ETV Bharat / state

குழந்தைகளுக்கு இலவச நியூமோகாக்கல் தடுப்பூசி போடும் திட்டம்: சென்னையில் நாளை  தொடக்கம்

நிமோனியா காய்ச்சலைத் தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு 'நியூமோகாக்கல்' தடுப்பூசி சென்னையில் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் போடப்படுகிறது. இந்தத் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார்.

author img

By

Published : Jul 23, 2021, 9:54 PM IST

இலவச நியூமோகாக்கல் தடுப்பூசி போடும் திட்டம்
இலவச நியூமோகாக்கல் தடுப்பூசி போடும் திட்டம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு, பிசிஜி - காசநோய், ஹெபாடைடிஸ் பி - கல்லீரல், புற்றுநோய், ஓபிவி – இளம்பிள்ளை வாதம், இன்ப்ளூயன்ஸா தொற்று, கல்லீரல் தொற்று போன்றவற்றுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

அதேபோல், ரோட்டா - வயிற்றுப்போக்கு, எம்.ஆர் – தட்டம்மை, ரூபெல்லா நோய், மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்கும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இருப்பினும் நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் 'நியூமோகாக்கல்' தடுப்பூசி, அரசு மருத்துவமனைகளில் போடப்படாமல் இருந்தது.

ஆனால், தனியார் மருத்துவமனைகளில் இந்த ஊசிக்கு ஒரு தவணைக்கு ரூ. 4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

நாளை முதல் சென்னையில்...

இந்ந நிலையில் 'நியூமோகாக்கல்' தடுப்பூசியை அரசு மருத்துவமனையில் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த வாரம் தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதற்கிடையே இன்று (ஜூலை. 23) சென்னையில் தன்னார்வலர்கள் மூலம் கரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மா. சுப்பிரமணியன், "சென்னையில் நாளை முதல் நிமோனியா காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் போடப்படும்" எனத் தெரிவித்தார்.

பிறந்த குழந்தைகளுக்கு ஒன்றரை மாதம், மூன்றரை மாதம், ஒன்பது மாதம் என மூன்று தவணைகளாக தடுப்பூசி போடப்படும்.

அதன்படி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு 'நியூமோகாக்கல்' தடுப்பூசியை இலவசமாகப் போடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவை மாநகராட்சியின் ஆணையர் அதிரடி உத்தரவு: தூய்மைப் பணியாளர்கள் வரவேற்பு!

சென்னை: அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு, பிசிஜி - காசநோய், ஹெபாடைடிஸ் பி - கல்லீரல், புற்றுநோய், ஓபிவி – இளம்பிள்ளை வாதம், இன்ப்ளூயன்ஸா தொற்று, கல்லீரல் தொற்று போன்றவற்றுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

அதேபோல், ரோட்டா - வயிற்றுப்போக்கு, எம்.ஆர் – தட்டம்மை, ரூபெல்லா நோய், மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்கும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இருப்பினும் நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் 'நியூமோகாக்கல்' தடுப்பூசி, அரசு மருத்துவமனைகளில் போடப்படாமல் இருந்தது.

ஆனால், தனியார் மருத்துவமனைகளில் இந்த ஊசிக்கு ஒரு தவணைக்கு ரூ. 4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

நாளை முதல் சென்னையில்...

இந்ந நிலையில் 'நியூமோகாக்கல்' தடுப்பூசியை அரசு மருத்துவமனையில் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த வாரம் தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதற்கிடையே இன்று (ஜூலை. 23) சென்னையில் தன்னார்வலர்கள் மூலம் கரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மா. சுப்பிரமணியன், "சென்னையில் நாளை முதல் நிமோனியா காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் போடப்படும்" எனத் தெரிவித்தார்.

பிறந்த குழந்தைகளுக்கு ஒன்றரை மாதம், மூன்றரை மாதம், ஒன்பது மாதம் என மூன்று தவணைகளாக தடுப்பூசி போடப்படும்.

அதன்படி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு 'நியூமோகாக்கல்' தடுப்பூசியை இலவசமாகப் போடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவை மாநகராட்சியின் ஆணையர் அதிரடி உத்தரவு: தூய்மைப் பணியாளர்கள் வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.