ETV Bharat / state

மேயர் பணியை மக்கள் பணியாக மாற்றினேன்- மு.க. ஸ்டாலின்

author img

By

Published : Sep 7, 2021, 7:55 PM IST

வெளிநாட்டு சுற்றுலா செல்வதே மேயர்களின் பணி என்று இருந்ததை மக்கள் பணி செய்வதாக மாற்றியவன் நான் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

MK Stalin
MK Stalin

சென்னை : சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி 5 மண்டலங்களில் தூய்மைப்பணி மேற்கொள்வதற்கான புதிய மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் காம்பாக்டர் இயந்திரங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும் பெருந்தொற்று பணிக்காலத்தில் உயிரிழந்த 195 நபர்களின் வாரிசுதார்களுக்கான பணி நியமன ஆணையையும் முதலமைச்சர் வழங்கினார்.
சிங்காரச் சென்னை
சிங்காரச் சென்னை திட்ட நிதியின் கீழ் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக 36.52 கோடி மதிப்பில் 1684 மூன்று சக்கர பேட்டரி வாகனங்களும், 15 காம்பர் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனியே பிரித்துப் பெறும் வகையில் வாகனம்தோறும் 6 தொட்டிகள் அமைந்துள்ளன.

அந்த நாள் நியாபகம்..
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், “ரிப்பன் மாளிகையை பார்க்கும்போது எனக்கு 1990இன் காலகட்டம் நினைவிற்கு வருகிறது. 1996ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்டேன். அப்போதெல்லாம் மேயரென்றால் பெரிய அங்கி, சங்கிலி அணிந்திருப்பார்கள்.

மேயர் பணியை மக்கள் பணியாக மாற்றினேன்- மு.க. ஸ்டாலின்

வெளி மாநில, வெளி நாடு சுற்றுலா செல்வதுதான் மேயர்களின் வேலையாக இருந்தது. அதை மாற்றி மேயர் பணி என்பதை மக்கள் பணி செய்வதாக மாற்றினேன். இந்தச் சாலை வழியே பயணிக்கும்போதெல்லாம் ரிப்பன் மாளிகையை பார்த்தபடியே செல்வேன். நான் மேயராக பொறுப்பேற்ற அழைப்பிதழின் முன் அட்டையில் கருணிநிதிக்கு பொன்னாடை போர்த்திய படம் இருந்தது.

கருணாநிதி வாழ்த்து...

கடைசி பக்கத்தில் ரிப்பன் மாளிகையின் கட்டட படம் இருந்தது. அதைப் பார்த்து விட்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உன்னை அடக்கிவிடாமல் இவ்வளவு பெரிய கட்டடத்தில் உன்னை அமர வைத்துள்ளேன் என்று கருணாநிதி என்னிடம் கூறினார்.
1996ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் என்னை அமைச்சராக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். ஆனால் மேயராக்கப்பட்டேன். மக்கள் வாக்கை பெற்று பதவிக்கு வந்த முதல் மேயர் நான்.

திட்டம் தொடக்கம்
இங்கு கொடி அசைத்துவிட்டு செல்வோம் என்று வந்தேன். மேடை அமைத்து பேச வைத்துவிட்டனர். 300 மூன்று சக்கர வாகனங்களின் செயல்பாடு இன்று (செப்.7) தொடங்கி வைக்கப்படுகிறது.

சிங்கார சென்னை என்ற வாசகத்தை மேயராக இருந்தபோது முன்வைத்தேன். 3 நாடாளுமன்ற, 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இம்மாநகரில் உள்ளனர். நிதி நிலை அறிக்கையில் சென்னைக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மு.க. ஸ்டாலின் அறிவுரை

அவை மக்களுக்கு சென்று சேர , சென்னைக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.

கலந்துகொண்டவர்கள்
இந்நிகழ்வில் முதலமைச்சருடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன் , கலாநிதி வீராசாமி மற்றும் சென்னை மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் ரிப்பன் மாளிகை வளாகத்தில் மரக் கன்று ஒன்றை நடவு செய்தார்.

இதையும் படிங்க : இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு மணிமண்டபம்

சென்னை : சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி 5 மண்டலங்களில் தூய்மைப்பணி மேற்கொள்வதற்கான புதிய மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் காம்பாக்டர் இயந்திரங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும் பெருந்தொற்று பணிக்காலத்தில் உயிரிழந்த 195 நபர்களின் வாரிசுதார்களுக்கான பணி நியமன ஆணையையும் முதலமைச்சர் வழங்கினார்.
சிங்காரச் சென்னை
சிங்காரச் சென்னை திட்ட நிதியின் கீழ் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக 36.52 கோடி மதிப்பில் 1684 மூன்று சக்கர பேட்டரி வாகனங்களும், 15 காம்பர் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனியே பிரித்துப் பெறும் வகையில் வாகனம்தோறும் 6 தொட்டிகள் அமைந்துள்ளன.

அந்த நாள் நியாபகம்..
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், “ரிப்பன் மாளிகையை பார்க்கும்போது எனக்கு 1990இன் காலகட்டம் நினைவிற்கு வருகிறது. 1996ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்டேன். அப்போதெல்லாம் மேயரென்றால் பெரிய அங்கி, சங்கிலி அணிந்திருப்பார்கள்.

மேயர் பணியை மக்கள் பணியாக மாற்றினேன்- மு.க. ஸ்டாலின்

வெளி மாநில, வெளி நாடு சுற்றுலா செல்வதுதான் மேயர்களின் வேலையாக இருந்தது. அதை மாற்றி மேயர் பணி என்பதை மக்கள் பணி செய்வதாக மாற்றினேன். இந்தச் சாலை வழியே பயணிக்கும்போதெல்லாம் ரிப்பன் மாளிகையை பார்த்தபடியே செல்வேன். நான் மேயராக பொறுப்பேற்ற அழைப்பிதழின் முன் அட்டையில் கருணிநிதிக்கு பொன்னாடை போர்த்திய படம் இருந்தது.

கருணாநிதி வாழ்த்து...

கடைசி பக்கத்தில் ரிப்பன் மாளிகையின் கட்டட படம் இருந்தது. அதைப் பார்த்து விட்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உன்னை அடக்கிவிடாமல் இவ்வளவு பெரிய கட்டடத்தில் உன்னை அமர வைத்துள்ளேன் என்று கருணாநிதி என்னிடம் கூறினார்.
1996ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் என்னை அமைச்சராக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். ஆனால் மேயராக்கப்பட்டேன். மக்கள் வாக்கை பெற்று பதவிக்கு வந்த முதல் மேயர் நான்.

திட்டம் தொடக்கம்
இங்கு கொடி அசைத்துவிட்டு செல்வோம் என்று வந்தேன். மேடை அமைத்து பேச வைத்துவிட்டனர். 300 மூன்று சக்கர வாகனங்களின் செயல்பாடு இன்று (செப்.7) தொடங்கி வைக்கப்படுகிறது.

சிங்கார சென்னை என்ற வாசகத்தை மேயராக இருந்தபோது முன்வைத்தேன். 3 நாடாளுமன்ற, 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இம்மாநகரில் உள்ளனர். நிதி நிலை அறிக்கையில் சென்னைக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மு.க. ஸ்டாலின் அறிவுரை

அவை மக்களுக்கு சென்று சேர , சென்னைக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.

கலந்துகொண்டவர்கள்
இந்நிகழ்வில் முதலமைச்சருடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன் , கலாநிதி வீராசாமி மற்றும் சென்னை மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் ரிப்பன் மாளிகை வளாகத்தில் மரக் கன்று ஒன்றை நடவு செய்தார்.

இதையும் படிங்க : இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு மணிமண்டபம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.