ETV Bharat / state

மாலை போட்டவர் போல் நடித்து திருடியவர் கைது: விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்!

author img

By

Published : Dec 8, 2019, 8:20 PM IST

சென்னை: ஐயப்பன் கோயிலில் மாலை போட்டவர்போல் நடித்து திருட்டில் ஈடுபட்ட பல வழக்குகளில் தொடர்புடைய திருடனை காவல் துறையினர் கைது செய்தனர்.

Man arrested for theft
Man arrested for theft

சென்னை காரப்பக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் அப்பாவிபோல புகுந்து திருடும் பழக்கம் உடைய இவர், கடந்த ஆறாம் தேதி கே.கே.நகர் ஐயப்பன் கோயிலில் சிலர் இருமுடிகட்டி சபரிமலைக்குப் புறப்படுவதை அறிந்து ஐயப்பன் சாமிக்கு மாலை அணிந்தவர்போல் வேடமிட்டு அங்கு சென்றுள்ளார்.

அதன்பின், கோயிலிலிருந்த பிரதீபா என்பவரின் கைப்பையைத் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து பிரதீபா கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும் கைப்பையில் தனது செல்போன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், கோயிலிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது செந்தில்குமார் கைப்பையைத் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, பிரதீபாவின் செல்போன் சிக்னலை வைத்து காவல் துறையினர் செந்தில்குமாரை பின்தொடர்ந்து நெசப்பக்கம் அருகே மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. கடந்த மாதம் மேற்கு மாம்பலத்திலுள்ள திருமண மண்டபத்தில் மொய்ப் பணம், தங்க நகைகள் ஆகியவற்றைத் திருடியதும், ஏற்கனவே தனது மூன்றாவது மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் மதுரவாயல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.

சிசிடிவி காட்சி

மேலும் நெசபாகத்திலுள்ள ஒரு கோயில் உண்டியலை திருடியது, பாண்டி பஜாரில் செல்போன் திருடியது என பல திருட்டு வழக்குகளில் இவர் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க:

மருத்துவமனையில் பழக்கம்... 1 வாரத்தில் தனியாக அழைத்து வன்கொடுமை... பாய்ந்த போக்சோ!

சென்னை காரப்பக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் அப்பாவிபோல புகுந்து திருடும் பழக்கம் உடைய இவர், கடந்த ஆறாம் தேதி கே.கே.நகர் ஐயப்பன் கோயிலில் சிலர் இருமுடிகட்டி சபரிமலைக்குப் புறப்படுவதை அறிந்து ஐயப்பன் சாமிக்கு மாலை அணிந்தவர்போல் வேடமிட்டு அங்கு சென்றுள்ளார்.

அதன்பின், கோயிலிலிருந்த பிரதீபா என்பவரின் கைப்பையைத் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து பிரதீபா கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும் கைப்பையில் தனது செல்போன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், கோயிலிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது செந்தில்குமார் கைப்பையைத் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதையடுத்து, பிரதீபாவின் செல்போன் சிக்னலை வைத்து காவல் துறையினர் செந்தில்குமாரை பின்தொடர்ந்து நெசப்பக்கம் அருகே மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. கடந்த மாதம் மேற்கு மாம்பலத்திலுள்ள திருமண மண்டபத்தில் மொய்ப் பணம், தங்க நகைகள் ஆகியவற்றைத் திருடியதும், ஏற்கனவே தனது மூன்றாவது மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் மதுரவாயல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது.

சிசிடிவி காட்சி

மேலும் நெசபாகத்திலுள்ள ஒரு கோயில் உண்டியலை திருடியது, பாண்டி பஜாரில் செல்போன் திருடியது என பல திருட்டு வழக்குகளில் இவர் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க:

மருத்துவமனையில் பழக்கம்... 1 வாரத்தில் தனியாக அழைத்து வன்கொடுமை... பாய்ந்த போக்சோ!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 08.12.19

சென்னை கே.கே.நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் மாலைபோட்டவர் போல நடித்து திருட்டில் ஈடுபட்டவர் கைது ..

காரப்பக்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் அப்பாவி போல புகுந்து திருடும் பழக்கம் உடையவர். கடந்த 6 ஆம் தேதி கே.கே. நகர் ஐயப்பன் கோவிலில் சிலர் இருமுடிகட்டி சபரிமலைக்கு புறப்படுவதை அறிந்து சபரிமலைக்கு மாலை அணிந்தவர் போல வேடமிட்டு அங்கு சென்றார். பின்னர் அங்கிருந்த கைப்பையை தூக்கி கொண்டு நைசாக நழுவிவிட்டார். பின்னர் கைப்பைக்கு சொந்தக்காரரான பிரதீபா கைப்பை காணாமல் போனது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கைப்பையில் தனது செல்போன் இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த செல்போன் சிக்னலை வைத்து தனிப்படையினர் செந்தில் குமாரை பின்தொடர்ந்துள்ளனர். அதே நேரம் கோவிலில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்ததில் செந்தில்குமார் கைப்பையை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
செந்தில் குமாரை பின் தொடர்ந்து தனிப்படையினர் நெசப்பக்கம் அருகே ஒரு கடையில் வைத்து செந்தில் குமாரை மடக்கிப்பிடித்தினர்.

அதேநேரம் கடந்த மாதம் மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மொய் பணம் மற்றும் தங்க நகைகளை திருடிய வழக்கில், திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகி இருந்த திருடனும் செந்தில்குமார் தான் என்பதும் உறுதியானது.
செந்தில்குமார் ஏற்கனவே தனது 3 வது மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் மதுரவாயல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்.
திருமண வீடுகளில் நடனமாடும் குழு நடத்திவந்த அவர், பின் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வந்த அவர் பின்னர் திருட்டு தொழில் செய்ய தொடங்கியுள்ளார்.

கடந்த மாதம் நெசபாகத்தில் உள்ள ஒரு கோவிலில் உண்டியலை திருடியது, பாண்டிபஜாரில் செல்போன் திருட்டு என பல திருட்டு வழக்குகளில் இவர் ஈடுபட்டுள்ளார் என்கின்றனர் காவல்துறையினர்..

tn_che_01_thief_arrested_for_robbery_case_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.