ETV Bharat / state

தனிமைப்படுத்தும் மையங்களில் புற நோயாளி பிரிவு! - corna update in tn

சென்னை: கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களை தனிமைப்படுத்தும் மையங்களில் புற நோயாளிகளாக பரிசோதனை செய்து நோய் தீவிரமடையும்போது, மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

தனிமைபடுத்தும் மையங்களில் புற நோயாளி பிரிவு!
தனிமைபடுத்தும் மையங்களில் புற நோயாளி பிரிவு!
author img

By

Published : May 12, 2020, 8:53 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. சுமார் 6000 நோயாளிகளுக்கு மேல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனைகளில் போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது. தமிழ்நாட்டில் நோயாளிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்வதற்காக சுமார் 3 லட்சம் ஆர்டிபிசிஆர் கிட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டது. அதில் 11ஆம் தேதி வரையில், 2,54,899 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தனிமைபடுத்தும் மையங்களில் புற நோயாளி பிரிவு!
தனிமைப்படுத்தும் மையங்களில் புற நோயாளி பிரிவு!

மேலும் கடந்த இரண்டு நாட்களில் பரிசோதனை எண்ணிக்கையும், மக்கள் நல்வாழ்வுத்துறை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படாதவர்கள் அரசின் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கவைக்கப்பட்டு உணவு மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.

மேலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை தேவைப்படும் அவர்களைத் தவிர மற்றவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சைப் பெறலாம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்கனவே அறிவுரை வழங்கியுள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, தனிமைப்படுத்தும் மையங்களிலேயே புறநோயாளிகள் பிரிவினை நாளை முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது.

தனிமைபடுத்தும் மையங்களில் புற நோயாளி பிரிவு!
தனிமைப்படுத்தும் மையங்களில் புற நோயாளி பிரிவு!

ஏற்கனவே, கல்லூரிகளில் தனிமைப்படுத்த அவர்களுக்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்களை அங்குப் பணியில் அமர்த்தி அவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளவும், தீவிர சிகிச்சை தேவைப்படுவோர்களை மட்டுமே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும், மக்கள் நல்வாழ்வுத்துறை ஆலோசனை வழங்கவுள்ளது.

தமிழ்நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் இறப்பு விகிதம் குறைவு என தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதே நேரத்தில் 60 வயதைக் கடந்தவர்கள் 552 பேர் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, இருதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற வேறு நோய் உள்ளவர்களை தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாமல் 53 பேர் நேற்று வரை இறந்துள்ளனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தும் முகாம்களிலும் மூலமே புறநோயாளிகள் கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பது என்பது மேலும் நோய்த் தொற்றை அதிகரிக்கவும், இறப்பு விகிதத்தை அதிகரிக்க செய்யும் மருத்துவர்கள் கருதுகின்றனர்.

தமிழ்நாட்டிற்கு 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில், ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வரும் பயணிகள் அனைவரையும் தெற்கு ரயில்வே தனிமைப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அவர்களுக்கான ஆர்டி பிசிஆர் செய்துதான் தமிழ்நாட்டிற்குள் அனுப்ப முடியும் என்ற காரணத்தால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரையும் ரயில்வே தனிமைப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதன் மூலம் போதுமான வசதிகள் இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க...கரோனா: அதிக பாதிப்புக்குள்ளான ஐந்து மாநிலங்கள்

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. சுமார் 6000 நோயாளிகளுக்கு மேல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனைகளில் போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது. தமிழ்நாட்டில் நோயாளிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்வதற்காக சுமார் 3 லட்சம் ஆர்டிபிசிஆர் கிட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டது. அதில் 11ஆம் தேதி வரையில், 2,54,899 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தனிமைபடுத்தும் மையங்களில் புற நோயாளி பிரிவு!
தனிமைப்படுத்தும் மையங்களில் புற நோயாளி பிரிவு!

மேலும் கடந்த இரண்டு நாட்களில் பரிசோதனை எண்ணிக்கையும், மக்கள் நல்வாழ்வுத்துறை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படாதவர்கள் அரசின் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கவைக்கப்பட்டு உணவு மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.

மேலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை தேவைப்படும் அவர்களைத் தவிர மற்றவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சைப் பெறலாம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்கனவே அறிவுரை வழங்கியுள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, தனிமைப்படுத்தும் மையங்களிலேயே புறநோயாளிகள் பிரிவினை நாளை முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது.

தனிமைபடுத்தும் மையங்களில் புற நோயாளி பிரிவு!
தனிமைப்படுத்தும் மையங்களில் புற நோயாளி பிரிவு!

ஏற்கனவே, கல்லூரிகளில் தனிமைப்படுத்த அவர்களுக்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்களை அங்குப் பணியில் அமர்த்தி அவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளவும், தீவிர சிகிச்சை தேவைப்படுவோர்களை மட்டுமே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும், மக்கள் நல்வாழ்வுத்துறை ஆலோசனை வழங்கவுள்ளது.

தமிழ்நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் இறப்பு விகிதம் குறைவு என தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதே நேரத்தில் 60 வயதைக் கடந்தவர்கள் 552 பேர் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, இருதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற வேறு நோய் உள்ளவர்களை தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாமல் 53 பேர் நேற்று வரை இறந்துள்ளனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தும் முகாம்களிலும் மூலமே புறநோயாளிகள் கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பது என்பது மேலும் நோய்த் தொற்றை அதிகரிக்கவும், இறப்பு விகிதத்தை அதிகரிக்க செய்யும் மருத்துவர்கள் கருதுகின்றனர்.

தமிழ்நாட்டிற்கு 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில், ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வரும் பயணிகள் அனைவரையும் தெற்கு ரயில்வே தனிமைப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அவர்களுக்கான ஆர்டி பிசிஆர் செய்துதான் தமிழ்நாட்டிற்குள் அனுப்ப முடியும் என்ற காரணத்தால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரையும் ரயில்வே தனிமைப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதன் மூலம் போதுமான வசதிகள் இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க...கரோனா: அதிக பாதிப்புக்குள்ளான ஐந்து மாநிலங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.