ETV Bharat / state

விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ. 37.17 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

author img

By

Published : Feb 24, 2021, 6:39 PM IST

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 37 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

விமானம் மூலம் ரூ.37.17 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்
விமானம் மூலம் ரூ.37.17 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்

துபாயிலிருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் இன்று (பிப்.24) காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்போது, சிவகங்கையைச் சோ்ந்த ஹைதா்அலி (23) என்ற பயணி மீது அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். சோதனையில், அவருடைய உள்ளாடைக்குள் மூன்று சிறிய பார்சல்கள் மறைத்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

பின்னர், அந்த பார்சல்களை பிரித்துப் பார்த்தபோது, அதனுள் 773 கிராம் எடைகொண்ட 37 லட்சத்து 17ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பயணியை கைது செய்த சுங்கத் துறை அலுவலர்கள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு 3 கிலோ தங்க காணிக்கை கொடுத்த தேனி பக்தர்!

துபாயிலிருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் இன்று (பிப்.24) காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்போது, சிவகங்கையைச் சோ்ந்த ஹைதா்அலி (23) என்ற பயணி மீது அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். சோதனையில், அவருடைய உள்ளாடைக்குள் மூன்று சிறிய பார்சல்கள் மறைத்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

பின்னர், அந்த பார்சல்களை பிரித்துப் பார்த்தபோது, அதனுள் 773 கிராம் எடைகொண்ட 37 லட்சத்து 17ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பயணியை கைது செய்த சுங்கத் துறை அலுவலர்கள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு 3 கிலோ தங்க காணிக்கை கொடுத்த தேனி பக்தர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.