ETV Bharat / state

விடுதலை போராட்ட வீரர் தகைசால் தமிழர் என்.சங்கரய்யா நலமுடன் உள்ளார்: மருத்துவமனை விளக்கம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 5:59 PM IST

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் சங்கரய்யாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்புவர் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

freedom fighter N Sankaraiah admitted to the hospital due to ill health now he is fine It has been reported
தியாகி என்.சங்கரய்யா நலமுடன் உள்ளார்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர், என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாகவும், உடலில் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதாலும் அவர் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சளி மற்றும் உடலில் ஆக்சிஜன் குறைவு காரணமாக தான் அவருக்கு உடல்நிலை பாதிக்கபட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த தோழர் சங்கரய்யாவின் உடல்நலத்தில் சற்று முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நேற்றைய தினமே சங்கரய்யாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்னண் மற்றும் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்னண் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

மேலும், அவர் முழுமையாக உடல் நலம் தேறி, மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளையும் மருத்துவர்கள் எடுத்து வருவதால் அவரை யாரும் நேரில் வந்து சந்திக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் கட்சியினுடைய மாநில குழு சார்பாக தெரிவிக்கபட்டிருந்தது.

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து கொள்வார் எனவும், மற்றுமொருமுறை உடல் பரிசோதனை செய்து, இன்னும் சில தினங்களில் சங்கரய்யா வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: மழை விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர், என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாகவும், உடலில் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதாலும் அவர் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சளி மற்றும் உடலில் ஆக்சிஜன் குறைவு காரணமாக தான் அவருக்கு உடல்நிலை பாதிக்கபட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த தோழர் சங்கரய்யாவின் உடல்நலத்தில் சற்று முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நேற்றைய தினமே சங்கரய்யாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்னண் மற்றும் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்னண் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

மேலும், அவர் முழுமையாக உடல் நலம் தேறி, மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளையும் மருத்துவர்கள் எடுத்து வருவதால் அவரை யாரும் நேரில் வந்து சந்திக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் கட்சியினுடைய மாநில குழு சார்பாக தெரிவிக்கபட்டிருந்தது.

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து கொள்வார் எனவும், மற்றுமொருமுறை உடல் பரிசோதனை செய்து, இன்னும் சில தினங்களில் சங்கரய்யா வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: மழை விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.