ETV Bharat / state

இந்திய அரசின் தடை உத்தரவை மீறி ஏமன் நாட்டிற்கு சென்று வந்தவர் கைது!

author img

By

Published : Jul 1, 2021, 11:46 AM IST

பாதுகாப்பு காரணங்களுக்கான ஏமன் நாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்று திரும்பியவரை குடியுரிமை அலுவலர்கள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக ஏமன் நாட்டிற்கு சென்றவர் கைது
சட்டவிரோதமாக ஏமன் நாட்டிற்கு சென்றவர் கைது

சென்னை: சா்வதேச விமான நிலையத்தில் இருந்து கிரி (45) என்பவா் நேற்று (ஜுன்.30) இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் மூலம் கத்தாா் தலைநகா் தோகா செல்லவிருந்தார். அவ்விமானப் பயணிகளிடம் குடியுரிமை அலுவலர்கள் பாஸ்போா்ட், ஆவணங்களை சோதனை செய்தனர்.

அப்போது, கிரி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கத்தாா் நாட்டிற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து இந்திய அரசால் பயணிக்க தடை விதிக்கப்பட்ட ஏமன் நாட்டிற்கு சட்ட விரோதமாக சென்று வந்திருந்தது தெரியவந்தது.

ஏமன், லிபியா ஆகிய நாடுகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா்கள் செல்லக்கூடாது என்று ஒன்றிய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தடையை மீறி செல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த நடைமுறை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய அரசின் உத்தரவை மீறி ஏமன் நாட்டிற்கு சென்றதால், குடியுரிமை அலுவலர்கள் கிரியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினா். கத்தாரில் தான் பணியாற்றியபோது நிறுவனம் தன்னை ஏமனுக்கு அனுப்பியதால் சென்றேன் என்று அந்நபர் கூறிய நிலையிலும், குடியுரிமை அலுவர்கள் இந்த விளக்கத்தை ஏற்காமல் அவரது பயணத்தை ரத்து செய்தனர்.

மேலும் அவரைக் கைது செய்து சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: தாஜ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: சா்வதேச விமான நிலையத்தில் இருந்து கிரி (45) என்பவா் நேற்று (ஜுன்.30) இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் மூலம் கத்தாா் தலைநகா் தோகா செல்லவிருந்தார். அவ்விமானப் பயணிகளிடம் குடியுரிமை அலுவலர்கள் பாஸ்போா்ட், ஆவணங்களை சோதனை செய்தனர்.

அப்போது, கிரி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கத்தாா் நாட்டிற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து இந்திய அரசால் பயணிக்க தடை விதிக்கப்பட்ட ஏமன் நாட்டிற்கு சட்ட விரோதமாக சென்று வந்திருந்தது தெரியவந்தது.

ஏமன், லிபியா ஆகிய நாடுகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா்கள் செல்லக்கூடாது என்று ஒன்றிய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தடையை மீறி செல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த நடைமுறை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய அரசின் உத்தரவை மீறி ஏமன் நாட்டிற்கு சென்றதால், குடியுரிமை அலுவலர்கள் கிரியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினா். கத்தாரில் தான் பணியாற்றியபோது நிறுவனம் தன்னை ஏமனுக்கு அனுப்பியதால் சென்றேன் என்று அந்நபர் கூறிய நிலையிலும், குடியுரிமை அலுவர்கள் இந்த விளக்கத்தை ஏற்காமல் அவரது பயணத்தை ரத்து செய்தனர்.

மேலும் அவரைக் கைது செய்து சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: தாஜ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.