ETV Bharat / state

‘வெளிநாடுகளில் ஐ.டி. துறையில் தமிழர்களே அதிகம் உள்ளனர்’ - அமைச்சர் பெருமிதம்! - admk

சென்னை: வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் வேலை பார்ப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

minister
author img

By

Published : Sep 24, 2019, 2:22 PM IST

தமிழ்நாடு மின் ஆளுமை தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் ஆளுமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய்த் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தபடி இல்லந்தோறும் இணையம் என்ற திட்டம் தொடங்கப்படும். இதன்மூலம் அனைத்து நகரம், மற்றும் கிராம பஞ்சாயத்திலும் அதிவேக இணைய சேவை வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசிடமிருந்து நிதி உதவியை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு

இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் மின் ஆளுமையில் முன்மாதிரியாகத் திகழ்கிறது. மற்ற மாநிலங்களின் திட்டங்களைவிட தமிழ்நாடு அரசின் திட்டம் தெளிவாக இருப்பதினால் மட்டுமே இந்தத் திட்டதிற்கு நிதியை உடனே பெற முடிகிறது.

வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அதிகளவில் வேலை பார்க்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில்துட்பத்தைக் கொண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது” என்றார்.

இதையும் படிங்க: அபராதத் தொகை குறைப்பது குறித்து விரைவில் அரசாணை- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழ்நாடு மின் ஆளுமை தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் ஆளுமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய்த் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தபடி இல்லந்தோறும் இணையம் என்ற திட்டம் தொடங்கப்படும். இதன்மூலம் அனைத்து நகரம், மற்றும் கிராம பஞ்சாயத்திலும் அதிவேக இணைய சேவை வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசிடமிருந்து நிதி உதவியை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு

இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் மின் ஆளுமையில் முன்மாதிரியாகத் திகழ்கிறது. மற்ற மாநிலங்களின் திட்டங்களைவிட தமிழ்நாடு அரசின் திட்டம் தெளிவாக இருப்பதினால் மட்டுமே இந்தத் திட்டதிற்கு நிதியை உடனே பெற முடிகிறது.

வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அதிகளவில் வேலை பார்க்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில்துட்பத்தைக் கொண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது” என்றார்.

இதையும் படிங்க: அபராதத் தொகை குறைப்பது குறித்து விரைவில் அரசாணை- அமைச்சர் விஜயபாஸ்கர்

Intro:Body:வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வேலை பார்ப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் ஆளுமை தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் ஆளுமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்துக்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்..

தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தபடி இல்லந்தோறும் இணையம் என்ற திட்டம் தொடங்கப்படும் என்றும் இதன் மூலம் அனைத்து நகரம், மற்றும் கிராம பஞ்சாயத்திலும் அதிவேக இணைய சேவை வழங்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் இருந்து நிதி உதவியை தமிழக அரசு பெற்றுள்ளதாக கூறிய அவர், முதல்வர் மத்திய அரசிடம் இருந்து என்ன பெற்று தந்தார் என கேட்பவர்களுக்கு இது ஒரு உதாரணம் என்றும் எடுத்துக்காட்டாக கூறினார்.

இந்தியாவிலே தமிழ்நாடு மட்டும் தான் மின் ஆளுமையில் முன்மாதிரியாக திகழ்வதாக கூறிய அவர் மற்ற மாநிலங்களின் திட்டங்களை விட தமிழக அரசின் திட்டம் தெளிவாக இருப்பதினால் மட்டுமே இந்த திட்டதிற்கு நிதியை உடனே பெற முடிந்ததாக தெரிவித்தார்.

மேலும், வெளி நாடுகளில் தகவல் தொழில் நுட்பத்துறையில் தமிழகத்தை சார்ந்தவர்கள் அதிக அளவில் வேலை பார்ப்பதாக தெரிவித்த அவர், தகவல் தொழில் நுட்பத்தில் பல்வேறு முன்னேற்றத்தை காண முடிவதாகவும், புதிய தொழில்நுட்பத்தை தகவல் தொழில் நுட்பத்தில் கொண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றும், தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் அரசு கொடுக்கும் நலத்திட்டத்தை பெற மக்கள் துறை சார்ந்த அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை எனவும், வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு மற்றும் அடுத்த தலைமுறை தொழிநுட்பங்களை தகவல் தொழிநுட்பத்தில் கொண்டுவருவது தொடர்பாக இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவதிக்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.