ETV Bharat / state

நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்

சென்னை: குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்த மனைவியை நீதிமன்றத்தில் வைத்து கணவன் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

author img

By

Published : Mar 19, 2019, 5:31 PM IST

Updated : Mar 20, 2019, 4:32 PM IST

சரவணன்

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன் - வரலட்சுமி தம்பதி. இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் விவாகரத்து பெற முடிவு செய்து கடந்த 2012ம் ஆண்டு விவகாரத்து வேண்டி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இன்று விவகாரத்து வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து இருவரும் ஆஜராக நீதிமன்றம் வந்தனர். நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த தம்பதி இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி வரலட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


பின்னர் தப்பி செல்ல முயன்ற சரவணனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் வைத்து இளம் பெண் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர்கள் சரவணன் - வரலட்சுமி தம்பதி. இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் விவாகரத்து பெற முடிவு செய்து கடந்த 2012ம் ஆண்டு விவகாரத்து வேண்டி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இன்று விவகாரத்து வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து இருவரும் ஆஜராக நீதிமன்றம் வந்தனர். நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த தம்பதி இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி வரலட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


பின்னர் தப்பி செல்ல முயன்ற சரவணனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் வைத்து இளம் பெண் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த மனைவியை நீதிமன்றத்தில் கணவன் கத்தியால் குத்தி தாக்குதல்.

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சரவணன் (46) மனைவி வரலட்சுமி (40).இவர்கள் குடும்ப  தகராறு காரணமாக கடந்த 2012 ஆம் ஆண்டு விவகாரத்து வேண்டி  குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்நிலையில் இன்று விவகாரத்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இருவரும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். பின்னர் இவ்விருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது பின்னர் சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மனைவி வரலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார்..பின்னர் வரலட்சுமியை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் சரவணணை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..

Last Updated : Mar 20, 2019, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.