ETV Bharat / state

'குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்ததில் யாருடைய நிர்பந்தமும் இல்லை' - மாஃபா பாண்டியராஜன்!

author img

By

Published : Dec 19, 2019, 4:38 PM IST

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்தது கொள்கை முடிவுதானேயொழிய அதில், யாருடைய நிர்பந்தமும் இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

minister pandiyarajan
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநின்றவூர் நடுகுத்தகை பகுதியில் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேடப்பாளர்களை ஆதரித்து தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக கொள்கை முடிவின் அடிப்படையில்தான் ஆதரித்து வாக்களித்தது. யாருடைய நிர்பந்தமும் இல்லை. இதனால் எந்த மதத்தவரும் பாதிப்படைய மாட்டார்கள். ஈழ தமிழர்கள் விவகாரத்தில் அவர்கள் இங்கேயே இருப்பது எங்கள் நோக்கமல்ல. அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: அரசின் அலட்சியத்தால் கையை இழந்து உயிருக்குப் போராடும் பள்ளி மாணவர்!

தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநின்றவூர் நடுகுத்தகை பகுதியில் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேடப்பாளர்களை ஆதரித்து தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக கொள்கை முடிவின் அடிப்படையில்தான் ஆதரித்து வாக்களித்தது. யாருடைய நிர்பந்தமும் இல்லை. இதனால் எந்த மதத்தவரும் பாதிப்படைய மாட்டார்கள். ஈழ தமிழர்கள் விவகாரத்தில் அவர்கள் இங்கேயே இருப்பது எங்கள் நோக்கமல்ல. அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: அரசின் அலட்சியத்தால் கையை இழந்து உயிருக்குப் போராடும் பள்ளி மாணவர்!

Intro:அதிமுக குடியுரிமை மசோதாவை ஆதரித்தது கொள்கை முடிவு யாருடைய நிர்பந்தமும் இல்லை என திருநின்றவூர் நடுகுத்தகையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டிBody:அதிமுக குடியுரிமை மசோதாவை ஆதரித்தது கொள்கை முடிவு யாருடைய நிர்பந்தமும் இல்லை என திருநின்றவூர் நடுகுத்தகையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி.

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில் ஆவடி அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை பகுதியில் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேடப்பாளர்களை ஆதரித்து தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீடு வீடாக
சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை மசோதாவை அதிமுக கொள்கை முடிவின் அடிப்படையிலே ஆதரித்து வாக்களித்தது.யாருடைய நிர்பந்தமும் இல்லை என தெரிவித்த அவர் இதன் மூலம் இந்திய குடிமக்கள் யாரும் எந்த மதத்தவரும் பாதிப்படைய மாட்டார்கள் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் அவர்கள் இங்கேயே இருப்பது எங்கள் நோக்கமல்ல அவர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.