ETV Bharat / state

மறைமுக மேயர் தேர்தல்: மாமியாருக்கு ஒரு சட்டம்? மருமகளுக்கு ஒரு சட்டமா? - திமுகவுக்கு ஜெயக்குமார் கேள்வி

author img

By

Published : Nov 21, 2019, 5:04 PM IST

சென்னை: 2006ஆம் ஆண்டு மறைமுகத் தேர்தலை நடத்திய திமுக, இப்போது எதிர்க்கிறதென்றால் மாமியாருக்கு ஒரு சட்டம் மருமகளுக்கு ஒரு சட்டமா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

minister jayakumar pressmeet

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “உலக மீனவர் தினத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. திமுக நீதிமன்றம் சென்றபின், நீண்ட போராட்டத்திற்குப் பின் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

தேர்தல் நடக்கவுள்ளதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிட்டு போகாத ஊருக்கு வழி சொல்வது போல பேசக்கூடாது. மறைமுகத் தேர்தலிலும் யார் வெற்றியாளர் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். திமுக ஆட்சியில் 2006இல் இதேபோல மறைமுகத் தேர்தல் நடந்தது. ஆனால் இப்போது நாங்கள் அதை நடத்துகிறோம் என்று கூறினால் திமுக எதிர்க்கிறது. மாமியாருக்கு ஒரு சட்டம்? மருமகளுக்கு ஒரு சட்டமா?.

தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் தேர்தல் நடைபெற வேண்டுமென்பதே அதிமுகவின் நோக்கம். திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் கலவரம் வெடித்தது. ஜனநாயகத்தை மட்டுமே நம்பியுள்ள அதிமுகவிற்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. ஜனநாயக ரீதியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடரும் என்பதுதான் அதிமுகவின் கொள்கை” என்றார்.

இதையும் படிங்க: 'கோத்தபய ராஜபக்ச இந்தியா வருவதைக் கடுமையாக எதிர்ப்போம்' - திருமுருகன் காந்தி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “உலக மீனவர் தினத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. திமுக நீதிமன்றம் சென்றபின், நீண்ட போராட்டத்திற்குப் பின் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

தேர்தல் நடக்கவுள்ளதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிட்டு போகாத ஊருக்கு வழி சொல்வது போல பேசக்கூடாது. மறைமுகத் தேர்தலிலும் யார் வெற்றியாளர் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். திமுக ஆட்சியில் 2006இல் இதேபோல மறைமுகத் தேர்தல் நடந்தது. ஆனால் இப்போது நாங்கள் அதை நடத்துகிறோம் என்று கூறினால் திமுக எதிர்க்கிறது. மாமியாருக்கு ஒரு சட்டம்? மருமகளுக்கு ஒரு சட்டமா?.

தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் தேர்தல் நடைபெற வேண்டுமென்பதே அதிமுகவின் நோக்கம். திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் கலவரம் வெடித்தது. ஜனநாயகத்தை மட்டுமே நம்பியுள்ள அதிமுகவிற்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. ஜனநாயக ரீதியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடரும் என்பதுதான் அதிமுகவின் கொள்கை” என்றார்.

இதையும் படிங்க: 'கோத்தபய ராஜபக்ச இந்தியா வருவதைக் கடுமையாக எதிர்ப்போம்' - திருமுருகன் காந்தி

Intro:Body:மீன்வளதுறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

உலக மீனவர் தினத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. சமூக கல்வி, பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை தீட்டி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறோம்.

திமுக நீதிமன்றம் சென்றபின் அரசு நீண்ட போராட்டத்திற்கு பின் உள்ளாட்சி தேர்தலை நடத்த உறுதி அளித்து தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவிக்க உள்ளது. தேர்தல் நடக்க உள்ளதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதை விட்டு போகாத ஊருக்கு வழி சொல்வது மாதிரி பேசக்கூடாது. மறைமுக தேர்தலில் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டியவர்கள். திமுக ஆட்சியில் 2006ல் இது போன்ற மறைமுக தேர்தல் நடந்தது. மாமியாருக்கும் ஒரு சட்டம் மருமகளுக்கு ஒரு சட்டமா.
தமிழகத்தில் ஜனநாயக ரீதியான அமைதியான நேர்மையான சுதந்திரமான தேர்தல் நடைபெற வேண்டும். திமுக ஆட்சிக்காலத்தில் எல்லா அளவிலும் வன்முறை நடந்தது. ஐகோர்ட்டே கண்டன்ம் தெரிவித்தது சென்னை மாநகராட்சி தேர்தலை சில இடங்களில் ரத்து செய்து மீண்டும் நடத்தியது. ஜனநாயகத்தை மட்டுமே நம்பி உள்ள அதிமுகவிற்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. வன்முறை உள்பட எல்லா கலாச்சாரத்தையும் காட்டி வெற்றி பெற்று விடலாம் என்று திமுக கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தது. அது நடக்கவில்லை. ஜனநாயக ரீதியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு உதவிகளை செய்யும். மறைமுக தேர்தல் முறை என்றாலும் கவுன்சிலர்களை வாக்காளர்கள் தான் தேர்வு செய்கின்றனர். எம்.எல்.எ.க்கள் தான் முதலமைச்சரையும், எம்.பிக்கள் பிரதமரையும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். தேர்தலை நடத்த கூடாது என்று எதிர்கட்சிகள் திட்டம் திட்டிக் கொண்டு உள்ளனர். உள்ளாட்சியில் நல்லாட்சி தொடரும் என்பது தான் அதிமுக கொள்கை.

இலங்கையில் தமிழர்கள் நலனை பாதுகாக்கின்ற அரசாக அதிமுக இருக்கும். திமுக வேடிக்கை பார்த்தது. நாங்கள் பார்க்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.