ETV Bharat / state

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது - கே.என்.நேரு

author img

By

Published : Oct 21, 2021, 12:14 PM IST

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Nehru
Nehru

சென்னை கே.கே.நகர் - எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் சந்திப்பு சாலையில் அமைக்கப்பட்டு வரும் புதிய கழிவுநீர் வடிகால் குழாய் பணிகளை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.

அமைச்சர் ஆய்வு

இந்தக் குழாய்கள் சுமார் ரூ.2.20 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருந்த சிமெண்ட் குழாயில் அரிப்பு ஏற்பட்டதால் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. நெசப்பாக்கத்தில் ரூ.47 கோடி செலவில் 10 எம்.எல்.டி கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் 3ஆம் நிலை கழிவுநீர் மறுசுழற்சி நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு, “28 அடியில் 2005 ஆம் ஆண்டில் கழிவுநீர் செல்வதற்கு சிமெண்ட் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏரிகளில் ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது

கிராவிட்டி முறையில் நீர் செல்வதால் அங்கு அங்கு கேஷ் வெளியாகி ஓட்டை விழுகிறது. எனவே புதிய குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு மண் தன்மைக்கு ஏற்ப முழுமையாக இந்தப் பணிகள் முடிய ஒரு வருடம் ஆகும்.

Nehru
பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

இந்தப் பகுதியின் பெயர் கருணாநிதியின் பெயரில் உள்ளதால் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அதிகமாக உள்ளது. விரைவில் பணிகள் முடிவடையும். இப்பகுதியில் வரும் 57 எம்.எல்.டி கழிவு நீரை மறு சுழற்சி செய்து அருகில் உள்ள ஏரியில் கொண்டு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 10 எம்.எல்.டி தண்ணீர் சோதனை அடிப்படையில் மறுசுழற்சி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது. தற்போது சென்னையில் 140 எம்.எல்.டி கழிவு நீர் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது.

கழிவுநீரை மறு சுழற்சி செய்வதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தில் தரமான குழாய்கள்தான் பதிக்கப்படுகின்றன. மக்கள் பாதிக்காதவாறு பணிகள் நடைபெறுகின்றன. மழைநீர் தேங்கும் இடங்களை ஆராய்ந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறும்.

திமுக அரசு பொறுப்பேற்ற 5 மாதத்தில் சென்னை மாநகராட்சியில் இதுவரை 700 கீ.மீ சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதால்தான் கடந்த சில மாதங்களில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை" எனத் தெரிவித்தார் .

மழைக்காலத்தில் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை

இவரைத் தொடர்ந்து பேசிய சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார், "சென்னையில் 740 தெருக்களில் பழைய காலத்து கழிவு நீர் குழாய்கள் உள்ள தெருக்களை கண்டறிந்து மழை காலத்திற்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்திலும் 540 தெருக்கள் கண்டறிந்து முழுமையாக கழிவு நீர் குழாய்களை தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய கழிவுநீர் குழாய்களை மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரித்து மழைகாலத்தில் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

வார்டு வாரியாக குழுக்கள் அமைத்து பழைய கழிவுநீர் குழாய்கள் உள்ள தெருக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் (நோடல் ஆபிசர்) நியமிக்கப்பட்டு கூடுதலாக மழை நீர் தேக்கம் இருக்கின்றதா, அவ்வாறு ஏற்பட்டால் அதை நீக்க நடவடிக்கை உடனடியாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகர் ராஜா, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தோல்விக்கானக் காரணங்களைத் தேடுகின்ற அதிமுகவினர் - அமைச்சரின் குற்றச்சாட்டு

சென்னை கே.கே.நகர் - எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் சந்திப்பு சாலையில் அமைக்கப்பட்டு வரும் புதிய கழிவுநீர் வடிகால் குழாய் பணிகளை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.

அமைச்சர் ஆய்வு

இந்தக் குழாய்கள் சுமார் ரூ.2.20 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருந்த சிமெண்ட் குழாயில் அரிப்பு ஏற்பட்டதால் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. நெசப்பாக்கத்தில் ரூ.47 கோடி செலவில் 10 எம்.எல்.டி கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் 3ஆம் நிலை கழிவுநீர் மறுசுழற்சி நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு, “28 அடியில் 2005 ஆம் ஆண்டில் கழிவுநீர் செல்வதற்கு சிமெண்ட் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏரிகளில் ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது

கிராவிட்டி முறையில் நீர் செல்வதால் அங்கு அங்கு கேஷ் வெளியாகி ஓட்டை விழுகிறது. எனவே புதிய குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு மண் தன்மைக்கு ஏற்ப முழுமையாக இந்தப் பணிகள் முடிய ஒரு வருடம் ஆகும்.

Nehru
பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

இந்தப் பகுதியின் பெயர் கருணாநிதியின் பெயரில் உள்ளதால் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அதிகமாக உள்ளது. விரைவில் பணிகள் முடிவடையும். இப்பகுதியில் வரும் 57 எம்.எல்.டி கழிவு நீரை மறு சுழற்சி செய்து அருகில் உள்ள ஏரியில் கொண்டு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 10 எம்.எல்.டி தண்ணீர் சோதனை அடிப்படையில் மறுசுழற்சி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது. தற்போது சென்னையில் 140 எம்.எல்.டி கழிவு நீர் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது.

கழிவுநீரை மறு சுழற்சி செய்வதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தில் தரமான குழாய்கள்தான் பதிக்கப்படுகின்றன. மக்கள் பாதிக்காதவாறு பணிகள் நடைபெறுகின்றன. மழைநீர் தேங்கும் இடங்களை ஆராய்ந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறும்.

திமுக அரசு பொறுப்பேற்ற 5 மாதத்தில் சென்னை மாநகராட்சியில் இதுவரை 700 கீ.மீ சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதால்தான் கடந்த சில மாதங்களில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை" எனத் தெரிவித்தார் .

மழைக்காலத்தில் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை

இவரைத் தொடர்ந்து பேசிய சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார், "சென்னையில் 740 தெருக்களில் பழைய காலத்து கழிவு நீர் குழாய்கள் உள்ள தெருக்களை கண்டறிந்து மழை காலத்திற்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்திலும் 540 தெருக்கள் கண்டறிந்து முழுமையாக கழிவு நீர் குழாய்களை தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய கழிவுநீர் குழாய்களை மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரித்து மழைகாலத்தில் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

வார்டு வாரியாக குழுக்கள் அமைத்து பழைய கழிவுநீர் குழாய்கள் உள்ள தெருக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் (நோடல் ஆபிசர்) நியமிக்கப்பட்டு கூடுதலாக மழை நீர் தேக்கம் இருக்கின்றதா, அவ்வாறு ஏற்பட்டால் அதை நீக்க நடவடிக்கை உடனடியாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகர் ராஜா, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தோல்விக்கானக் காரணங்களைத் தேடுகின்ற அதிமுகவினர் - அமைச்சரின் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.