ETV Bharat / state

லாட்ஜில் ஐந்து கிலோ மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

author img

By

Published : Aug 28, 2019, 11:05 PM IST

சென்னை: தனியார் விடுதி ஒன்றில் தீவிரவாத தடுப்புக் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், ஐந்து கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

gold recovery in chennai

தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என எழுந்த செய்தியையடுத்து சென்னை முழுவதும் தீவிரவாத தடுப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தனியார் விடுதிகளில் அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை வால்டாக்ஸ் பகுதியில் பீமாஸ் லாட்ஜில் தீவிரவாத தடுப்புக் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, உரிய ஆவணமின்றி வைத்திருந்த ஐந்து கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், இந்த நகைகள் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜான்சன் (35) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், இந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லையென்றும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலர்களிடம் தீவிரவாத தடுப்புக் குழுவினர் தகவல் தெரிவித்தனர். தற்போது, அவர்கள் ஜான்சனிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என எழுந்த செய்தியையடுத்து சென்னை முழுவதும் தீவிரவாத தடுப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தனியார் விடுதிகளில் அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை வால்டாக்ஸ் பகுதியில் பீமாஸ் லாட்ஜில் தீவிரவாத தடுப்புக் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, உரிய ஆவணமின்றி வைத்திருந்த ஐந்து கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், இந்த நகைகள் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜான்சன் (35) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், இந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லையென்றும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலர்களிடம் தீவிரவாத தடுப்புக் குழுவினர் தகவல் தெரிவித்தனர். தற்போது, அவர்கள் ஜான்சனிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றனர்.

Intro:Body:பூக்கடை லாட்ஜில் 5கிலோ மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை முழுவதும் போலிசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தனியார் லாட்ஜில் தினமும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை வால்டாக்ஸ் பகுதியில் பீமாஸ் லாட்ஜில் தீவிரவாத தடுப்பு குழுவினர் சோதனை மேற்கொண்ட போது உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த 5கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.. பின்னர் முதற்கட்ட விசாரணையில் கேரள பகுதி திருச்சூரை சேர்ந்த ஜான்சன் (35) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வருமான வரி துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.