சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் ஈரோட்டைச் சேர்ந்த மோன்ஸ் செல்வம்மின் என்பவர் பல அழகிய காட்சிகளை கார்ட்டூன் ஓவியமாக வரைந்து கின்னஸ் சாதனைக்கு வித்திட்டுள்ளார். சுமார் 351.70 மீட்டர் நீளத்தில் இவர் வரைந்த சித்திரத்தை கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு ஆஃப் காமிக்ஸ் 'ட்ரிப்' என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்துள்ளது.
இதனை அங்கீகரித்து கின்னஸ் ரெக்கார்டு சார்பில் இந்தியாவின் பிரதிநிதியான விவேக், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ்களை அவருக்கு வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார் மோன்ஸ் செல்வம்மினை வாழ்த்தி பேசினார்.
மேலும் ஓவியக்கலையில் உள்ள சிரமங்களையும் ஓவியக் கலையை பிரதானமாகக் கொண்டவர்கள் குறித்தும் பேசிய அவர் ஓவியக் கலையை பிரதானமாகக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் என்று தனது மன வருத்தத்தையும் பதிவு செய்தார். பின்பு அடுத்த ஜென்மத்தில் ஒரு நடிகராக பிறக்காமல் ஒரு ஓவியனாக பிறக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்தார்.
இதையும் படியுங்க:
31 உலக சாதனைகள் படைத்த ஒன்பது வயது சிறுமி!
காஷ்மீர் முதல் குமரி வரை மாரத்தான் ஓட்டம் - சாதித்த ராஜஸ்தான் பெண்!
பிளாஸ்டிக் விழிப்புணர்வில் கின்னஸ் சாதனை முயற்சி; மாற்றுத்திறனாளிகள் அசத்தல்!