ETV Bharat / state

ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டம்: ஸ்டாலின் தொடங்கிவைப்பு

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையில் அறிவிக்கப்பட்ட ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

author img

By

Published : Dec 7, 2021, 6:53 AM IST

ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டம்
ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டம்

சென்னை: மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டத்தின்கீழ் 225 ரூபாய் மானிய விலையில் மாடித் தோட்டத் தளைகளையும், ஊரகப் பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக 15 ரூபாய்க்கு 12 வகை காய்கறி விதைத்தளைகளையும், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த ஊட்டச் சத்துத்தளைகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 25 ரூபாய்க்கு 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்துத் தளைகளையும் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கிவைத்தார்.

வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தாக்கல்செய்யப்பட்டது. நகர்ப்புறங்களில் ஆறு வகை காய்கறி விதைகள் கொண்ட ஒரு லட்சம் மாடித் தோட்டத்தளைகள் மானியத்தில் வழங்கப்படும். நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கும் திட்டத்தின்கீழ், எட்டு வகை செடிகள் கொண்ட இரண்டு லட்சம் ஊட்டச்சத்து தளைகள் மானியத்தில் வழங்கப்படும்.

காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை, இடுபொருள்கள், காய்கறி குறைவாக சாகுபடி செய்யக்கூடிய இரண்டாயிரம் கிராமங்களில் 1250 ஹெக்டேர் பரப்பளவில் மண்வளத்தை மேம்படுத்த இடுபொருள்கள், 638 ஹெக்டேர் பரப்பளவில் பந்தல் அமைப்பதற்கான மானியம், 1000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடிக்கான மானியம் உள்ளிட்ட 95 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் செயல்படுத்த அறிவிக்கப்பட்டன.

ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டம்

அந்த அறிவிப்பிற்கிணங்க, முதலமைச்சரின் ஊட்டம்தரும் காய்கறித் தோட்டத் திட்டத்தின்கீழ், ஆறு கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில், நகரப் பகுதிகளில் 900 ரூபாய் மதிப்புடைய ஆறு வகையான காய்கறி விதைகள், ஆறு எண்ணிக்கையிலான செடி வளர்க்கும் பைகள், ஆறு எண்ணிக்கையிலான இரண்டு கிலோ அளவிலான தென்னை நார்கட்டிகள், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணி, 100 மி.லி. இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து, சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஆகியவை அடங்கிய மாடித்தோட்டத் தளைகள் ரூ.225 என்ற மானிய விலையில் ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார். இத்திட்டத்தின்கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு மாடித் தோட்டத்தளைகள் வரை வழங்கப்படும்.

அதேபோன்று, ஊரகப்பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக, 90 லட்சம் ரூபாய் செலவில் 15 ரூபாய்க்கு கத்திரிக்காய், மிளகாய், வெண்டைக்காய், தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை, பாகல், சுரைக்காய், கொத்தவரை, சாம்பல்பூசணி, கீரைகள் ஆகிய 12 வகை காய்கறி விதைத்தளைகளை ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார். இக்காய்கறி விதைத்தளையினை இரண்டு தொகுப்புகள் வரை ஒருவர் பெற்றுக்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கும் திட்டத்தின்கீழ், மூலிகைச் செடிகள், நோய் எதிர்ப்புச் சக்தியுடைய பழங்கள், காய்கறிகளை வளர்த்து பயன்பெற, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், 25 ரூபாய்க்கு பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா, சோற்றுகற்றாழை ஆகிய 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகளை ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு தொகுப்பு வழங்கப்படும்.

இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் <https://tnhorticulture.tn.gov.in/kit/>என்ற இணையதள வாயிலாக விண்ணப்பித்து, சத்தான காய்கறிகள், பழங்கள், நோய் எதிர்ப்பு மூலிகைகள் உட்கொள்ளும் வாய்ப்பினையும், ஊக்கம்தரும் பொழுதுபோக்கினையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்

சென்னை: மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டத்தின்கீழ் 225 ரூபாய் மானிய விலையில் மாடித் தோட்டத் தளைகளையும், ஊரகப் பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக 15 ரூபாய்க்கு 12 வகை காய்கறி விதைத்தளைகளையும், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த ஊட்டச் சத்துத்தளைகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 25 ரூபாய்க்கு 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்துத் தளைகளையும் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கிவைத்தார்.

வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தாக்கல்செய்யப்பட்டது. நகர்ப்புறங்களில் ஆறு வகை காய்கறி விதைகள் கொண்ட ஒரு லட்சம் மாடித் தோட்டத்தளைகள் மானியத்தில் வழங்கப்படும். நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கும் திட்டத்தின்கீழ், எட்டு வகை செடிகள் கொண்ட இரண்டு லட்சம் ஊட்டச்சத்து தளைகள் மானியத்தில் வழங்கப்படும்.

காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை, இடுபொருள்கள், காய்கறி குறைவாக சாகுபடி செய்யக்கூடிய இரண்டாயிரம் கிராமங்களில் 1250 ஹெக்டேர் பரப்பளவில் மண்வளத்தை மேம்படுத்த இடுபொருள்கள், 638 ஹெக்டேர் பரப்பளவில் பந்தல் அமைப்பதற்கான மானியம், 1000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடிக்கான மானியம் உள்ளிட்ட 95 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் செயல்படுத்த அறிவிக்கப்பட்டன.

ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத் திட்டம்

அந்த அறிவிப்பிற்கிணங்க, முதலமைச்சரின் ஊட்டம்தரும் காய்கறித் தோட்டத் திட்டத்தின்கீழ், ஆறு கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில், நகரப் பகுதிகளில் 900 ரூபாய் மதிப்புடைய ஆறு வகையான காய்கறி விதைகள், ஆறு எண்ணிக்கையிலான செடி வளர்க்கும் பைகள், ஆறு எண்ணிக்கையிலான இரண்டு கிலோ அளவிலான தென்னை நார்கட்டிகள், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணி, 100 மி.லி. இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து, சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஆகியவை அடங்கிய மாடித்தோட்டத் தளைகள் ரூ.225 என்ற மானிய விலையில் ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார். இத்திட்டத்தின்கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு மாடித் தோட்டத்தளைகள் வரை வழங்கப்படும்.

அதேபோன்று, ஊரகப்பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக, 90 லட்சம் ரூபாய் செலவில் 15 ரூபாய்க்கு கத்திரிக்காய், மிளகாய், வெண்டைக்காய், தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை, பாகல், சுரைக்காய், கொத்தவரை, சாம்பல்பூசணி, கீரைகள் ஆகிய 12 வகை காய்கறி விதைத்தளைகளை ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார். இக்காய்கறி விதைத்தளையினை இரண்டு தொகுப்புகள் வரை ஒருவர் பெற்றுக்கொள்ளலாம்.

நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கும் திட்டத்தின்கீழ், மூலிகைச் செடிகள், நோய் எதிர்ப்புச் சக்தியுடைய பழங்கள், காய்கறிகளை வளர்த்து பயன்பெற, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், 25 ரூபாய்க்கு பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா, சோற்றுகற்றாழை ஆகிய 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகளை ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக ஒரு தொகுப்பு வழங்கப்படும்.

இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் <https://tnhorticulture.tn.gov.in/kit/>என்ற இணையதள வாயிலாக விண்ணப்பித்து, சத்தான காய்கறிகள், பழங்கள், நோய் எதிர்ப்பு மூலிகைகள் உட்கொள்ளும் வாய்ப்பினையும், ஊக்கம்தரும் பொழுதுபோக்கினையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.