ETV Bharat / state

நல்லது நடந்தால் சரி: மத்திய சுகாதாரத் துறையின் அழைப்பு குறித்து மதுரை எம்பி கருத்து

author img

By

Published : Apr 28, 2021, 6:08 AM IST

மத்திய சுகாதார அமைச்சகம் பதிலளித்திருக்கும் நிலையில், நல்லது நடந்தால் சரி என்று மதுரை மக்களவை எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார துறையின் உடனடி அழைப்பு குறித்து மதுரை எம்.பி கருத்து
மத்திய சுகாதார துறையின் உடனடி அழைப்பு குறித்து மதுரை எம்.பி கருத்து

இது தொடர்பாக எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்திருப்பதாவது:

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் அலுவலகத்திலிருந்து ஏப்ரல் 27ஆம் தேதி தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அப்போது அமைச்சரின் கூடுதல் தனிச் செயலர் மதன் மோகன் தாஸ் பேசினார்.

அதில், "கடந்த 23ஆம் தேதி நீங்கள் அமைச்சருக்கு எழுதிய கடிதம் குறித்து உரிய முடிவெடுத்து உங்களுக்குத் தெரிவிக்கிறோம்" என்றார்.

வழக்கமாக எழுதப்படும் கடிதத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்ற சம்பிரதாயமான பதிலோ அல்லது விளக்கத்துடனான பதிலோ வரும். ஆனால் கடிதம் கண்டவுடன் முடிவெடுத்து உங்களுக்குச் சொல்கிறோம் என்று தொலைபேசியில் அழைத்துச் சொல்வது இதுவரை இல்லாத ஒன்றாக உள்ளது. நல்லது நடந்தால் சரிதான். நல்லதையே எதிர்பார்ப்போம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் முக்கியக் கோரிக்கைகள் பின்வருமாறு:

  • புதிய விலைக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும். தடுப்பூசிக்கு சந்தையைத் திறந்துவிடுவது கூடாது.
  • தடுப்பூசி அளிப்பிற்காக, செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ, நீலகிரி பாஸ்டியர் ஆய்வகம், சென்னையின் பி.சி.ஜி. ஆய்வகம், சிம்லாவின் மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் போன்ற அரசு மருத்துவ நிறுவனங்கள் மூலம் உற்பத்தி அதிகரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
  • ஏற்றுமதி முறையாக நெறிப்படுத்தப்பட்டு உள்நாட்டுத் தேவை சற்றும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
  • 'கட்டாய உரிமம்' வழங்கப்படுவதை உறுதிசெய்து எல்லோருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்தல் வேண்டும்.
  • அமெரிக்க ஐக்கிய நாடுகள், மருத்துவ துணைப் பொருள்கள் மீது விதித்துள்ள தடையை நீக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
  • மத்திய அரசே தடுப்பூசிக்கான முழுச் செலவையும் ஏற்பதோடு எல்லோருக்கும் கட்டணமில்லா தடுப்பூசியை உறுதிசெய்ய வேண்டும்.
  • 'ஊரடங்கு' என்பது தீர்வுகளுக்கான கடைசி தெரிவாக இருக்க வேண்டுமென்று நமது பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். எனது வேண்டுகோள் இதுதான். தடுப்பூசி என்பது தீர்வுக்கான முதல் தெரிவு. அதற்கான கவனத்தை அரசாங்கம் செலுத்த வேண்டாமா?
  • மத்திய அரசு இதற்கான நேர்மறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா?

இது தொடர்பாக எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்திருப்பதாவது:

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் அலுவலகத்திலிருந்து ஏப்ரல் 27ஆம் தேதி தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அப்போது அமைச்சரின் கூடுதல் தனிச் செயலர் மதன் மோகன் தாஸ் பேசினார்.

அதில், "கடந்த 23ஆம் தேதி நீங்கள் அமைச்சருக்கு எழுதிய கடிதம் குறித்து உரிய முடிவெடுத்து உங்களுக்குத் தெரிவிக்கிறோம்" என்றார்.

வழக்கமாக எழுதப்படும் கடிதத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்ற சம்பிரதாயமான பதிலோ அல்லது விளக்கத்துடனான பதிலோ வரும். ஆனால் கடிதம் கண்டவுடன் முடிவெடுத்து உங்களுக்குச் சொல்கிறோம் என்று தொலைபேசியில் அழைத்துச் சொல்வது இதுவரை இல்லாத ஒன்றாக உள்ளது. நல்லது நடந்தால் சரிதான். நல்லதையே எதிர்பார்ப்போம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் முக்கியக் கோரிக்கைகள் பின்வருமாறு:

  • புதிய விலைக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும். தடுப்பூசிக்கு சந்தையைத் திறந்துவிடுவது கூடாது.
  • தடுப்பூசி அளிப்பிற்காக, செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ, நீலகிரி பாஸ்டியர் ஆய்வகம், சென்னையின் பி.சி.ஜி. ஆய்வகம், சிம்லாவின் மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் போன்ற அரசு மருத்துவ நிறுவனங்கள் மூலம் உற்பத்தி அதிகரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
  • ஏற்றுமதி முறையாக நெறிப்படுத்தப்பட்டு உள்நாட்டுத் தேவை சற்றும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
  • 'கட்டாய உரிமம்' வழங்கப்படுவதை உறுதிசெய்து எல்லோருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்தல் வேண்டும்.
  • அமெரிக்க ஐக்கிய நாடுகள், மருத்துவ துணைப் பொருள்கள் மீது விதித்துள்ள தடையை நீக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
  • மத்திய அரசே தடுப்பூசிக்கான முழுச் செலவையும் ஏற்பதோடு எல்லோருக்கும் கட்டணமில்லா தடுப்பூசியை உறுதிசெய்ய வேண்டும்.
  • 'ஊரடங்கு' என்பது தீர்வுகளுக்கான கடைசி தெரிவாக இருக்க வேண்டுமென்று நமது பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். எனது வேண்டுகோள் இதுதான். தடுப்பூசி என்பது தீர்வுக்கான முதல் தெரிவு. அதற்கான கவனத்தை அரசாங்கம் செலுத்த வேண்டாமா?
  • மத்திய அரசு இதற்கான நேர்மறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.