ETV Bharat / state

பொன்பரப்பியில் தலித் குடியிருப்பு மீது தாக்குதல்; சிபிஎம் கடும் கண்டனம்!

author img

By

Published : Apr 21, 2019, 3:25 PM IST

சென்னை:சமூக நல்லிணக்கத்துடன் வாழும் மக்கள் மத்தியில், குறுகிய அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டி அரசியல் லாபம் தேட முயற்சிக்கும் விஷமிகளின் செயல்களுக்கு தமிழ்நாடு மக்கள் இரையாகக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொன்பரப்பி சம்பவத்திற்கு சிபிஎம் கண்டனம்

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் 20க்கும் மேற்பட்ட தலித் மக்களின் வீடுகள் காவல் துறையின் முன்னிலையிலேயே அடித்து நொறுக்கப்பட்டுள்ளதையும், அப்பாவி மக்கள் பலர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுவதால், தோல்வி பயத்தால் பாமக மற்றும் இந்து முன்னணியினர் இணைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலித் மக்கள் வீடுகளை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களையும் கொளுத்தி உள்ளனர். இதில் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 20-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது என தலைமை தேர்தல் அலுவலர் தெரிவித்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக பல வாக்குச்சாவடிகளில் பாமக மற்றும் பாஜகவினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து, வாக்களிக்க வந்த மாற்றுக் கட்சியினரை மிரட்டியிருப்பது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளது. இதேபோல் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு அடுத்த கீழ் விஷாரத்திலுள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். வேலு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இளவழகன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் வாக்குச்சாவடிக்குள் பகிரங்கமாக அத்துமீறி உள்ளே நுழைய முற்பட்ட போது, துணை ராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கலைத்துள்ளனர்.

தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் நத்தமேடு வாக்குச்சாவடியைக் கைப்பற்றி கள்ளவாக்கு போட்டுள்ளது பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ளது. இங்கு மறுவாக்குப்பதிவு நடத்திட வேண்டுமென சிபிஐ(எம்) வலியுறுத்துகிறது. பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, காஞ்சிபுரம் அருகே திருப்போரூரில் நடந்த கூட்டத்தில் பேசியபோது, “நாம் மட்டும் தான் பூத்திலிருப்போம், சொல்வது புரிகிறதா?” என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பேச்சுகள்தான் இந்த சம்பவங்களுக்கு அடித்தளமிட்டிருக்கிறது.

அப்போதே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்காது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதுபோல புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியிலும் இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவும், பாஜகவும் இணைந்து பல இடங்களில் சட்டம் - ஒழுங்கை கேள்விக்குறியாக்குகின்ற வகையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டி, தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் அரசியல் லாபம் தேடுவதற்காகவே இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைஅரங்கேற்றியுள்ளனர்.

எனவே, அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் தலித் மக்கள் வீடுகளை சூறையாடியவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசையும், தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறது.

சமூக நல்லிணக்கத்துடன் வாழும் மக்கள் மத்தியில், குறுகிய அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டி அரசியல் லாபம் தேட முற்படும் இதுபோன்ற விஷமிகளின் செயல்களுக்கு தமிழ்நாடு மக்கள் இரையாகக் கூடாது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் 20க்கும் மேற்பட்ட தலித் மக்களின் வீடுகள் காவல் துறையின் முன்னிலையிலேயே அடித்து நொறுக்கப்பட்டுள்ளதையும், அப்பாவி மக்கள் பலர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுவதால், தோல்வி பயத்தால் பாமக மற்றும் இந்து முன்னணியினர் இணைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலித் மக்கள் வீடுகளை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கியதோடு, வாகனங்களையும் கொளுத்தி உள்ளனர். இதில் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 20-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது என தலைமை தேர்தல் அலுவலர் தெரிவித்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக பல வாக்குச்சாவடிகளில் பாமக மற்றும் பாஜகவினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து, வாக்களிக்க வந்த மாற்றுக் கட்சியினரை மிரட்டியிருப்பது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளது. இதேபோல் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு அடுத்த கீழ் விஷாரத்திலுள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். வேலு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இளவழகன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் வாக்குச்சாவடிக்குள் பகிரங்கமாக அத்துமீறி உள்ளே நுழைய முற்பட்ட போது, துணை ராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கலைத்துள்ளனர்.

தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் நத்தமேடு வாக்குச்சாவடியைக் கைப்பற்றி கள்ளவாக்கு போட்டுள்ளது பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ளது. இங்கு மறுவாக்குப்பதிவு நடத்திட வேண்டுமென சிபிஐ(எம்) வலியுறுத்துகிறது. பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, காஞ்சிபுரம் அருகே திருப்போரூரில் நடந்த கூட்டத்தில் பேசியபோது, “நாம் மட்டும் தான் பூத்திலிருப்போம், சொல்வது புரிகிறதா?” என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பேச்சுகள்தான் இந்த சம்பவங்களுக்கு அடித்தளமிட்டிருக்கிறது.

அப்போதே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்காது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதுபோல புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியிலும் இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவும், பாஜகவும் இணைந்து பல இடங்களில் சட்டம் - ஒழுங்கை கேள்விக்குறியாக்குகின்ற வகையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டி, தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் அரசியல் லாபம் தேடுவதற்காகவே இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைஅரங்கேற்றியுள்ளனர்.

எனவே, அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் தலித் மக்கள் வீடுகளை சூறையாடியவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசையும், தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறது.

சமூக நல்லிணக்கத்துடன் வாழும் மக்கள் மத்தியில், குறுகிய அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டி அரசியல் லாபம் தேட முற்படும் இதுபோன்ற விஷமிகளின் செயல்களுக்கு தமிழ்நாடு மக்கள் இரையாகக் கூடாது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் 20க்கும் மேற்பட்ட தலித் மக்களின் வீடுகள் காவல்துறையின் முன்னிலையிலேயே அடித்து நொறுக்கப்பட்டுள்ளதையும், அப்பாவி மக்கள் பலர் கடுமையானதாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுவதால்தோல்வி பயத்தால் பாமக மற்றும் இந்து முன்னணியினர் இணைந்துவன்முறையில் ஈடுபட்டுள்ளனர்இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலித் மக்கள் வீடுகளை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கியதோடுவாகனங்களையும் கொளுத்தி உள்ளனர்இதில் ஒருவர்தலையில் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 20க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்ஆனால் அதற்கு நேர்மாறாக பல வாக்குச்சாவடிகளில் பாமக மற்றும்பாஜகவினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்துவாக்களிக்க வந்த மாற்றுக் கட்சியினரை மிரட்டியிருப்பது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளது.

இதேபோல் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு அடுத்த கீழ்விஷாரத்திலுள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்வேலுமுன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்இளவழகன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் வாக்குச்சாவடிக்குள் பகிரங்கமாக அத்துமீறி உள்ளே நுழைய முற்பட்ட போது துணை ராணுவப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கலைத்துள்ளனர்.

தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் நத்தமேடு வாக்குச்சாவடியைக் கைப்பற்றி கள்ள வாக்கு போட்டுள்ளது பத்திரிகைகளில்அம்பலமாகியுள்ளதுஇங்கு மறுவாக்குபதிவு நடத்திட வேண்டுமென சிபிஐ(எம்வலியுறுத்துகிறது.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்காஞ்சிபுரம் அருகே திருப்போரூரில் நடந்த கூட்டத்தில் பேசிய போது “நாம் மட்டும் தான் பூத்திலிருப்போம்சொல்வது புரிகிறதா?” என்றுவன்முறையை தூண்டும் வகையில் பேசிய பேச்சுக்கள் தான் இந்த சம்பவங்களுக்கு அடித்தளமிட்டிருக்கிறதுஅப்போதே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்றவன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்காது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதுபோல புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதியிலும் இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதுஅதிமுகவும்பாஜகவும் இணைந்து பல இடங்களில் சட்டம் - ஒழுங்கைகேள்விக்குறியாக்குகின்ற வகையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டிதோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் அரசியல் லாபம் தேடுவதற்காகவே இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைஅரங்கேற்றியுள்ளனர்.

எனவேஅரியலூர் மாவட்டம்பொன்பரப்பியில் தலித் மக்கள் வீடுகளை சூறையாடியவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டிவன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும்பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசையும்தேர்தல்ஆணையத்தையும் வலியுறுத்துகிறது.

சமூக நல்லிணக்கத்துடன் வாழும் மக்கள் மத்தியில்குறுகிய அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டி அரசியல் லாபம் தேட முற்படும் இதுபோன்ற விஷமிகளின் செயல்களுக்கு தமிழகமக்கள் இரையாகக் கூடாது” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.