சென்னை: அரசியல் மாணவர்கள் மீது தாக்கம் செலுத்தும் முன், மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருக்க வேண்டும் என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். மேலும், அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், காணொலி ஒன்றையும் இணைத்துள்ளார்.
அந்தக் காணொலியில், இந்திய அரசியல் காந்தி, நேரு, அம்பேத்கரை நமக்குத் தந்துள்ளது. அதுபோல, தற்போதுள்ள சூழலில் தலைவர்கள் உருவாவதற்கான வாய்ப்புள்ளது; சாத்தியமும் உள்ளது என்றும், சல்லிக்கட்டு தடை நீக்கத்திற்காகத் தமிழ்நாடு மாணவர்கள் நடத்திய போராட்டம் மொத்த இந்தியாவையும் கவனிக்கச் செய்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு மாணவர்களின் அரசியல் பங்களிப்பு என்பது உலகறிந்தது என்றும், வரும் தேர்தலில் மாணவர்கள் நேர்மையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் - மன்னர் திருமலை நாயக்கரின் 15-ஆம் வாரிசு அசோக் ராஜா