ETV Bharat / state

'கடந்த 24 மணி நேரத்தில் ரூ.100 கோடி பறிமுதல்’ - tamilnadu assembly election

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 100 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

ceo
தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்
author img

By

Published : Mar 13, 2021, 7:23 PM IST

தமிழ்நாடு முழுவதும் நேற்று (மார்ச்.12) வரை 99.68 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருள்கள், பணத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 99.68 கோடி ரூபாய் மதிப்பில் பணம், பரிசுப் பொருள்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Rs.100  crore seized
தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

மேலும், ரொக்கமாக 40 கோடி ரூபாய், 51 லட்சம் மதிப்புள்ள 23,000 லிட்டர் மதுபானம், 57 கோடி ரூபாய் மதிப்புள்ள 272 கிலோ தங்கம், ஒரு கோடி மதிப்புள்ள 182 கிலோ வெள்ளி ஆக மொத்தமாக 99.68 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற நகை - பணம் பறிமுதல்

தமிழ்நாடு முழுவதும் நேற்று (மார்ச்.12) வரை 99.68 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருள்கள், பணத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 99.68 கோடி ரூபாய் மதிப்பில் பணம், பரிசுப் பொருள்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Rs.100  crore seized
தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

மேலும், ரொக்கமாக 40 கோடி ரூபாய், 51 லட்சம் மதிப்புள்ள 23,000 லிட்டர் மதுபானம், 57 கோடி ரூபாய் மதிப்புள்ள 272 கிலோ தங்கம், ஒரு கோடி மதிப்புள்ள 182 கிலோ வெள்ளி ஆக மொத்தமாக 99.68 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற நகை - பணம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.