ETV Bharat / state

கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை..!

author img

By

Published : Mar 23, 2022, 2:24 PM IST

சென்னை அடுத்து மாங்காடு அருகே தேசிய கபடி வீராங்கனை தூக்கிட்டு உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kabaddi player commits suicide by hanging  Kabaddi player commits suicide  Kabaddi player commits suicide in chennai  chennai Kabaddi player commits suicide  suicide by hanging  தூக்கிட்டுத் தற்கொலை  கபடி வீராங்கனை தூக்கிட்டுத் தற்கொலை  சென்னையில் கபடி வீராங்கனை தூக்கிட்டுத் தற்கொலை
கபடி வீராங்கனை தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை: மாங்காடு அடுத்த மதனந்தபுரத்தைச் சேர்ந்த பானுமதி(25), இளங்கலை படிப்பை முடித்துள்ள நிலையில் முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார்.

இந்நிலையில் நேற்று (மார்ச் 22) மதியம் வீட்டிற்கு வந்த பானுமதி படுக்கை அறையில் தூக்கில் தொங்கினார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே பானுமதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்த தகவலை, மாங்காடு காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பானுமதி உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரித்தனர். இதில் உரிய வேலை கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் - போலீஸ் விசாரணை

சென்னை: மாங்காடு அடுத்த மதனந்தபுரத்தைச் சேர்ந்த பானுமதி(25), இளங்கலை படிப்பை முடித்துள்ள நிலையில் முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார்.

இந்நிலையில் நேற்று (மார்ச் 22) மதியம் வீட்டிற்கு வந்த பானுமதி படுக்கை அறையில் தூக்கில் தொங்கினார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே பானுமதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்த தகவலை, மாங்காடு காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பானுமதி உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரித்தனர். இதில் உரிய வேலை கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் - போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.