ETV Bharat / state

'விசாரணை மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசரச் சட்டம் பிறப்பியுங்கள்' - அமித் ஷாவுக்குக் கனிமொழி கடிதம் - காவல் துறை சித்ரவதைகள்

சென்னை: விசாரணை மரணங்களுக்கும் காவல் துறையினரின் சித்ரவதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஒரு அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும் என திமுக எம்பி கனிமொழி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Kanimozhi letter to Amit Shah
Kanimozhi letter to Amit Shah
author img

By

Published : Jul 2, 2020, 11:01 PM IST

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறை மரண விவகாரம் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு முன்னதாக இந்த வழக்கைக் கையிலெடுத்துள்ள சிபிசிஐடி, இதனை கொலை வழக்காக மாற்றி, சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களைக் கைதுசெய்து, சிறையில் அடைத்துள்ளது.

இந்த விவகாரத்திற்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்துவரும் திமுக எம்பி கனிமொழி தற்போது உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்ததில் விசாரணை மரணங்கள், காவல் துறை சித்ரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில், “இந்தியா முழுவதும் நடக்கும் விசாரணை மரணங்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுபோன்று காவல் துறை சித்ரவதைகளால் மரணிப்பவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

2010ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இதற்கு எதிரான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. மே 6ஆம் தேதி அம்மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதன்பின், ராஜ்யசபா ஆகஸ்ட் 31ஆம் தேதி மசோதாவை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது. தேர்வுக்குழு தன்னுடைய ஆய்வு முடிவை டிசம்பர் 6ஆம் தேதியே சமர்ப்பித்துவிட்டாலும், 2014ஆம் ஆண்டு 15ஆவது மக்களவை முடிவுக்கு வந்துவிட்டதால் அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் அப்படியே நின்றுபோனது.

இதற்கு முன்னதாக, 1997ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி சித்ரவதைகளுக்கு எதிரான ஐநா மாநாட்டில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த நோக்கத்திற்காகவே 2010ஆம் ஆண்டு மேற்கூறிய மசோதா கொண்டுவரப்பட்டது. இருப்பினும், அம்மாநாட்டை இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஆகவே சித்ரவதை செய்பவர்களைத் தண்டிக்கவும், அதனை வரையறுக்கவும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.

நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டில் (ஜனவரி-டிசம்பர்) மொத்தம் 1,723 விசாரணை மரண வழக்குகள் பதிவாகியிருப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தகவல் வெளியிட்டது. 2005ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையில் பதிவான 500 விசாரணை மரணங்களில், 281 வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால், இதில் ஒரு காவலர் கூட தண்டிக்கப்படவில்லை என்பதே வேதனைக்குரியது.

ஆகவே, விசாரணை மரணங்களுக்கும், காவல் துறையினரின் சித்ரவதைகளுக்கும் முடிவுகட்டும் வகையில் அவசரச் சட்டத்தை இயற்ற பிரதமரிடமும், அமைச்சரவையிடமும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உடனடி நடவடிக்கை தேவை - சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்துக்கு கனிமொழி கடிதம்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறை மரண விவகாரம் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு முன்னதாக இந்த வழக்கைக் கையிலெடுத்துள்ள சிபிசிஐடி, இதனை கொலை வழக்காக மாற்றி, சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களைக் கைதுசெய்து, சிறையில் அடைத்துள்ளது.

இந்த விவகாரத்திற்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்துவரும் திமுக எம்பி கனிமொழி தற்போது உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்ததில் விசாரணை மரணங்கள், காவல் துறை சித்ரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில், “இந்தியா முழுவதும் நடக்கும் விசாரணை மரணங்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுபோன்று காவல் துறை சித்ரவதைகளால் மரணிப்பவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

2010ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இதற்கு எதிரான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. மே 6ஆம் தேதி அம்மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதன்பின், ராஜ்யசபா ஆகஸ்ட் 31ஆம் தேதி மசோதாவை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது. தேர்வுக்குழு தன்னுடைய ஆய்வு முடிவை டிசம்பர் 6ஆம் தேதியே சமர்ப்பித்துவிட்டாலும், 2014ஆம் ஆண்டு 15ஆவது மக்களவை முடிவுக்கு வந்துவிட்டதால் அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் அப்படியே நின்றுபோனது.

இதற்கு முன்னதாக, 1997ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி சித்ரவதைகளுக்கு எதிரான ஐநா மாநாட்டில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த நோக்கத்திற்காகவே 2010ஆம் ஆண்டு மேற்கூறிய மசோதா கொண்டுவரப்பட்டது. இருப்பினும், அம்மாநாட்டை இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஆகவே சித்ரவதை செய்பவர்களைத் தண்டிக்கவும், அதனை வரையறுக்கவும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.

நாடு முழுவதும் 2019ஆம் ஆண்டில் (ஜனவரி-டிசம்பர்) மொத்தம் 1,723 விசாரணை மரண வழக்குகள் பதிவாகியிருப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தகவல் வெளியிட்டது. 2005ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையில் பதிவான 500 விசாரணை மரணங்களில், 281 வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால், இதில் ஒரு காவலர் கூட தண்டிக்கப்படவில்லை என்பதே வேதனைக்குரியது.

ஆகவே, விசாரணை மரணங்களுக்கும், காவல் துறையினரின் சித்ரவதைகளுக்கும் முடிவுகட்டும் வகையில் அவசரச் சட்டத்தை இயற்ற பிரதமரிடமும், அமைச்சரவையிடமும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உடனடி நடவடிக்கை தேவை - சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்துக்கு கனிமொழி கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.