ETV Bharat / state

Senthil Balaji Case: செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம்; ஆட்கொணர்வு மனு தள்ளுபடி: நீதிபதி கார்த்திகேயன் அதிரடி உத்தரவு

author img

By

Published : Jul 14, 2023, 4:06 PM IST

Updated : Jul 14, 2023, 5:52 PM IST

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர் தான் அவரை காவலில் எடுப்பது அவசியம், தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் அவர்தான் நிரூபிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதையடுத்து வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு அவர் முன் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில், மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்ட விரோதமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்வதற்கு முன்பு என்ன காரணத்திற்காக கைது செய்கிறோம் என்பதை யாரிடமும் தெரிவிக்காததால், அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத் துறை தரப்பில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் இயற்றும் முன், சட்டவிரோத பண பரிமாற்றங்களால் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது, ஐ.நா.வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது குறித்து விளக்கிய துஷார் மேத்தா, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத் துறையின் கடமை எனவும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது என்பது வழக்கை புலன் விசாரணை செய்யும் அமலாக்கத் துறையின் கடமையை மறுப்பதாகும்.

ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணை தான் எனச் சுட்டிக்காட்டிய அவர், உரிய காரணங்கள் இல்லாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வகை செய்துள்ளதால், 2005ம் ஆண்டு முதல் இதுவரை, இச்சட்டத்தின் கீழ் 330 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமலாக்கத் துறை புலன் விசாரணை செய்ய முடியாது என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை நிராகரித்த அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர், அமலாக்கத் துறையின் புலன் விசாரணையால், வங்கி மோசடி வழக்குகளில் 19,000 கோடி ரூபாய் பணத்தை மீட்டு வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம் தானே தவிர, அந்த ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது என்பதால் புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது.

கைதுக்கு பிறகும், புகார் தாக்கலுக்கு பிறகும், புலன் விசாரணை செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் மேல் விசாரணை செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டிய சொலிசிட்டர் ஜெனரல், சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் குறைந்தபட்ச தண்டனை ஏழு ஆண்டுகள் என்பதாலும், கைது செய்த அமலாக்கத் துறை ஜாமீன் வழங்க முடியாது என்பதாலும் அமலாக்கத் துறைக்கு காவல் துறை அதிகாரம் வழங்கப்படவில்லை.

ஆனால், சுங்க வரிச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் ஓராண்டு முதல் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்த அதிகாரிகளே ஜாமீனில் விடுதலை செய்யக் கூடிய குற்றங்களும் உள்ளதால் அந்த சட்டங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காவல் துறை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை எனவும், கைது நடவடிக்கை சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது.

காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி தொடர்ந்து நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு என்பது, ஜாமீன் வழங்க மறுத்தது தான் எனவும், அதன் காரணமாக அமலாக்கப் பிரிவு காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது. அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க கோரி மனுத்தாக்கல் செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை எனவும், அப்படி காவல் கோரியது நீதிமன்ற உத்தரவை மீறியதல்ல. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத காவலில் இல்லை எனவும், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி பரத சக்ரவர்த்தி வழங்கிய தீர்ப்பை ஏற்று மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் அல்ல, ஆனால் அவர்கள் ஒருவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்டவில்லை, விசாரணைக்கு தேவைப்பட்டால் காவலில் எடுத்து விசாரிக்கலாம்.

குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தான் நிரபராதி என நிரூபிக்க சட்டரீதியான உரிமை உண்டு. விசாரணையை நடக்க விடாமல் செய்ய உரிமை இல்லை. செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்ப்பட்டவர் தான் அவரை காவலில் எடுப்பது அவசியம், தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை காவலில் இருந்த நாட்களாக கருத முடியாது. அவரது சிகிச்சைக்கு பிறகு அவரை கஸ்டடி எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம்.

கைதுக்கான காரணங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தெரியும். காலை முதல் அவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் இருந்து சோதனை நடத்தியுள்ளனர். நீதிமன்ற காவலில் வைத்த பிறகு ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. கைதுக்கான காரணங்கள் சரி என்று கருதி தான் அவர்கள் ஜாமீன் மனு அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பொழுது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது சரியானது அல்ல என உத்தரவிட்டார்.

சென்னை: செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதையடுத்து வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு அவர் முன் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில், மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்ட விரோதமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்வதற்கு முன்பு என்ன காரணத்திற்காக கைது செய்கிறோம் என்பதை யாரிடமும் தெரிவிக்காததால், அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத் துறை தரப்பில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் இயற்றும் முன், சட்டவிரோத பண பரிமாற்றங்களால் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது, ஐ.நா.வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது குறித்து விளக்கிய துஷார் மேத்தா, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத் துறையின் கடமை எனவும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது என்பது வழக்கை புலன் விசாரணை செய்யும் அமலாக்கத் துறையின் கடமையை மறுப்பதாகும்.

ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணை தான் எனச் சுட்டிக்காட்டிய அவர், உரிய காரணங்கள் இல்லாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வகை செய்துள்ளதால், 2005ம் ஆண்டு முதல் இதுவரை, இச்சட்டத்தின் கீழ் 330 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமலாக்கத் துறை புலன் விசாரணை செய்ய முடியாது என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை நிராகரித்த அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர், அமலாக்கத் துறையின் புலன் விசாரணையால், வங்கி மோசடி வழக்குகளில் 19,000 கோடி ரூபாய் பணத்தை மீட்டு வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம் தானே தவிர, அந்த ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது என்பதால் புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது.

கைதுக்கு பிறகும், புகார் தாக்கலுக்கு பிறகும், புலன் விசாரணை செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் மேல் விசாரணை செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டிய சொலிசிட்டர் ஜெனரல், சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் குறைந்தபட்ச தண்டனை ஏழு ஆண்டுகள் என்பதாலும், கைது செய்த அமலாக்கத் துறை ஜாமீன் வழங்க முடியாது என்பதாலும் அமலாக்கத் துறைக்கு காவல் துறை அதிகாரம் வழங்கப்படவில்லை.

ஆனால், சுங்க வரிச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் ஓராண்டு முதல் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்த அதிகாரிகளே ஜாமீனில் விடுதலை செய்யக் கூடிய குற்றங்களும் உள்ளதால் அந்த சட்டங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காவல் துறை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை எனவும், கைது நடவடிக்கை சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது.

காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி தொடர்ந்து நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு என்பது, ஜாமீன் வழங்க மறுத்தது தான் எனவும், அதன் காரணமாக அமலாக்கப் பிரிவு காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது. அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க கோரி மனுத்தாக்கல் செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை எனவும், அப்படி காவல் கோரியது நீதிமன்ற உத்தரவை மீறியதல்ல. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத காவலில் இல்லை எனவும், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி பரத சக்ரவர்த்தி வழங்கிய தீர்ப்பை ஏற்று மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் அல்ல, ஆனால் அவர்கள் ஒருவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்டவில்லை, விசாரணைக்கு தேவைப்பட்டால் காவலில் எடுத்து விசாரிக்கலாம்.

குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தான் நிரபராதி என நிரூபிக்க சட்டரீதியான உரிமை உண்டு. விசாரணையை நடக்க விடாமல் செய்ய உரிமை இல்லை. செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்ப்பட்டவர் தான் அவரை காவலில் எடுப்பது அவசியம், தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை காவலில் இருந்த நாட்களாக கருத முடியாது. அவரது சிகிச்சைக்கு பிறகு அவரை கஸ்டடி எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம்.

கைதுக்கான காரணங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தெரியும். காலை முதல் அவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் இருந்து சோதனை நடத்தியுள்ளனர். நீதிமன்ற காவலில் வைத்த பிறகு ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. கைதுக்கான காரணங்கள் சரி என்று கருதி தான் அவர்கள் ஜாமீன் மனு அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பொழுது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது சரியானது அல்ல என உத்தரவிட்டார்.

Last Updated : Jul 14, 2023, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.