ETV Bharat / state

கோயம்பேட்டில் தங்க நகையை அபேஸ் செய்த எம்.பி.ஏ பட்டதாரி.. போலீசிடம் சிக்கியது எப்படி?

author img

By

Published : Jun 1, 2023, 5:15 PM IST

அரசு பேருந்தில் பயணியின் தங்க நகைககள் அடங்கிய பையை திருடிய எம்.பி.ஏ பட்டதாரி வாலிபரை துரிதமாக செயல்பட்டு நகையை மீட்ட கோயம்பேடு பேருந்து நிலைய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

தங்க நகையை அபேஸ் செய்த எம்.பி.ஏ பட்டதாரி கைது! போலீசிடம் சிக்கியது எப்படி?
தங்க நகையை அபேஸ் செய்த எம்.பி.ஏ பட்டதாரி கைது! போலீசிடம் சிக்கியது எப்படி?

சென்னை: ஆவடியில் உள்ள திண் ஊர்தி தொழிற்சாலையில் (HVF) பணிப்புரிபவர் வடிவேல். இவரது மனைவி சுவர்ணதாய் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் துறையூரில் நடைப்பெறும் உறவினரின் காதுகுத்து நிகழ்ச்சிக்கு செல்வதற்காக ஆம்னி பேருந்தை புக் செய்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் புக் செய்த பேருந்தை தவறவிட்டதால், அரசு பேருந்து மூலமாக செல்லலாம் என முடிவு செய்துள்ளனர்.

எனவே, இருவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து 6-வது நடைமேடையில் துறையூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். அதன் பின், லக்கேஜ் வைக்கும் இடத்தில் அவர்கள் கொண்டு வந்த சிவப்பு நிற பேக்கை வைத்து விட்டு, மனைவி பேருந்தில் இருக்க, வடிவேல் மட்டும் கீழே இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்க சென்றுள்ளார். பின் அவர் திரும்பி வந்த சிறிது நேரத்திலே லக்கேஜ் கார்டில் வைத்து இருந்த பேக் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின், இது குறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீசாரிடம் புகார் அளித்ததின் பேரில், போலீசார் பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிசிடிவி காட்சியில் சிவப்பு நிற டீ சர்ட் அணிந்த ஒருவர் சூட்கேசுடன் செல்வது தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து மூன்று குழுக்களாக பிரிந்த போலீசார், தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஆட்டோ மூலமாக திருடன் வட பழனி வரை சென்றுள்ளார் என்பதை அறிந்தனர்.

பின் அந்த திருடன் அங்கு சூட்கேசை வீசிவிட்டு உள்ளே இருந்த நகையை எடுத்துக் கொண்டு, வேறு ஒரு ஆட்டோ மூலமாக கிண்டி கத்திபாரா அருகில் சிவகங்கை பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து, அவரை பின் தொடர்ந்த போலீசார் ஒவ்வொரு பேருந்தாக சோதனையிட்டனர். அப்போது பேருந்தில் தான் அணிந்து இருந்த சிவப்பு நிற டீ சர்ட்டை மாற்ற முயன்று கொண்டிருத்தவரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருடனின் பெயர் சுந்தரலிங்கம் என்றும் அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணையில் சுந்தரலிங்கம் தான் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி என்றும் மெடிக்கல் ரெப்பாக சிறிது காலம் வேலை செய்து, பின் இரண்டு ஹோட்டல்களை தொடங்கி அதிலும் நஷ்டம் ஏற்பட்டதால், படித்தப்படிப்புக்கு வேலை தேடி அடிக்கடி சென்னை, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு பேருந்துகளில் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவ்வாறு செல்லும் போது பூட்டிய சூட்கேஸ்களை குறிவைத்து திருடுவதாகவும் அதில் தான் நகை, பணம் நிறைய இருக்கும் என்பதால் அதை குறிவைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, அவரிடம் இருந்த திருடப்பட்ட பை மற்றும் அதில் இருந்த 14 சவரன் நகைகளை மீட்ட போலீசார், அவர் எத்தனை இடத்தில் கைவரிசை காட்டியுள்ளார் என்பது குறித்து தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர் பறிமுதல் செய்த நகையை பாதிக்கப்பட்ட வடிவேலிடம் போலீசார் ஒப்படைத்தனர். 2 மணி நேரத்தில் நகையை மீட்டு கொடுத்த போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்ததோடு, நகை பணத்தோடு பயணிக்கும் போது அலட்சியமாக நடக்கவேண்டாம் என பொதுமக்களுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார். துரிதமாக செயல்பட்டு நகையை மீட்ட கோயம்பேடு பேருந்து நிலைய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தாறுமாறாக ஓடிய காரால் சாலையோரம் நின்றிருந்த சிறுவன் உயிரிழப்பு!

சென்னை: ஆவடியில் உள்ள திண் ஊர்தி தொழிற்சாலையில் (HVF) பணிப்புரிபவர் வடிவேல். இவரது மனைவி சுவர்ணதாய் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் துறையூரில் நடைப்பெறும் உறவினரின் காதுகுத்து நிகழ்ச்சிக்கு செல்வதற்காக ஆம்னி பேருந்தை புக் செய்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் புக் செய்த பேருந்தை தவறவிட்டதால், அரசு பேருந்து மூலமாக செல்லலாம் என முடிவு செய்துள்ளனர்.

எனவே, இருவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து 6-வது நடைமேடையில் துறையூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளனர். அதன் பின், லக்கேஜ் வைக்கும் இடத்தில் அவர்கள் கொண்டு வந்த சிவப்பு நிற பேக்கை வைத்து விட்டு, மனைவி பேருந்தில் இருக்க, வடிவேல் மட்டும் கீழே இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்க சென்றுள்ளார். பின் அவர் திரும்பி வந்த சிறிது நேரத்திலே லக்கேஜ் கார்டில் வைத்து இருந்த பேக் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின், இது குறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீசாரிடம் புகார் அளித்ததின் பேரில், போலீசார் பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிசிடிவி காட்சியில் சிவப்பு நிற டீ சர்ட் அணிந்த ஒருவர் சூட்கேசுடன் செல்வது தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து மூன்று குழுக்களாக பிரிந்த போலீசார், தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஆட்டோ மூலமாக திருடன் வட பழனி வரை சென்றுள்ளார் என்பதை அறிந்தனர்.

பின் அந்த திருடன் அங்கு சூட்கேசை வீசிவிட்டு உள்ளே இருந்த நகையை எடுத்துக் கொண்டு, வேறு ஒரு ஆட்டோ மூலமாக கிண்டி கத்திபாரா அருகில் சிவகங்கை பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து, அவரை பின் தொடர்ந்த போலீசார் ஒவ்வொரு பேருந்தாக சோதனையிட்டனர். அப்போது பேருந்தில் தான் அணிந்து இருந்த சிவப்பு நிற டீ சர்ட்டை மாற்ற முயன்று கொண்டிருத்தவரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருடனின் பெயர் சுந்தரலிங்கம் என்றும் அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணையில் சுந்தரலிங்கம் தான் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி என்றும் மெடிக்கல் ரெப்பாக சிறிது காலம் வேலை செய்து, பின் இரண்டு ஹோட்டல்களை தொடங்கி அதிலும் நஷ்டம் ஏற்பட்டதால், படித்தப்படிப்புக்கு வேலை தேடி அடிக்கடி சென்னை, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு பேருந்துகளில் பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவ்வாறு செல்லும் போது பூட்டிய சூட்கேஸ்களை குறிவைத்து திருடுவதாகவும் அதில் தான் நகை, பணம் நிறைய இருக்கும் என்பதால் அதை குறிவைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, அவரிடம் இருந்த திருடப்பட்ட பை மற்றும் அதில் இருந்த 14 சவரன் நகைகளை மீட்ட போலீசார், அவர் எத்தனை இடத்தில் கைவரிசை காட்டியுள்ளார் என்பது குறித்து தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர் பறிமுதல் செய்த நகையை பாதிக்கப்பட்ட வடிவேலிடம் போலீசார் ஒப்படைத்தனர். 2 மணி நேரத்தில் நகையை மீட்டு கொடுத்த போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்ததோடு, நகை பணத்தோடு பயணிக்கும் போது அலட்சியமாக நடக்கவேண்டாம் என பொதுமக்களுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார். துரிதமாக செயல்பட்டு நகையை மீட்ட கோயம்பேடு பேருந்து நிலைய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தாறுமாறாக ஓடிய காரால் சாலையோரம் நின்றிருந்த சிறுவன் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.