ETV Bharat / state

பொறியியல் படிப்புக்கான கல்விக் கட்டணம் உயர்வு - minister anbazhakan

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளது எனவும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன்
author img

By

Published : Jun 25, 2019, 2:46 PM IST

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பொறியியல் சேர்க்கையில் சிறப்புப் பிரிவினருக்கான இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பொறியியல் கலாந்தாய்வின் முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இந்தப் பிரிவினருக்கு உள்ள 6,915 இடங்களில் சேருவதற்கு 141 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் அனைவரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ் வழியில் பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால் மாணவர்கள் அந்தப் பிரிவினை தேர்வு செய்ய விரும்புவதில்லை.

பொறியியல் படிப்பில் அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இளங்கலை மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், முதுகலை மாணவர்களுக்கு ரூ.18 ஆயிரமும கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு எந்தவித கல்விக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்றார்.

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பொறியியல் சேர்க்கையில் சிறப்புப் பிரிவினருக்கான இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பொறியியல் கலாந்தாய்வின் முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இந்தப் பிரிவினருக்கு உள்ள 6,915 இடங்களில் சேருவதற்கு 141 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் அனைவரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ் வழியில் பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால் மாணவர்கள் அந்தப் பிரிவினை தேர்வு செய்ய விரும்புவதில்லை.

பொறியியல் படிப்பில் அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இளங்கலை மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், முதுகலை மாணவர்களுக்கு ரூ.18 ஆயிரமும கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு எந்தவித கல்விக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்றார்.

Intro:அண்ணா பல்கலைக்கழக கட்டண உயர்வு
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்புBody:சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் உயர்த்தி அரசு அனுமதி அளித்துள்ளது எனவும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் தெரிவித்தார்.
சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பொறியியல் சேர்க்கை சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி .அன்பழகன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்தப் பிரிவினருக்கு உள்ள 6,915 இடங்கள் உள்ளன. இந்தப் பிரிவில் சேருவதற்கு 141 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் அனைவரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 150 இடங்கள் உள்ளன .அதற்கு 915 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கான 500 இடங்களுக்கு ஆயிரத்து 650 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. இவர்கள் சிறப்பு பிரிவில் இடம் கிடைக்காவிட்டால் பொது கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களுக்குரிய கல்லூரிகளை தேர்வு செய்துகொள்ளலாம்.
தமிழ் வழியில் பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால் மாணவர்கள் அந்த பிரிவினை தேர்வு செய்ய விரும்புவதில்லை.
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களில் 47 ஆயிரத்து 915 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் கல்லூரியில் சேர்ந்த பின்னர் எத்தனை பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது ஆய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்படும்.
பொறியியல் படிப்பில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இளங்கலை மாணவர்களுக்கு 15 ஆயிரம் முதுகலை மாணவர்களுக்கு 18000 கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு எந்த வித கல்வி கட்டணம் உயர்த்தப்படவில்லை. 24 பொறியியல் கல்லூரிகள் மட்டும் தங்களின் வரவு செலவுகளை சுயநிதி கல்வி கட்டண நிர்ணய குழுவிற்கு அளித்து கட்டண உயர்விற்கு அனுமதி பெற்றுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறையவில்லை. இந்தாண்டு 15 பொறியியல் கல்லூரிகள் தங்களுக்குள் வழியில் மாணவர்களை சேர்க்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளது. ஆனால் அந்தக் கொள்வர்கள் தொடர்ந்து 4 ஆண்டுகள் நடத்தப்பட்ட மாணவர்கள் கல்வி முழுமையாக முடிக்கும் வரை செயல்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.