ETV Bharat / state

அன்வர் ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்

author img

By

Published : Jan 4, 2020, 12:10 PM IST

சென்னை: சொந்த கட்சியையே விமர்சனம் செய்யக்கூடாது என்று அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.

Minister Jayakumar Advice to ADMK former MP Anwar Raja
Minister Jayakumar Advice to ADMK former MP Anwar Raja

காமராஜர் சாலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சிக்காகப் பல்வேறு வகையில் உழைத்த பி. ஹெச். பாண்டியனின் மறைவு மாபெரும் இழப்பு. சட்டப்பேரவைத் தலைவராக இருந்தபோது சட்டப்பேரவையின் மாண்புகளைக் காப்பாற்றியவர் அவர்.

அதிமுக வளர்பிறை, திமுக தேய்பிறை என்பதைத்தான் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் உணர்த்தியுள்ளார்கள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். மகத்தான வெற்றி என்ற பிரம்மையை திமுக ஏற்படுத்துகிறது. ஆனால் நிலைமை அதலபாதாளத்தில்தான் சென்றுகொண்டிருக்கிறது”.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

இதனையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோற்கும் எனத் தெரிந்துதான் தன் மகளையும் மகனையும் வேட்பாளராக நிறுத்தினேன் என்று அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா கூறியிருந்த கருத்து குறித்து பேசிய ஜெயக்குமார், "கட்சியிலிருந்துகொண்டு சொந்த கட்சியையேஅன்வர் ராஜா விமர்சனம் செய்யக்கூடாது. இது என்னுடைய கருத்து. என்ன செய்ய வேண்டுமென்பதை தலைமை முடிவு செய்யும்" என்று பேசினார்.

இதையும் படிங்க: ஊள்ளாட்சித் தேர்தல் - அதிமுகவிற்கு பின்னடைவு இல்லை: அன்வர் ராஜா..!

காமராஜர் சாலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சிக்காகப் பல்வேறு வகையில் உழைத்த பி. ஹெச். பாண்டியனின் மறைவு மாபெரும் இழப்பு. சட்டப்பேரவைத் தலைவராக இருந்தபோது சட்டப்பேரவையின் மாண்புகளைக் காப்பாற்றியவர் அவர்.

அதிமுக வளர்பிறை, திமுக தேய்பிறை என்பதைத்தான் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் உணர்த்தியுள்ளார்கள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். மகத்தான வெற்றி என்ற பிரம்மையை திமுக ஏற்படுத்துகிறது. ஆனால் நிலைமை அதலபாதாளத்தில்தான் சென்றுகொண்டிருக்கிறது”.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

இதனையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோற்கும் எனத் தெரிந்துதான் தன் மகளையும் மகனையும் வேட்பாளராக நிறுத்தினேன் என்று அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா கூறியிருந்த கருத்து குறித்து பேசிய ஜெயக்குமார், "கட்சியிலிருந்துகொண்டு சொந்த கட்சியையேஅன்வர் ராஜா விமர்சனம் செய்யக்கூடாது. இது என்னுடைய கருத்து. என்ன செய்ய வேண்டுமென்பதை தலைமை முடிவு செய்யும்" என்று பேசினார்.

இதையும் படிங்க: ஊள்ளாட்சித் தேர்தல் - அதிமுகவிற்கு பின்னடைவு இல்லை: அன்வர் ராஜா..!

Intro:Body:அன்வர் ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்

அதிமுகவில் இருந்துகொண்டு அதிமுக கட்சியை விமர்சனம் செய்யக்கூடாது என்று முன்னாள் எம்பி அன்வர் ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் செய்துள்ளார்.

காமராஜர் சாலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். எம்ஜிஆர் காலம் தொடங்கி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சிக்காக பல்வேறு வகையில் உழைத்த பி. எச். பாண்டியன் மறைவு மாபெரும் இழப்பு. ஆகும்.
சட்டப்பேரவைத் தலைவராக இருந்தபோது சட்டப்பேரவை மாண்புகளை காப்பாற்றியவர் என்றார்.

அதிமுக வளர்பிறை திமுக தேய்பிறை என்பதுதான் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் உணர்த்தியுள்ளார்கள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்கள் .அதற்கு கரி பூசும் வகையில் வேலூர் தேர்தல் நடைப்பெற்றது.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று சொற்ப வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுக பெரிய அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது என்று பேசினார்.

மகத்தான வெற்றி என்று பிரம்மையை ஏற்படுத்துகிறார்கள். அதள பாதாளத்தில் தான் திமுக சென்று கொண்டிருக்கிறது.

அதிமுகவிற்கு ஏறுமுகம் திமுக விற்கு இறங்கு முகம். அரசியல் படுகொலையை நிகழ்த்தியவர்கள் திமுக.

தபால் வேலையை பார்க்க தான் தேர்தல் ஆணையரா என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

அரசியல் தலையீடு இல்லாமல் கடமையை செய்ததால் தான் இந்த அளவிற்கு முடிவுகள் வந்துள்ளது.

நாங்கள் பெற்ற வெற்றியை மூடி மறைக்க ஸ்டாலின் கூறுகிறார், இது உண்மை அல்ல.

கட்சியில் இருந்துக்கொண்டு அன்வர் ராஜா விமர்சனம் செய்யக்கூடாது என்று கூறினார். Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.