ETV Bharat / state

"நம் குடியிருப்பு நம் பொறுப்பு" என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

author img

By

Published : May 17, 2022, 11:36 AM IST

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அங்கு வசிக்கும் மக்களை ஒருங்கிணைத்து "நம் குடியிருப்பு நம் பொறுப்பு" என்ற திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

"minister-thamo-anbarasan-says-we-are-going-to-implement-our-house-is-our-responsibility-project நம் குடியிருப்பு நம் பொறுப்பு" என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
minister-thamo-anbarasan-says-we-are-going-to-implement-our-house-is-our-responsibility-project "நம் குடியிருப்பு நம் பொறுப்பு" என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை கோடம்பாக்கம் சுபேதார் கார்டனில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் பழுதடைந்துள்ளதால் அவற்றை இடித்து புதிதாக கட்ட உள்ளனர். அதுவரை அங்கு வசிக்கும் மக்கள் வேறு இடங்களில் வசிக்க உதவும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 24 ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

இதற்கான நிகழ்ச்சி சுபேதார் கார்டனில் நேற்று (மே.16) நடைபெற்றது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினர் மரு. எழிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், "இன்று 256 குடும்பங்களுக்குக் கருணைத் தொகையாக மொத்தம் 61 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு மாதத்தில் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டார்கள் என்றால், 18 மாதங்களில் வீடுகளைக் கட்டி முடித்து 19வது மாதத்தில் பயனாளிகளுக்கு மீண்டும் வீடுகளை வழங்கி விடுவோம்.

கடந்த ஆட்சியில் வாரிய குடியிருப்புகள் எங்குமே அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை. அதையெல்லாம் சரி செய்து வருகிறோம். 15 ஆண்டுகளுக்கு உட்பட்ட குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 170 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஏ.புரம் விவகாரத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு 3 பகுதிகளில் இடங்களைத் தேர்வு செய்து வழங்கி உள்ளோம்.

"நம் குடியிருப்பு நம் பொறுப்பு" என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ஆனால் அவர்கள் தங்களுக்கு ஒரே இடத்தில் வீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே முதலமைச்சர் சொன்னபடி சென்னைக்கு அருகில் ஒரே இடத்தில் வழங்க தயாராக உள்ளோம். அதேநேரம் அடுத்த வாரம் பிரதமர் பெரும்பாக்கத்தில் தொடங்கி வைக்கவுள்ள குடியிருப்பிலும் வீடுகள் வழங்க தயாராக உள்ளோம் என கூறினோம். அவர்கள் அனைவரிடமும் கலந்து பேசி முடிவைத் தெரிவிப்பதாகக் கூறி உள்ளனர்.

வாரிய குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் கழிவுநீர் அடைப்புகளை சரிசெய்ய இதுவரை கருவி இல்லை. வாரியம் சார்பில் புதிதாக கருவிகள் வாங்கி உள்ளோம். இனி கழிவுநீர் அடைப்பு பிரச்சனை ஏற்படாது. வாரிய குடியிருப்பு பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள "நம் குடியிருப்பு நம் பொறுப்பு" என்ற திட்டத்தை உருவாக்கி அங்கு வசிக்கும் மக்களில் இருந்து நிர்வாகிகளைத் தேர்வு செய்து நியமிக்க உள்ளோம்.

3 மாதத்திற்கான தேவையான பராமரிப்பு பணத்தை வாரியம் சார்பில் வழங்குவோம். ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் ஆகிறது என்றால் வாரியம் சார்பில் 50% தொகை வழங்கப்படும். மீதித் தொகையைக் குடியிருப்பு வாசிகளின் சங்கம் சார்பில் திரட்டி பராமரிப்பு பணிகளைச் செய்து கொள்ளும் வகையில் செயல்படுத்த உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஓராண்டாக சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது - சிபிஎம் பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னை கோடம்பாக்கம் சுபேதார் கார்டனில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் பழுதடைந்துள்ளதால் அவற்றை இடித்து புதிதாக கட்ட உள்ளனர். அதுவரை அங்கு வசிக்கும் மக்கள் வேறு இடங்களில் வசிக்க உதவும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 24 ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

இதற்கான நிகழ்ச்சி சுபேதார் கார்டனில் நேற்று (மே.16) நடைபெற்றது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினர் மரு. எழிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், "இன்று 256 குடும்பங்களுக்குக் கருணைத் தொகையாக மொத்தம் 61 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு மாதத்தில் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டார்கள் என்றால், 18 மாதங்களில் வீடுகளைக் கட்டி முடித்து 19வது மாதத்தில் பயனாளிகளுக்கு மீண்டும் வீடுகளை வழங்கி விடுவோம்.

கடந்த ஆட்சியில் வாரிய குடியிருப்புகள் எங்குமே அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை. அதையெல்லாம் சரி செய்து வருகிறோம். 15 ஆண்டுகளுக்கு உட்பட்ட குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 170 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஏ.புரம் விவகாரத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு 3 பகுதிகளில் இடங்களைத் தேர்வு செய்து வழங்கி உள்ளோம்.

"நம் குடியிருப்பு நம் பொறுப்பு" என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ஆனால் அவர்கள் தங்களுக்கு ஒரே இடத்தில் வீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே முதலமைச்சர் சொன்னபடி சென்னைக்கு அருகில் ஒரே இடத்தில் வழங்க தயாராக உள்ளோம். அதேநேரம் அடுத்த வாரம் பிரதமர் பெரும்பாக்கத்தில் தொடங்கி வைக்கவுள்ள குடியிருப்பிலும் வீடுகள் வழங்க தயாராக உள்ளோம் என கூறினோம். அவர்கள் அனைவரிடமும் கலந்து பேசி முடிவைத் தெரிவிப்பதாகக் கூறி உள்ளனர்.

வாரிய குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் கழிவுநீர் அடைப்புகளை சரிசெய்ய இதுவரை கருவி இல்லை. வாரியம் சார்பில் புதிதாக கருவிகள் வாங்கி உள்ளோம். இனி கழிவுநீர் அடைப்பு பிரச்சனை ஏற்படாது. வாரிய குடியிருப்பு பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள "நம் குடியிருப்பு நம் பொறுப்பு" என்ற திட்டத்தை உருவாக்கி அங்கு வசிக்கும் மக்களில் இருந்து நிர்வாகிகளைத் தேர்வு செய்து நியமிக்க உள்ளோம்.

3 மாதத்திற்கான தேவையான பராமரிப்பு பணத்தை வாரியம் சார்பில் வழங்குவோம். ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் ஆகிறது என்றால் வாரியம் சார்பில் 50% தொகை வழங்கப்படும். மீதித் தொகையைக் குடியிருப்பு வாசிகளின் சங்கம் சார்பில் திரட்டி பராமரிப்பு பணிகளைச் செய்து கொள்ளும் வகையில் செயல்படுத்த உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஓராண்டாக சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது - சிபிஎம் பாலகிருஷ்ணன் பேச்சு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.