ETV Bharat / state

எழும்பூர் ரயில்நிலையத்தில் 44கிலோ கஞ்சா பறிமுதல் - பெண்கள் உட்பட 4பேர் கைது - போதை பொருள் தடுப்பு பிரிவினர்

சென்னை : விசாகப்பட்டினத்திலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு 44கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

44kg-cannabis-egmore
author img

By

Published : Sep 9, 2019, 10:57 AM IST

நேற்றிரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் குற்ற நுண்ணறிவு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, விசாகப்பட்டினத்திலிருந்து வந்த ரயிலில் பயணம் செய்த, தேனி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் என்பவரின் உடைமைகளை சோதனையிடும் போது 44கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது.

பின்னர், அவரை பிடித்து விசாரிக்கையில் அவருடன் ரயிலில் பயணித்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமா சலீம்(66), சசிகலா(38) பாண்டீஸ்வரி(35) ஆகிய மூன்று பேரும் கணேசனுக்கு கடத்தலில் உதவியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், அவர்கள் நான்கு பேர் மீதும் போதைப்பொருள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றிரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் குற்ற நுண்ணறிவு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, விசாகப்பட்டினத்திலிருந்து வந்த ரயிலில் பயணம் செய்த, தேனி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் என்பவரின் உடைமைகளை சோதனையிடும் போது 44கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது.

பின்னர், அவரை பிடித்து விசாரிக்கையில் அவருடன் ரயிலில் பயணித்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமா சலீம்(66), சசிகலா(38) பாண்டீஸ்வரி(35) ஆகிய மூன்று பேரும் கணேசனுக்கு கடத்தலில் உதவியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், அவர்கள் நான்கு பேர் மீதும் போதைப்பொருள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body:*கஞ்சா விற்பனையில் இடைத்தரகராக செயல்பட்ட 3 பெண்கள் உட்பட 4 பேர் எழும்பூர் ரயில் நிலையத்தில் கைது.*

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு பைசாவிலிருந்து வந்த ரயிலில் தேனி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் என்பவர் பயணம் செய்தார். அப்பொழுது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் குற்றப் நுண்ணறிவு பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வந்தனர். அந்த சோதனையில் சந்தேகத்திற்கு இடமாக கணேசன் முன்னுக்கு முரணாக பதில் அளித்துள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் கணேசனின் உடமைகளை சோதனை செய்தபோது அவர் கொண்டுவந்த பையில் 22 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட 44 கிலோ எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கணேசனுடன் அதே ரயிலில் பயணம் செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமா சலீம் (66), சசிகலா (38) பாண்டீஸ்வரி (35) ஆகிய 3 பேரும் கணேசனுக்கு உதவியது தெரியவந்தது.

இது தொடர்பாக குற்றப் பிரிவு போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் 4 பேரும் வைசாவிலிருந்து 44 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தேனிக்கு செல்லக்கூடிய பேருந்து வழியாக கடத்த முயற்சி திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தேனிக்கு கொண்டுவந்த கஞ்சா பொட்டலங்களை சில்லறை வணிக முறையில் வாடிக்கையாளர்களுக்கு பிடித்து விற்பனை செய்யவும் திட்டமிட்டு இருந்ததாக குற்றம் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதில் கணேசன் என்பவர் மீது ஆந்திரா மாநிலம் மற்றும் தேனி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.