ETV Bharat / state

ஸ்ட்ரே வேக்கன்சி கலந்தாய்வு; அகில இந்திய ஒதுக்கீட்டில் 2,454 காலியிடங்கள்.. தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 6:55 PM IST

Updated : Sep 24, 2023, 10:51 PM IST

Stray Vacancy Counselling: எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஸ்ட்ரே வேக்கன்சி கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் 480 இடங்கள் உள்பட 2,454 இடங்கள் காலியாக உள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் அகில இந்திய கலந்தாய்வில் 2454 காலியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் அகில இந்திய கலந்தாய்வில் 2454 காலியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேராமல் நடப்பாண்டில் அதிகளவில் இடம் காலி ஏற்படும் என தெரிகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இந்தியாவில் 2,454 இடங்கள் காலியாக உள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் 480க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளது.

தமிழ்நாட்டில் 480 இடங்களுக்கு மேல் காலி: அதேபோல் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் 441 இடங்கள் காலியாக உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 12 இடங்களும், கோயம்புத்தூர் கே.கே. நகர் இஎஸ்ஐசி, அரியலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, ஓமந்தூரார், ராமநாதபுரம், திருப்பூர், புதுக்கோட்டை, கீழ்பாக்கம், சேலம், சிவகங்கை, வேலூர், திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஒற்றை இலக்கத்தில் இடங்கள் காலியாக உள்ளது.

ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் 61 இடங்களும், பாரத் மருத்துவக் கல்லூரியில் 64 இடங்களும், சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 27 இடங்களும், ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் 205 இடங்களும், பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 53 இடங்களும், ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் 2 இடம், ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 5 இடங்களும், வி.எம்.கே.வி மருத்துவக் கல்லூரியில் 16 இடங்களும் என தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் 480 இடங்களுக்கு மேல் காலியாக உள்ளது.

ஸ்ட்ரே வேக்கன்சி: காலியாக உள்ள இந்த இடங்களுக்கு மாணவர்கள் சேராவிட்டால் அந்த இடங்கள் அடுத்த 5 ஆண்டிற்கும் காலியாகத்தான் இருக்கும். அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவால் நடத்தப்படுகிறது. 4 சுற்றுகளாக நடத்தப்படும் மாணவர் சேர்க்கையில் 3 சுற்றுக் கலந்தாய்வு முடிவடைந்துள்ளது.

3 சுற்றுக் கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு வேறு கல்லூரியில் இடம் கிடைத்தால், அந்தக் கல்லூரிக்கு மாற முடியும். இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள் ஏற்கனவே சேர்ந்த கல்லூரியில் இருந்து வேறு கல்லூரிக்கு மாறிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், இறுதியாக 4வது சுற்றில் நடைபெறும் ஸ்ட்ரே வேக்கன்சி (Stray Vaccanccy) கலந்தாய்வில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் விரும்பும் கல்லூரியை பதிவு செய்யலாம்.

அதனைத்தொடர்ந்து, 26ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அளிக்கப்படும். 30ஆம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டில் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் 2,454 இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் மாநில ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கும் இறுதி சுற்றுக் கலந்தாய்வு ஸ்ட்ரே வேக்கன்சிக்கு 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் விரும்பும் கல்லூரியை பதிவு செய்யலாம்.

தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 252 காலியிடங்கள்: 26ஆம் தேதி கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். 30ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. அதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் பல் மருத்துவப் படிப்பில் 3 இடங்களும், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 13 இடங்களும், தனியார் பல்கலைக் கழகங்கள் மூன்றிலும் தலா ஒரு இடம் என 3 இடங்களும், பி.டி.எஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 18 இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 252 இடங்களும் காலியாக உள்ளது.

நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 18 தனியார் மருத்துவக் கல்லூரியில் 78 இடங்களும், 3 தனியார் பல்கலைக்கழகங்களில் 33 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 86 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான ஸ்ட்ரே வேக்கன்சி கலந்தாய்வு முடிந்த பின்னர் மாணவர்கள் சேராமல் இருந்தால், செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பின்னர் காலியாகத்தான் இருக்கும்.

இதையும் படிங்க: செப்.25 முதல் அரசு கல்லூரிகளில் எம்எட் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேராமல் நடப்பாண்டில் அதிகளவில் இடம் காலி ஏற்படும் என தெரிகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இந்தியாவில் 2,454 இடங்கள் காலியாக உள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் 480க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளது.

தமிழ்நாட்டில் 480 இடங்களுக்கு மேல் காலி: அதேபோல் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் 441 இடங்கள் காலியாக உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 12 இடங்களும், கோயம்புத்தூர் கே.கே. நகர் இஎஸ்ஐசி, அரியலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, ஓமந்தூரார், ராமநாதபுரம், திருப்பூர், புதுக்கோட்டை, கீழ்பாக்கம், சேலம், சிவகங்கை, வேலூர், திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஒற்றை இலக்கத்தில் இடங்கள் காலியாக உள்ளது.

ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் 61 இடங்களும், பாரத் மருத்துவக் கல்லூரியில் 64 இடங்களும், சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 27 இடங்களும், ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் 205 இடங்களும், பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 53 இடங்களும், ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் 2 இடம், ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 5 இடங்களும், வி.எம்.கே.வி மருத்துவக் கல்லூரியில் 16 இடங்களும் என தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் 480 இடங்களுக்கு மேல் காலியாக உள்ளது.

ஸ்ட்ரே வேக்கன்சி: காலியாக உள்ள இந்த இடங்களுக்கு மாணவர்கள் சேராவிட்டால் அந்த இடங்கள் அடுத்த 5 ஆண்டிற்கும் காலியாகத்தான் இருக்கும். அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவால் நடத்தப்படுகிறது. 4 சுற்றுகளாக நடத்தப்படும் மாணவர் சேர்க்கையில் 3 சுற்றுக் கலந்தாய்வு முடிவடைந்துள்ளது.

3 சுற்றுக் கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு வேறு கல்லூரியில் இடம் கிடைத்தால், அந்தக் கல்லூரிக்கு மாற முடியும். இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள் ஏற்கனவே சேர்ந்த கல்லூரியில் இருந்து வேறு கல்லூரிக்கு மாறிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், இறுதியாக 4வது சுற்றில் நடைபெறும் ஸ்ட்ரே வேக்கன்சி (Stray Vaccanccy) கலந்தாய்வில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் விரும்பும் கல்லூரியை பதிவு செய்யலாம்.

அதனைத்தொடர்ந்து, 26ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அளிக்கப்படும். 30ஆம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டில் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் 2,454 இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் மாநில ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கும் இறுதி சுற்றுக் கலந்தாய்வு ஸ்ட்ரே வேக்கன்சிக்கு 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் விரும்பும் கல்லூரியை பதிவு செய்யலாம்.

தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 252 காலியிடங்கள்: 26ஆம் தேதி கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். 30ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. அதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் பல் மருத்துவப் படிப்பில் 3 இடங்களும், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 13 இடங்களும், தனியார் பல்கலைக் கழகங்கள் மூன்றிலும் தலா ஒரு இடம் என 3 இடங்களும், பி.டி.எஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் 18 இடங்களும், தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 252 இடங்களும் காலியாக உள்ளது.

நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 18 தனியார் மருத்துவக் கல்லூரியில் 78 இடங்களும், 3 தனியார் பல்கலைக்கழகங்களில் 33 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 86 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கான ஸ்ட்ரே வேக்கன்சி கலந்தாய்வு முடிந்த பின்னர் மாணவர்கள் சேராமல் இருந்தால், செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பின்னர் காலியாகத்தான் இருக்கும்.

இதையும் படிங்க: செப்.25 முதல் அரசு கல்லூரிகளில் எம்எட் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்!

Last Updated : Sep 24, 2023, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.