ETV Bharat / state

க. அன்பழகனுக்கு ஜி.கே.வாசன், ஜவாஹிருல்லா அஞ்சலி

author img

By

Published : Mar 7, 2020, 3:37 PM IST

சென்னை: மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

kanbalagan
kanbalagan

ஜவாஹிருல்லா அஞ்சலி

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திராவிட இயக்கத்தின் தூணாக விளங்கியவர் பேராசிரியர் அன்பழகன். திமுக பல்வேறு சோதனைகளைச் சந்தித்தபோதெல்லாம் கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்தவர்.

அவரை இழந்துவாடும் அவரின் குடும்பத்திற்கும், திமுக தலைவர் முதல் அக்கட்சியின் கடைக்கோடி தொண்டர் வரை உள்ள அனைத்து திமுக உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா

ஜி.கே. வாசன் அஞ்சலி

மறைந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தியபின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பேராசிரியர் அன்பழகன், பெரியார், அண்ணா, கருணாநிதியுடன் சேர்ந்து மிகச் சிறப்பாக பணியாற்றியவர். இவர் 43 ஆண்டு காலம் திமுக பொதுச்செயலாளராக கட்சியைக் கட்டிக்காத்தவர்.

ஜி.கே.வாசன், த.மா.க. தலைவர்

அனைவராலும் மதிக்கக்கூடிய தலைவராக தனது இறுதி மூச்சுவரை செயல்பட்டவர் பேராசிரியர். அவரது மறைவு திமுகவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியலுக்கே மிகப்பெரிய ஒரு பேரிழப்பாகும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'நம்மோடு பேராசிரியர் இல்லை என்றாலும் விண்ணிலிருந்து ஆசிர்வதிப்பார்'

ஜவாஹிருல்லா அஞ்சலி

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திராவிட இயக்கத்தின் தூணாக விளங்கியவர் பேராசிரியர் அன்பழகன். திமுக பல்வேறு சோதனைகளைச் சந்தித்தபோதெல்லாம் கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்தவர்.

அவரை இழந்துவாடும் அவரின் குடும்பத்திற்கும், திமுக தலைவர் முதல் அக்கட்சியின் கடைக்கோடி தொண்டர் வரை உள்ள அனைத்து திமுக உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா

ஜி.கே. வாசன் அஞ்சலி

மறைந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தியபின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பேராசிரியர் அன்பழகன், பெரியார், அண்ணா, கருணாநிதியுடன் சேர்ந்து மிகச் சிறப்பாக பணியாற்றியவர். இவர் 43 ஆண்டு காலம் திமுக பொதுச்செயலாளராக கட்சியைக் கட்டிக்காத்தவர்.

ஜி.கே.வாசன், த.மா.க. தலைவர்

அனைவராலும் மதிக்கக்கூடிய தலைவராக தனது இறுதி மூச்சுவரை செயல்பட்டவர் பேராசிரியர். அவரது மறைவு திமுகவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியலுக்கே மிகப்பெரிய ஒரு பேரிழப்பாகும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'நம்மோடு பேராசிரியர் இல்லை என்றாலும் விண்ணிலிருந்து ஆசிர்வதிப்பார்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.