ETV Bharat / state

’சூழலியல் சேதங்களை விளைவிப்பதில் ஆற்றல் துறைக்கே முதன்மைப் பங்கு’ - மார்டின் ஷெஃப்லெர் - chennai latest news

மிகப்பெரிய சூழலியல் சேதங்களை விளைவிக்கும் தொழில் துறைகளில், ஆற்றல் துறையே முதன்மைப் பங்கு வகிக்கிறது என மார்ட்டின் ஷெஃப்லெர் தெரிவித்தாக காலநிலை மாற்ற ஆராய்ச்சி்யாளர் சிபி அரசு தெரிவித்துள்ளார்.

மார்டின் ஷெஃப்லெர்
மார்டின் ஷெஃப்லெர்
author img

By

Published : Sep 18, 2021, 10:46 PM IST

சென்னை: ஆஸ்த்ரியாவைச் சேர்ந்த மார்டின் ஷெர்ப்லெர், தமிழ்நாட்டில் ஆரோவில் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனத்தை தொடங்கி பல தன்னார்வ அமைப்புகள், மாநில அரசு ஆகியவற்றுடன் இணைந்து, நகர்ப்புறங்கள், தொழிற்சாலைகள் சார்ந்த சூழலுக்கான வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதில் உதவி வருகிறார்.

இவரிடத்தில் காலநிலை ஆராய்ச்சியாளர் சிபி அரசு முன்வைத்த கேள்விகளையும், அதற்கு அவர் அளித்த பதில்களையும் கீழே காணலாம்.

நீண்டகால வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் உள்ள புதிய தொழில் வாய்ப்புகள் என்னென்ன?

சூரிய மின்கூரை (Rooftop Solar) எதிர்கால திட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இனிவரும் நாட்களில் மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்தி கட்டமைப்பை அமைப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். உள்ளூர் சூரிய மின்கூரை அமைக்கும் தொழிலைத் தொடங்கினால் அதன்மூலம், எதிர்காலத்தில் நன்கு பலனடையலாம்.

IT, ITES பின்புலம் உள்ளவர்கள், இதுபோன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி கட்டமைப்புகளை கூடுதல் திறன் மிக்கதாக மாற்றுவதற்கான மென்பொருள் சார்ந்த தீர்வுகளை வழங்குவது குறித்தும் திட்டமிடலாம்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க அரசு செய்யவேண்டியவை என்ன?

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த மாற்றத்தை எளிதில் மேற்கொள்ள அரசு வழிசெய்யவேண்டும். TANGEDCO மாதிரியான மின் விநியோகஸ்தர்கள் மின் உற்பத்திக்கோ அல்லது அதற்கு செலுத்தும் விலை குறித்தோ கவலை கொள்ள வேண்டியதில்லை. இதற்குரிய வகையிலான கொள்கை மாற்றம் வேண்டும் என மார்ட்டின் ஷெஃப்லெர் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறும் நடைமுறை சராசரி மக்களுக்கு, ஒரு சமூகத்திற்கு எந்தவிதத்தில் பயனுள்ளதாக இருக்கும்?

சூழலியல் சேதங்களை விளைவிப்பதில் ஆற்றல் துறையே முதன்மைப் பங்கு வகிக்கிறது. சூரிய மின்கூரை அல்லது வேறு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டிற்கு மாறுவதனை நீண்டகால வகையில் கணக்கிட்டால் மின்சாரத்திற்காக ஒருவர் செலுத்தும் கட்டணம் குறைகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தும் மக்களால் அதிகளவிலான பணத்தைச் சேமிக்க முடியும்

மேற்கண்டவாறு உரையாடல் நிகழ்ந்து முடிந்தது.

இதையும் படிங்க: தமிழ்நாடு இளம் விஞ்ஞானிக்கு EARTHSHOT விருது..!

சென்னை: ஆஸ்த்ரியாவைச் சேர்ந்த மார்டின் ஷெர்ப்லெர், தமிழ்நாட்டில் ஆரோவில் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனத்தை தொடங்கி பல தன்னார்வ அமைப்புகள், மாநில அரசு ஆகியவற்றுடன் இணைந்து, நகர்ப்புறங்கள், தொழிற்சாலைகள் சார்ந்த சூழலுக்கான வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதில் உதவி வருகிறார்.

இவரிடத்தில் காலநிலை ஆராய்ச்சியாளர் சிபி அரசு முன்வைத்த கேள்விகளையும், அதற்கு அவர் அளித்த பதில்களையும் கீழே காணலாம்.

நீண்டகால வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் உள்ள புதிய தொழில் வாய்ப்புகள் என்னென்ன?

சூரிய மின்கூரை (Rooftop Solar) எதிர்கால திட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இனிவரும் நாட்களில் மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்தி கட்டமைப்பை அமைப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். உள்ளூர் சூரிய மின்கூரை அமைக்கும் தொழிலைத் தொடங்கினால் அதன்மூலம், எதிர்காலத்தில் நன்கு பலனடையலாம்.

IT, ITES பின்புலம் உள்ளவர்கள், இதுபோன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி கட்டமைப்புகளை கூடுதல் திறன் மிக்கதாக மாற்றுவதற்கான மென்பொருள் சார்ந்த தீர்வுகளை வழங்குவது குறித்தும் திட்டமிடலாம்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க அரசு செய்யவேண்டியவை என்ன?

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த மாற்றத்தை எளிதில் மேற்கொள்ள அரசு வழிசெய்யவேண்டும். TANGEDCO மாதிரியான மின் விநியோகஸ்தர்கள் மின் உற்பத்திக்கோ அல்லது அதற்கு செலுத்தும் விலை குறித்தோ கவலை கொள்ள வேண்டியதில்லை. இதற்குரிய வகையிலான கொள்கை மாற்றம் வேண்டும் என மார்ட்டின் ஷெஃப்லெர் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறும் நடைமுறை சராசரி மக்களுக்கு, ஒரு சமூகத்திற்கு எந்தவிதத்தில் பயனுள்ளதாக இருக்கும்?

சூழலியல் சேதங்களை விளைவிப்பதில் ஆற்றல் துறையே முதன்மைப் பங்கு வகிக்கிறது. சூரிய மின்கூரை அல்லது வேறு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டிற்கு மாறுவதனை நீண்டகால வகையில் கணக்கிட்டால் மின்சாரத்திற்காக ஒருவர் செலுத்தும் கட்டணம் குறைகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தும் மக்களால் அதிகளவிலான பணத்தைச் சேமிக்க முடியும்

மேற்கண்டவாறு உரையாடல் நிகழ்ந்து முடிந்தது.

இதையும் படிங்க: தமிழ்நாடு இளம் விஞ்ஞானிக்கு EARTHSHOT விருது..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.