ETV Bharat / state

பாம்பாட்டி சித்தர் கோயிலில் திருப்பணிகள் செய்ய கோரிக்கை!

author img

By

Published : May 5, 2022, 6:57 PM IST

Updated : May 7, 2022, 12:22 PM IST

பாம்பாட்டி சித்தர் திருக்கோயிலில் திருப்பணிகள் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்த அம்மன் கே அர்ஜுனனிடம், இந்தாண்டு அறிவிப்பு புத்தகத்தை புரட்டிப் பார்த்தால் தெரியும், ரூ.6.30 கோடி ரூபாய் அந்தக் கோயில் திருப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர் பாபு பதில் கொடுத்தார்.

tamil nadu assembly  tamil nadu assembly debate  tamil nadu assembly question answer time  minister shekar babu  minister shekar babu answer in tn assembly  minister shekar babu answer for minister k arjunan  pambatti siddhar temple  அம்மன் கே அர்ஜுனனுக்கு பதிலடி கொடுத்த சேகர் பாபு  தமிழ்நாடு சட்டப்பேரவை  தமிழ்நாடு சட்டப்பேரவை கேள்வி பதில் நேரம்  அமைச்சர் சேகர் பாபு  பாம்பாட்டி சித்தர் திருக்கோயில்
சேகர் பாபு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (மே 5) கேள்வி நேரத்தின் போது சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளே வரும் பாம்பாட்டி சித்தர் திருக்கோயில் திருப்பணிகள் செய்ய வேண்டும் எனவும் கழிவு நீர் ஆலயத்தை சுற்றி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது, இதைச் சுத்தம் செய்ய நடவடிக்கை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “பாம்பாட்டி சித்தர் ஆலயத்திற்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்று, குடமுழுக்கு நடந்து முடிந்துள்ளது. அடுத்தாண்டு குடமுழுக்கு நடைபெற வேண்டி இருக்கும் என்றாலும் முன்கூட்டியே பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த இடத்தில் ரம்மியமான சூழலை பக்தர்களுக்கு உருவாக்கி தருவோம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்துள்ளோம். இந்தாண்டு மானிய கோரிக்கை அறிவிப்புகளிலே ரூ.6.30 கோடி செலவில் திருப்பணிகள் அந்த ஆலயத்தில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்” என நக்கலாக பதிலளித்தார். மேலும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதாக கூறியதற்கு, அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், நாளைய தினம் பதில் தரப்படும் எனத் தெரிவித்தார்.

இதனிடையே குறுக்கீடு செய்த அவை முன்னவர் துரைமுருகன், “பாம்பாட்டி சித்தர் பற்றி இவ்வளவு சொன்னாரே, அவர் யாருங்க? சொல்லுங்க பார்க்கலாம் எனக் கேட்டார். அதற்கு அமைச்சர் சேகர் பாபு, “கிபி.12ஆம் நூற்றாண்டில் மருதமலை முருகர் திருக்கோயிலுக்கு அவர் தவமாக இருந்து சித்து வேலை செய்து, சர்ப்பமாக இருந்து சுரங்க வழியாக முருகரை வழிப்பட்டார் என்பது வரலாறு.

தென்காசியில் ஜீவ சமாதி அடைந்தார். அந்த ஜீவ சமாதியை தனியார்கள் நிர்வகித்து வருகின்றனர். சித்தமெல்லாம் சிவ மயம் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஜீவநாடியில் நிறைந்து இருப்பவர்கள் எல்லாம் சித்தர்கள் தான்.

அதை முழுமையாக இந்த அரசு ஏற்று கொண்டதால்தான் 3 சித்தர்களுக்கு விழா எடுக்க உள்ளதாக நேற்றைய மானிய கோரிக்கையில் தெரிவித்துள்ளோம். அதிமுக அரசு தொடாத பணிகளை, இந்த திமுக அரசு செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடப்பாண்டில் 10 பிஎச்டி கல்லூரிகள் தொடங்கப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி உறுதி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (மே 5) கேள்வி நேரத்தின் போது சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளே வரும் பாம்பாட்டி சித்தர் திருக்கோயில் திருப்பணிகள் செய்ய வேண்டும் எனவும் கழிவு நீர் ஆலயத்தை சுற்றி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது, இதைச் சுத்தம் செய்ய நடவடிக்கை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “பாம்பாட்டி சித்தர் ஆலயத்திற்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்று, குடமுழுக்கு நடந்து முடிந்துள்ளது. அடுத்தாண்டு குடமுழுக்கு நடைபெற வேண்டி இருக்கும் என்றாலும் முன்கூட்டியே பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த இடத்தில் ரம்மியமான சூழலை பக்தர்களுக்கு உருவாக்கி தருவோம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்துள்ளோம். இந்தாண்டு மானிய கோரிக்கை அறிவிப்புகளிலே ரூ.6.30 கோடி செலவில் திருப்பணிகள் அந்த ஆலயத்தில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்” என நக்கலாக பதிலளித்தார். மேலும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதாக கூறியதற்கு, அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், நாளைய தினம் பதில் தரப்படும் எனத் தெரிவித்தார்.

இதனிடையே குறுக்கீடு செய்த அவை முன்னவர் துரைமுருகன், “பாம்பாட்டி சித்தர் பற்றி இவ்வளவு சொன்னாரே, அவர் யாருங்க? சொல்லுங்க பார்க்கலாம் எனக் கேட்டார். அதற்கு அமைச்சர் சேகர் பாபு, “கிபி.12ஆம் நூற்றாண்டில் மருதமலை முருகர் திருக்கோயிலுக்கு அவர் தவமாக இருந்து சித்து வேலை செய்து, சர்ப்பமாக இருந்து சுரங்க வழியாக முருகரை வழிப்பட்டார் என்பது வரலாறு.

தென்காசியில் ஜீவ சமாதி அடைந்தார். அந்த ஜீவ சமாதியை தனியார்கள் நிர்வகித்து வருகின்றனர். சித்தமெல்லாம் சிவ மயம் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஜீவநாடியில் நிறைந்து இருப்பவர்கள் எல்லாம் சித்தர்கள் தான்.

அதை முழுமையாக இந்த அரசு ஏற்று கொண்டதால்தான் 3 சித்தர்களுக்கு விழா எடுக்க உள்ளதாக நேற்றைய மானிய கோரிக்கையில் தெரிவித்துள்ளோம். அதிமுக அரசு தொடாத பணிகளை, இந்த திமுக அரசு செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடப்பாண்டில் 10 பிஎச்டி கல்லூரிகள் தொடங்கப்படும் - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி உறுதி

Last Updated : May 7, 2022, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.