தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 40 அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், 35 ஊராட்சி ஒன்றிய நகராட்சி மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், "2020, 21ஆம் கல்வி ஆண்டில் 40 அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.
அரியலூர் மாவட்டம் பரணம், அழகாபுரம், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம், திண்டுக்கல் மாவட்டம் அத்திப்பட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜி. அரியூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி, சேலம் மாவட்டம் சின்ன பிள்ளையூர், எம்.என்.பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிகள், திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம், பாதிர்வேடுமாதர்பாக்கம், திருமுல்லைவாயல், செங்காட்டானூர்.
கோயம்புத்தூர் மாவட்டம் மணியகாரம்பாளையம், கடலூர் மாவட்டம் பாலூர், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், திருவண்ணாமலை மாவட்டம் வடமணப்பாக்கம், கீழ்பாலூர், நடுக்குப்பம், கோயம்புத்தூர் மாவட்டம் தீத்திபாளையம், கவுண்டம்பாளையம், ஜெ. கிருஷ்ணாபுரம், தர்மபுரி மாவட்டம் ஊட்டமலை, பெல்லுஅள்ளி, ஈரோடு மாவட்டம் ஓசூர், கோட்டமாளம், ஓடத்துறை, நஞ்சப்பகவுண்டன்வலசு, கரூர் மாவட்டம் சின்னசேங்கல், மதுரை மாவட்டம் வாகைக்குளம், சிவகங்கை மாவட்டம் சக்கந்தி, திருச்சி மாவட்டம் வடக்கு சித்தாம்பூர், திருப்பத்தூர் மாவட்டம் மலை ரெட்டியூர், நீலகிரி மாவட்டம் மசினக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் நல்லூர், ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பட்டு, வேலூர் மாவட்டம் பனமடங்கி ஆகிய ஊர்களில் செயல்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் 35 ஊராட்சி ஒன்றிய நகராட்சி மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளை அரசு உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மலை பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம் அங்கலக்குறிச்சி, குனியமுத்தூர், ஆர் கோபாலபுரம், ஈரோடு மாவட்டம் குருப்பநாயக்கன் பாளையம், பெரிய வலசு, கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர், அதையூர், கரூர் மாவட்டம் கள்ளை, மதுரை மாவட்டம் சந்தையூர், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான் குப்பம், நாமக்கல் மாவட்டம் ஆலத்தூர் நாடு, சின்ன முதலைப்பட்டி, திருச்செங்கோடு நெசவாளர் காலனி, புதுக்கோட்டை மாவட்டம் கீழபளு வஞ்சி, ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம், சேலம் மாவட்டம் செக்கானூர் நவப்பட்டி, மூலக்காடு, தென்காசி மாவட்டம் காசிநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டம் செந்தலைவயல், திருச்சி மாவட்டம் கருத்த கோடங்கிபட்டி, திருநெல்வேலி மாவட்டம் செண்பகராமநல்லூர், திருவண்ணாமலை மாவட்டம் அனந்தபுரம் (சைதை), திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஜமிலா பாத், திருப்பூர் மாவட்டம் பெரியபட்டி, அம்மாபட்டி, பெரிச்சிபாளையம், மங்கலம், தூத்துக்குடி மாவட்டம் இளம்புவனம், விழுப்புரம் மாவட்டம் கடையம், சு.பில்ராம் பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் கொடகரை, டி.பேலாளம் ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன" என அதில் தெரிவித்துள்ளார். இந்தப் பள்ளிகளுக்கு அரசு விதிகளின்படி ஆசிரியர்கள் நியமனம் செய்யவும் நிதி ஒதுக்கியும் அனுமதி வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க... 'பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்' - அமைச்சர் விஜயபாஸ்கர்