன்னெடுப்பு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தங்கள், நீதிமன்றம் அடுத்தடுத்து பிறப்பித்த அரிய உத்தரவுகள், ஊடகங்களின் காட்சிகள் என அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அதிமுக அரசு சுற்றி வளைக்கப்பட்டு, தப்பிக்க முடியாமல் சட்டப் பொறியில் சிக்கிக் கொண்டது. இறுதியாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரது கொலைகளுக்கும் காரணமான அனைவரது பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்கு கணக்குக் காட்டுவதாக இருக்கக் கூடாது. கண்துடைப்புக் கைதாக இது மாறிவிடக்கூடாது. நீதிமன்றமும் வழக்கின் தடம் மாற்றத்தை அனுமதிக்காது.

பென்னிக்ஸும் ஜெயராஜும் அடுத்தடுத்து மரணமடைந்த அடுத்த நாளே, முதலமைச்சர் விடுத்த அறிக்கையில் குற்றச் சம்பவத்தைத் திரையிட்டு மறைத்தார். பென்னிக்ஸ் மூச்சுத்திணறித்தான் இறந்தார் என்றும், ஜெயராஜ் உடல் நலமில்லாமல் இறந்தார் என்றும் அவராகவே தன்னிச்சையாக இறுதித் தீர்ப்பு எழுதினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் உத்தரவுப்படி விசாரணை நடத்தி வரும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனை, சாத்தான்குளம் காவலர்கள் மிரட்டினார்கள். மாஜிஸ்திரேட்டை சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுத்தார்கள். மாஜிஸ்திரேட் துணிச்சலாக இதுகுறித்து உயர் நீதிமன்ற பதிவாளருக்குப் புகார் கொடுத்தார். இந்த ஆட்சியில் மாஜிஸ்திரேட்டுக்கே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெட்டவெளிச்சமானது.

கண்ணால் பார்த்ததை வாக்குமூலமாகக் கொடுத்த தலைமைக் காவலர் ரேவதி மிரட்டப்பட்டுள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன; ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. உயர் காவல்துறை அலுவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், சாதாரண காவலர்களால் செய்திருக்க முடியாது என்பது அந்தப் பகுதி மக்களின் அழுத்தமான நம்பிக்கையாக உள்ளது.

வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் காப்பாற்ற அரசு முயற்சிக்கக் கூடாது. இரண்டு பேர் கொலைக்குக் காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 'பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை' சேர்ந்த சிலருக்கும் இதில் நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது; அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும்.

முதலமைச்சரின் கடமை இத்துடன் முடிந்துவிட்டதாக கருதாமல், கடமையும் பொறுப்பும் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என்பதை உணரவேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சி பலம், அதிகார பலம், காவல்துறை பலத்தைக் காண்பித்து கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற, கடந்த ஒருவாரமாக அதிமுக அரசு எடுத்த அனைத்து முயற்சிகளும் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளன.

ஜெயராஜ் குடும்பத்தின் வற்றாத கண்ணீர், தென்மாவட்ட மக்கள் வெகுண்டெழுந்து நடத்திய போராட்டம், நாடு முழுவதும் வணிகர் பெருமக்கள் ஒன்றுபட்டு நடத்திய கடையடைப்பு, உலகளாவிய மனித உரிமை ஆர்வலர்களின் முன்னெடுப்பு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தங்கள், நீதிமன்றம் அடுத்தடுத்து பிறப்பித்த அரிய உத்தரவுகள், ஊடகங்களின் காட்சிகள் என அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அதிமுக அரசு சுற்றி வளைக்கப்பட்டு, தப்பிக்க முடியாமல் சட்டப் பொறியில் சிக்கிக் கொண்டது. இறுதியாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரது கொலைகளுக்கும் காரணமான அனைவரது பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்கு கணக்குக் காட்டுவதாக இருக்கக் கூடாது. கண்துடைப்புக் கைதாக இது மாறிவிடக்கூடாது. நீதிமன்றமும் வழக்கின் தடம் மாற்றத்தை அனுமதிக்காது.

பென்னிக்ஸும் ஜெயராஜும் அடுத்தடுத்து மரணமடைந்த அடுத்த நாளே, முதலமைச்சர் விடுத்த அறிக்கையில் குற்றச் சம்பவத்தைத் திரையிட்டு மறைத்தார். பென்னிக்ஸ் மூச்சுத்திணறித்தான் இறந்தார் என்றும், ஜெயராஜ் உடல் நலமில்லாமல் இறந்தார் என்றும் அவராகவே தன்னிச்சையாக இறுதித் தீர்ப்பு எழுதினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் உத்தரவுப்படி விசாரணை நடத்தி வரும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனை, சாத்தான்குளம் காவலர்கள் மிரட்டினார்கள். மாஜிஸ்திரேட்டை சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுத்தார்கள். மாஜிஸ்திரேட் துணிச்சலாக இதுகுறித்து உயர் நீதிமன்ற பதிவாளருக்குப் புகார் கொடுத்தார். இந்த ஆட்சியில் மாஜிஸ்திரேட்டுக்கே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெட்டவெளிச்சமானது.

கண்ணால் பார்த்ததை வாக்குமூலமாகக் கொடுத்த தலைமைக் காவலர் ரேவதி மிரட்டப்பட்டுள்ளார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன; ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. உயர் காவல்துறை அலுவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், சாதாரண காவலர்களால் செய்திருக்க முடியாது என்பது அந்தப் பகுதி மக்களின் அழுத்தமான நம்பிக்கையாக உள்ளது.

வழக்கில் சம்பந்தப்பட்ட யாரையும் காப்பாற்ற அரசு முயற்சிக்கக் கூடாது. இரண்டு பேர் கொலைக்குக் காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 'பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை' சேர்ந்த சிலருக்கும் இதில் நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது; அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும்.

முதலமைச்சரின் கடமை இத்துடன் முடிந்துவிட்டதாக கருதாமல், கடமையும் பொறுப்பும் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது என்பதை உணரவேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.