ETV Bharat / state

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை!

author img

By

Published : Aug 3, 2020, 12:11 PM IST

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பால் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள். இவரது மகள் திவ்யபாரதி (28). இவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேட்டு என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தையும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சேட்டு, திவ்யபாரதியிடம் அடிக்கடி பணம், நகை கேட்டு தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் சேட்டுக்கு பல பெண்களுடன் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.3) தனது கணவர் வீட்டில் திவ்யபாரதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கேஎம்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் திவ்யபாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே திவ்யபாரதியின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நாணயத்தை விழுங்கிய சிறுவன்... கரோனா அச்சத்தால் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மறுத்ததால் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பால் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள். இவரது மகள் திவ்யபாரதி (28). இவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேட்டு என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தையும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சேட்டு, திவ்யபாரதியிடம் அடிக்கடி பணம், நகை கேட்டு தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் சேட்டுக்கு பல பெண்களுடன் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில் இன்று(ஆக.3) தனது கணவர் வீட்டில் திவ்யபாரதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கேஎம்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் திவ்யபாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே திவ்யபாரதியின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நாணயத்தை விழுங்கிய சிறுவன்... கரோனா அச்சத்தால் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மறுத்ததால் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.