ETV Bharat / state

கூலித்தொழிலாளி அடித்துக் கொலை - ஒருவர் கைது; இருவருக்கு வலைவீச்சு!

author img

By

Published : Sep 7, 2020, 7:22 PM IST

சென்னை: ஆவடி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கூலித் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

mercenary-stoned-to-death-one-arrested-blogging-for-someone
mercenary-stoned-to-death-one-arrested-blogging-for-someone

சென்னை ஆவடி அருகேவுள்ள வெள்ளானூர் பகுதியில் தனியார் மருத்துவமனை மருத்துவர் சந்தோஷினி என்பவர் வீடு கட்டி வருகிறார். இதில் மாரிமுத்து, பாட்ஷா, பாபு, மோகன் உள்ளிட்ட நான்கு கூலித்தொழிலாளிகள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு(செப்.06) இவர்கள் நான்கு பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் மாரிமுத்து என்பவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக பாபு என்பவரைக் கைது செய்த காவல் துறையினர், தப்பியோடிய பாஷா, மோகன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகனம் விபத்து: கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

சென்னை ஆவடி அருகேவுள்ள வெள்ளானூர் பகுதியில் தனியார் மருத்துவமனை மருத்துவர் சந்தோஷினி என்பவர் வீடு கட்டி வருகிறார். இதில் மாரிமுத்து, பாட்ஷா, பாபு, மோகன் உள்ளிட்ட நான்கு கூலித்தொழிலாளிகள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு(செப்.06) இவர்கள் நான்கு பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் மாரிமுத்து என்பவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக பாபு என்பவரைக் கைது செய்த காவல் துறையினர், தப்பியோடிய பாஷா, மோகன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகனம் விபத்து: கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.