ETV Bharat / state

அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் ஈபிஎஸ் நிதானம் தவறியுள்ளார் - அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

author img

By

Published : Sep 26, 2022, 2:26 PM IST

அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி நிதானம் தவறியுள்ளதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Minister
Minister

சென்னை: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் ஆந்திராவின் முயற்சிகளை உடனடியாக தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று(செப்.25) அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு அரசு கும்பகர்ண தூக்கத்தை கைவிட்டு விட்டு, உடனடியாக ஆந்திர அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என இபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடுதான் நடந்து கொண்டிருந்தார். அவருடைய கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இப்போது தடுமாறி போயிருக்கிறார், நிதானம் தவறியிருக்கிறார் என்பது அவரது அறிக்கை மூலம் தெரிகிறது. அறிக்கையில் தமிழ்நாடு அரசு 'கையாலாத அரசு', 'விடியா அரசு', 'கும்பகர்ணன் தூக்கம் கொண்ட அரசு' என்று வார்த்தைகளை கொட்டி இருக்கிறார்.

ஆந்திர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் கட்டப்போவதாக ஆந்திர முதலமைச்சர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அது ஒரு பொதுக் கூட்ட செய்திதான். அந்த செய்தியை வைத்துக் கொண்டு தமிழ்நாடு அரசு என்ன சாதித்துவிட்டது? என்று அவசர குடுக்கையாக எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

இப்படித்தான் முன்னர் ஒரு முறை இதே கணேசபுரத்தில் அணை கட்டப் போவதாக வந்த செய்தியைப் பார்த்து தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து கணேசபுரம் போய் பார்த்தபோது அப்படி ஒரு அணை கட்டுவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் எடுக்கும். இந்த நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எல்லாம் எடப்பாடியாருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. காரணம் அவர் எந்த அணையையும் கட்டவில்லை. அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதைத்திரும்ப அள்ளுவது கஷ்டம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் திராவிட மாடலின் அங்கம்தானோ? - டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் ஆந்திராவின் முயற்சிகளை உடனடியாக தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று(செப்.25) அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு அரசு கும்பகர்ண தூக்கத்தை கைவிட்டு விட்டு, உடனடியாக ஆந்திர அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என இபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடுதான் நடந்து கொண்டிருந்தார். அவருடைய கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இப்போது தடுமாறி போயிருக்கிறார், நிதானம் தவறியிருக்கிறார் என்பது அவரது அறிக்கை மூலம் தெரிகிறது. அறிக்கையில் தமிழ்நாடு அரசு 'கையாலாத அரசு', 'விடியா அரசு', 'கும்பகர்ணன் தூக்கம் கொண்ட அரசு' என்று வார்த்தைகளை கொட்டி இருக்கிறார்.

ஆந்திர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் கட்டப்போவதாக ஆந்திர முதலமைச்சர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அது ஒரு பொதுக் கூட்ட செய்திதான். அந்த செய்தியை வைத்துக் கொண்டு தமிழ்நாடு அரசு என்ன சாதித்துவிட்டது? என்று அவசர குடுக்கையாக எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

இப்படித்தான் முன்னர் ஒரு முறை இதே கணேசபுரத்தில் அணை கட்டப் போவதாக வந்த செய்தியைப் பார்த்து தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து கணேசபுரம் போய் பார்த்தபோது அப்படி ஒரு அணை கட்டுவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் எடுக்கும். இந்த நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எல்லாம் எடப்பாடியாருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. காரணம் அவர் எந்த அணையையும் கட்டவில்லை. அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்திவிட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும்? வார்த்தைகளை கொட்டுவது சுலபம். அதைத்திரும்ப அள்ளுவது கஷ்டம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் திராவிட மாடலின் அங்கம்தானோ? - டிடிவி தினகரன் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.