ETV Bharat / state

சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பைக் மோதி விபத்து - வழக்கறிஞர் உயிரிழப்பு - bike hits lorry backside at tambaram by-pass

சென்னை: தாம்பரம் பைபாஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வழக்கறிஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

lawyer
வழக்கறிஞர் உயிரிழப்பு
author img

By

Published : Jan 10, 2020, 2:51 PM IST

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த ராகேஷ்(33) உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் மறைமலைநகரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு புரசைவாக்கத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார்.

அப்போது, தாம்பரம் மதுரவாயல் பைபாஸில் அதிவேகமாக பைக்கில் வந்துகொண்டிருந்த ராகேஷ் , சாலையில் நின்று கொண்டிருந்த கருங்கல் ஏற்றிச்சென்ற லாரியின் பின்புறத்தில் மோதி விபத்தில் சிக்கி ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பேச செல்போன் தர மறுப்பு: அதிகாலையில் நிகழ்ந்த ஆயுத தாக்குதல்!

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த ராகேஷ்(33) உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் மறைமலைநகரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு புரசைவாக்கத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார்.

அப்போது, தாம்பரம் மதுரவாயல் பைபாஸில் அதிவேகமாக பைக்கில் வந்துகொண்டிருந்த ராகேஷ் , சாலையில் நின்று கொண்டிருந்த கருங்கல் ஏற்றிச்சென்ற லாரியின் பின்புறத்தில் மோதி விபத்தில் சிக்கி ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பேச செல்போன் தர மறுப்பு: அதிகாலையில் நிகழ்ந்த ஆயுத தாக்குதல்!

Intro:தாம்பரம் பைபாஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரியின் மீது மோதிய விபத்தில் வழக்கறிஞர் உயிரிழப்புBody:தாம்பரம் பைபாஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரியின் மீது மோதிய விபத்தில் வழக்கறிஞர் உயிரிழப்பு

தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி பின்புரம் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்தவர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது தகவல் அறிந்து விரைந்து வந்த தாம்பரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணையில் உயிரிழந்தவர் புரசைவாக்கத்தை சேர்ந்த ராகேஷ்(33) உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்பதும் மறைமலைநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது தாம்பரம் மதுரவாயல் பைபாஸில் விழுப்புரத்தில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கருங்கல் ஏற்றிச்சென்ற லாரி பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்து அதிவேகமாக வந்த ராகேஷ் லாரியின் பின்புறம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.