ETV Bharat / state

ஆவடி அருகே சமையல் எண்ணெய் ஏற்றிவந்த வாகனம் தீப்பற்றி எரிந்து நாசம்! - In Chennai Mini van fire accident

சென்னை: ஆவடி அருகே சமையல் எண்ணெய் ஏற்றிவந்த மினி சரக்கு வாகனம் தீப்பற்றி எரிந்து நாசமானது.

சமையல் எண்ணெய் ஏற்றி வந்த வண்டியில் தீ!
சமையல் எண்ணெய் ஏற்றி வந்த வண்டியில் தீ!
author img

By

Published : Dec 20, 2019, 11:08 PM IST

சென்னை பூந்தமல்லியிலிருந்து நெமிலிச்சேரி நோக்கி சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு மினி சரக்கு வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் வந்தபோது ஓடும் வாகனத்தின் முன்பக்கத்திலிருந்து கரும்புகை வந்தது.

இதனைக்கண்ட ஓட்டுநர் வீராசாமி சுதாரித்துக்கொண்டு வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி உடனடியாக வேனிலிருந்து கீழே இறங்கினார். இதனிடையே தீ வேனின் முன்பக்கத்தில் மளமளவென எரியத் தொடங்கியது.

சமையல் எண்ணெய் ஏற்றிவந்த வண்டியில் தீ!

இது குறித்து தகவலறிந்து ஆவடி, பூந்தமல்லியிலிருந்து தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்துப் புலனாய்வுத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...அயன் பட பாணியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்: வெளிநாட்டவர் ஒருவர் கைது!

சென்னை பூந்தமல்லியிலிருந்து நெமிலிச்சேரி நோக்கி சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு மினி சரக்கு வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் வந்தபோது ஓடும் வாகனத்தின் முன்பக்கத்திலிருந்து கரும்புகை வந்தது.

இதனைக்கண்ட ஓட்டுநர் வீராசாமி சுதாரித்துக்கொண்டு வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி உடனடியாக வேனிலிருந்து கீழே இறங்கினார். இதனிடையே தீ வேனின் முன்பக்கத்தில் மளமளவென எரியத் தொடங்கியது.

சமையல் எண்ணெய் ஏற்றிவந்த வண்டியில் தீ!

இது குறித்து தகவலறிந்து ஆவடி, பூந்தமல்லியிலிருந்து தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்துப் புலனாய்வுத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...அயன் பட பாணியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்: வெளிநாட்டவர் ஒருவர் கைது!

Intro:ஆவடி அருகே சமையல் எண்ணெய் ஏற்றி வந்த மினி சரக்கு வண்டியில் தீ - வண்டி முழுவதும் எரிந்து நாசமாயினBody:ஆவடி அருகே சமையல் எண்ணெய் ஏற்றி வந்த மினி சரக்கு வண்டியில் தீ - வண்டி முழுவதும் எரிந்து நாசமாயின.


சென்னை பூந்தமல்லியில் இருந்து நெமிலிச்சேரி நோக்கி சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு மினி சரக்கு வண்டி சென்றுகொண்டிருந்தது.அப்போது நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் வந்தபோது ஓடும் வண்டியின் முன்பக்கத்தில் இருந்து கருப்பு புகை வந்தது.இதனைக்கண்ட ஓட்டுனர் வீராசாமி சுதாரித்துக்கொண்டு வண்டியை சாலை ஓரமாக நிறுத்தி உடனடியாக வேனில் இருந்து கீழே இறங்கினார். இதனனிடையே தீ வேன் முன்பக்கத்தில் எரியத் துவங்கியது .ஓட்டுனர் வீராசாமி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.மேலும் அங்கு நிகழ்விடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து காவல்துறையினர் தீயை
தியணைப்பான் கொண்டு அணைகும் முயற்சியை மேற்கொண்டும் தீயை அணைக்க முடியவில்லை.இதுகுறித்து தகவலறிந்து ஆவடி மற்றும் பூந்தமல்லியில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.இருந்த போதிலும் வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் வாகனம் ஒன்று நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.