ETV Bharat / state

பிப்ரவரி 8-ல் வேலைநிறுத்தப் போராட்டம் - மெட்ரோ ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

author img

By

Published : Feb 3, 2019, 11:04 PM IST

சென்னை: "அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால் வரும் 8ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்" என, சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது .

பேட்டி

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

போக்குவரத்து கழகத்தில் கட்டண உயர்வுக்கு பின் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளதால் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும், இரவில் பணிபுரிபவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வாகன வசதி, தங்கும் வசதி செய்து தரவேண்டும். ஊதிய உயர்வு ,அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். வரும் பிப்ரவரி 8-ம் தேதிக்கு முன்பாக அரசும் நிர்வாகமும் கலந்து பேசி இந்த கோரிக்கைகள் குறித்த நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிடாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இது குறித்து நோட்டீஸை மெட்ரோ நிர்வாகத்திற்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

போக்குவரத்து கழகத்தில் கட்டண உயர்வுக்கு பின் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளதால் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும், இரவில் பணிபுரிபவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வாகன வசதி, தங்கும் வசதி செய்து தரவேண்டும். ஊதிய உயர்வு ,அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். வரும் பிப்ரவரி 8-ம் தேதிக்கு முன்பாக அரசும் நிர்வாகமும் கலந்து பேசி இந்த கோரிக்கைகள் குறித்த நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிடாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இது குறித்து நோட்டீஸை மெட்ரோ நிர்வாகத்திற்கு அனுப்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Intro:பிப்ரவரி 8 இல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என மெட்ரோ ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு.


Body:பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது .

ஊதிய உயர்வு ,அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் :

சென்னை மெட்ரோ ரயில் சென்னைக்கு கிடைத்த நல்ல வரவு ,இது இன்னும் பல இடங்களுக்கு விரிவடைய வேண்டும்.

மெட்ரோ ரயில் ஊழியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் ,மெட்ரோ ரயிலில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது .

முறையாக பயிற்சி இல்லாதவர்கள் இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இதனால் கூடுதல் செலவும் ,விபத்துக்களும் ஏற்படும். பிப்ரவரி 8ம் தேதிக்கு மேல் நாங்கள் முடிவு செய்யும் தேதியில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும். இது குறித்து நோட்டீஸ் மெட்ரோ நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழகத்தில் கட்டண உயர்வுக்கு பின் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது .எனவே இதை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் .

இரவில் பணிபுரிபவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வாகன வசதி, தங்கும் வசதி செய்து தரவேண்டும் . ஏற்கனவே வழங்கப்படாமல் இருக்கும் நிதிகளை அளிக்க வேண்டும் .


பிப்ரவரி 8ம் தேதிக்கு முன்பு அரசும் நிர்வாகமும் அழைத்து பேசினால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம்.

வேலைநிறுத்தம் செய்வது எங்கள் நோக்கமல்ல நிர்வாகம் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் .

தமிழ்நாடு இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வேண்டுமா அல்லது அவுட்சோர்சிங் முறையில் வேலை வேண்டுமா ....?

ரயில் ஓட்டுனர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்படவில்லை அவுட்சோர்சிங் பணியாளர்களை வைத்து மெட்ரோ ரயிலை இயக்குகிறார்கள் .

மெட்ரோ நிரந்தரப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் ,இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் 5 நிமிடம் கூட இயங்குவது கடினம்.

பாதுகாப்பு கேள்விக்குறியாகும் ,மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போராடத்தான் முயற்சிக்கிறோம் .அவ்வாறு மக்கள் பாதிக்கப் பட்டால் நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

அவுட்சோர்சிங் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் ,மேலும் பல்வேறு சமயங்களில் ரயில் நின்று போவதற்கு முறையான பயிற்சி பெறாத ஓட்டுனர்களை வைத்து இயக்குவது தான் காரணம் என்று தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.