ETV Bharat / state

சென்னையில் சங்கிலித் தொடர் போல் கஞ்சா விற்பனை - மூன்று பேர் கைது

author img

By

Published : Dec 17, 2019, 1:37 PM IST

Updated : Dec 17, 2019, 2:21 PM IST

சென்னை: பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா மற்றும் ஏழு கத்திகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Chennai
Ganja seller arrest

சென்னை பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியிலிருந்து பல இடங்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்த வீர மருது (வயது 28) என்பவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்தனர். அப்போது பெரும்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் உள்ள சுபாஷ் (27) மற்றும் சந்தோஷ் (27) ஆகியோர் கஞ்சா விற்பதாகக் கூறிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விரைந்து இருவரையும் கைது செய்தனர்.

சென்னை
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கத்தி

பின்னர் அவர்கள் வைத்திருந்த 1.8 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 7 கத்திகளை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான இருவர் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் வசிக்கும் பார்வதியை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 11 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கண்ணகி நகரைச் சேர்ந்த செங்கா என்பவர் தான், இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாக கூறியுள்ளனர். இதனால் செம்மேஞ்சேரி காவல் துறையினர் அந்த நபரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: 40 வருடங்களுக்கு பின் நிரம்பிய தெப்பக்குளம்.... ஆனந்தமும் ஆதங்கமும்

சென்னை பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியிலிருந்து பல இடங்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்த வீர மருது (வயது 28) என்பவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்தனர். அப்போது பெரும்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் உள்ள சுபாஷ் (27) மற்றும் சந்தோஷ் (27) ஆகியோர் கஞ்சா விற்பதாகக் கூறிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விரைந்து இருவரையும் கைது செய்தனர்.

சென்னை
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கத்தி

பின்னர் அவர்கள் வைத்திருந்த 1.8 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 7 கத்திகளை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான இருவர் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் வசிக்கும் பார்வதியை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 11 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கண்ணகி நகரைச் சேர்ந்த செங்கா என்பவர் தான், இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாக கூறியுள்ளனர். இதனால் செம்மேஞ்சேரி காவல் துறையினர் அந்த நபரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: 40 வருடங்களுக்கு பின் நிரம்பிய தெப்பக்குளம்.... ஆனந்தமும் ஆதங்கமும்

Intro:Body:பெரும்பாக்காத்தில் கஞ்சா விற்ற 3பேர் கைது.12 கிலோ கஞ்சா மற்றும் ஏழு கத்திகள் போலிசார் பறிமுதல்.

சென்னை பெரும்பாக்கம் 8அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலிருந்து பல இடங்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் அடிப்படையில் போலிசார் தனிப்படை அமைத்து தேடி வநதனர்.இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்த வீரமருது(28) என்பவரை பிடித்து போலிசார் விசாரணை செய்தனர்.அப்போது பெரும்பாக்கத்தில் உள்ள 8அடுக்கு குடியிருப்பு பகுதியில் உள்ள சுபாஷ்( 27)மற்றும் சந்தோஷ்(27) ஆகியோர் கஞ்சா விற்பதாக கூறிய தகவலின் அடிப்படையில் போலிசார் விரைந்து இருவரையும் கைது செய்தனர்.பின்னர் அவர்கள் வைத்திருந்த 1கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும் 7 கத்திகளை பறிமுதல் செய்தனர்.மேலும் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் வசிக்கும் பார்வதியை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 11கிலோ 100கிராம் கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கண்ணகி நகரை சேர்ந்த செங்கா என்பவர் தான் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாக கூறியுள்ளனர். இதனால் செம்மேஞ்சேரி போலிசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.Conclusion:
Last Updated : Dec 17, 2019, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.