சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த ராகேஷ்(33) உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் மறைமலைநகரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு புரசைவாக்கத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார்.
அப்போது, தாம்பரம் மதுரவாயல் பைபாஸில் அதிவேகமாக பைக்கில் வந்துகொண்டிருந்த ராகேஷ் , சாலையில் நின்று கொண்டிருந்த கருங்கல் ஏற்றிச்சென்ற லாரியின் பின்புறத்தில் மோதி விபத்தில் சிக்கி ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாம்பரம் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பேச செல்போன் தர மறுப்பு: அதிகாலையில் நிகழ்ந்த ஆயுத தாக்குதல்!